search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு
    X

    மீட்கப்பட்ட கோவில் நிலங்களில் அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

    அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு

    • 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
    • மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.

    கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    அதன்படி மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வி.ஏ.ஓ சங்கீதா முன்னிலையில் கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கனக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீட்கப்பட்ட இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

    Next Story
    ×