search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kushboo"

    • எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல.
    • ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை பொதுமேடையில் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியபோது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பொங்கவில்லையே ஏன்?

    சென்னை:

    போராட்டம் முடிந்து காங்கிரசார் சென்றதும் குஷ்பு வீட்டில் இருந்து வெளியே வந்து அங்கிருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    என் வீட்டு வாசலில் வந்து போராட்டம் நடத்தினால் இரண்டு நாட்கள் விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்து போராடி இருக்கிறார்கள். இப்படியாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு விளம்பரம் கிடைக்கிறதே வாழ்த்துக்கள்.

    நான் 1986-ல் தமிழ்நாட்டுக்கு வந்தேன். இந்த மண் என் சொந்த மண். மானமுள்ள, வீரமுள்ள தமிழச்சியாக தைரியமாக வாழ்ந்து வருகிறேன். என் கருத்தில் நான் பின் வாங்க மாட்டேன். நான் தவறாக எந்த கருத்தும் சொல்லவில்லை. சேரி என்பதற்கு என்ன அர்த்தம். முதலில் அதை சொல்லணும்.

    எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல. எல்லோரிடமும் சரி சமமாக பழகுவேன். எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவள்.

    ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை பொதுமேடையில் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியபோது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பொங்கவில்லையே ஏன்?

    தலித்துகளுக்கு ஆதரவு என்கிறார்கள். நேற்று கோவையில் இரும்பு கம்பியால் தலித்துகளை தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் சென்று ஏன் போராடவில்லை. விளம்பரம் கிடைக்காது என்ற தயக்கமா? என்னை பொறுத்தவரை தவறு செய்தால் குழந்தையிடம் கூட மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யாவிட்டால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அப்படி எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
    • குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

    ஆனால் 'சேரி' என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள்நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்துவிட்டார்.

    ஆனால் காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அந்த ரோட்டில் யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் காங்கிரசார் திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.

    மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் கூறியதாவது:-

    இது எங்களின் முதற்கட்ட போராட்டம்தான். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி. துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன்பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அணுகுண்டு ஆறுமுகம், செயலாளர் விஜயசேகர், மாவட்ட தலைவர் துரை, உமாபாலன், நிலவன், வை.பிரபா, மீரா, சரளா, மஞ்சுளா, திரேசா, மாலதி, ராஜலட்சுமி, சுமதி, ரஞ்சித்கு மார், சரத்குமார், இந்துமதி, ராஜவிக்ரமன், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை காலை திட்டமிட்டபடி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம்.
    • குஷ்பு மீது வழக்கு தொடருவது பற்றி இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சேரிமொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஆனால் குஷ்பு, தான் தவறாக எதுவும் பேசவில்லை சேரி என்பது தவறான வார்த்தை அல்ல என்று விளக்கம் அளித்தார்.

    ஆனால் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. குஷ்பு வீட்டை இன்று முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாளை (28-ந்தேதி) முற்றுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் கூறியதாவது:-

    இன்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா ஆகிய 2 பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தான் எங்கள் போராட்டத்தை தள்ளிவைத்து உள்ளோம்.

    நாளை காலை திட்டமிட்டபடி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம். 500க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதி பெண்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சேரி என்பது இழிவானது அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறோம். அந்த வார்த்தையை எதற்காக பயன்படுத்தினார் என்பது தான் முக்கியம். தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ஆணவமாக கூறி இருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.

    தவறான கருத்துக்களை சொல்லி மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு என்பதை அவர் மறக்கக்கூடாது. அதே போல் சேரியை விமர்சித்து கோர்ட்டில் மன்னிப்பு கேட்டவர்களும் உண்டு. எனவே நாங்கள் இதை சும்மா விடப்போதில்லை.

    குஷ்பு மீது வழக்கு தொடருவது பற்றியும் இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம். எனவே அவர் மீது விரைவில் வழக்கும் தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை.
    • நான் இதுவரை தரம்குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள்?

    என்னுடைய டுவீட்டில் தெளிவாகவே நான் கூறியுள்ளேன். சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

    புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்? வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன?

    அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது

    திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • வார்த்தைகளை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?
    • குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர வெளிச்சம் தேடலாம் என்று எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள்.

    சென்னை:

    நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வார்த்தைகள் சர்ச்சையானது. இதற்கிடையில் எக்ஸ் தளத்தில் ஒருவர் குஷ்புவை டேக் செய்து விமர்சித்து இருந்தார்.

    அதற்கு பதில் அளித்து குஷ்பு வெளியிட்ட பதிவில் உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அவர் சேரி மொழி என்று குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் கையில் எடுத்து காங்கிரஸ் எஸ்.சி. துறை அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு ஆவேசமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    இந்த மாதிரி போராட்ட பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவள் நான் அல்ல. தைரியம் தான் என் பெயர் என்று பலமுறை கூறி இருக்கிறேன்.

    சேரி மொழி என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக் கொண்டு எனக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்களே முதலில் சேரி என்றால் என்ன என்பதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கட்டும். அரசின் பதிவுகளில் கூட சேரி என்ற வார்த்தை இருக்கிறதே?.

    வேளச்சேரி, நெமிலிச்சேரி, கூடுவாஞ்சேரி எத்தனையோ ஊர்களின் பெயர்களில் சேரி இருக்கிறதே அதை என்ன சொல்வீர்கள்? அங்கு வசிப்பவர்கள் எல்லோருடனும் சரி சமமாக வாழ தகுதியற்றவர்களா?

    வார்த்தைகளை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?

    ஒரு பெண்ணான என்னை மேடையிலேயே எவ்வளவு கேவலமாக தி.மு.க.வினர் பேசினார்கள். அப்போது தி.மு.க.வுக்கு எதிராக பேசினீர்களா? அவர்கள் வீட்டு வாசலில் சென்று போராடினீர்களா?



     நீட் தேர்வால் மாணவி அனிதா இறந்த போது குஷ்பு எங்கே போனார்? என்று கேட்கும் உண்மையான காங்கிரஸ்காரர்களே அது நடந்தது 2017-ல் நானும் அப்போது உண்மை தெரியாமல் உங்களோடு காங்கிரசில் தான் இருந்தேன். இது கூடவா மறந்து போச்சு?

    இன்னும் தி.மு.க.வோடு சேர்ந்து நீட்... நீட் என்று நீட்டி முழங்குகிறீர்களே, நீட்டை ஒழிக்க முடியாது என்று நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டு வாசலில் நின்று உரக்க சொன்னாரே அப்போது ப.சிதம்பரத்தை எதிர்த்து போராடினீர்களா? உருவ பொம்மையை எரித்தீர்களா? தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்றாவது பேசினீர்களா?

    தேர்தலில் வெற்றி பெற்றும் தலித் பஞ்சாயத்து தலைவர் இன்னும் பதவிப் பிரமாணம் கூட செய்ய முடியாமல் இருக்கிறாரே அதற்காக என்ன செய்தீர்கள்?

    புதுக்கோட்டையில் தலித்துகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தார்களே இதுவரை அதற்கு என்ன செய்தீர்கள்?

    நாங்குனேரியில் தலித் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்படுகிறதே அதை எதிர்த்து காங்கிரஸ் போராடியதா? அல்லது தடுப்பதற்கு தி.மு.க. ஏதாவது செய்ததா? வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறது?

    விளை நிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் இறந்து போன தனது குழந்தையின் 16-வது நாள் காரியத்தை முடிக்க வேண்டும் என்று கெஞ்சிய போதும் இரக்கமில்லாமல் தானே இந்த அரசு நடந்து கொண்டது. அதற்காக முதலமைச்சர் வீட்டு வாசலுக்கு சென்று நியாயம் கேட்டீர்களா?

    தலித்துக்களுக்கு ஆதரவாக இப்போது பொங்கும் காங்கிரசின் வரலாறு தெரியாதா?

    தலித் இனத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் பிரதமர் ஆக தகுதியில்லை என்று புறக்கணித்தது மறந்து போனதா?

    மலைவாழ் சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதியாக வரக்கூடாது என்று எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது தானே காங்கிரசும், தி.மு.க.வும்.

    ராஷ்ட்ரபதி முர்முவை ராஷ்ட்ர பத்னி என்று காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார். பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்றார். அப்போது ஏன் பொங்கவில்லை?

    இந்தியாவில் அதிக அளவாக தலித்துகளுக்கு எதிரான வழக்குகள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 450 வழக்குகள் பதிவாகி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர வெளிச்சம் தேடலாம் என்று எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள். காங்கிரஸ் செத்துப்போன பாம்பு. அது எழுந்து ஆடினால் என்ன? ஆடாவிட்டால் என்ன?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு.

    மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

    சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சமூக வலைதளத்தில் மிரட்டல் வருவதாக எழுந்த புகாரை அடுத்து 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நடிகை குஷ்பு அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
    • நடிகை குஷ்பு கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கார்த்திக் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடிகை குஷ்பு அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சேரியில் பேசுகின்ற மொழி என்ற வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்ட தகாத மொழி என்றும் பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை குஷ்பு மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.
    • அதில், சேரி மொழி என்று குஷ்பூ பயன்படுத்திய வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

    சென்னை:

    நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

    மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சேரி மொழி என்று பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையான நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

    • ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள்.
    • இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று குஷ்பு கூறினார்.

    ஐதராபாத்:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் செய்து வருகிறார்.

    தமிழில் கொடிகட்டி பறந்தது போல் தெலுங்கு சினிமா உலகிலும் கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. எனவே தெலுங்கு மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். எனவே அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவரை பார்ப்பதற்காகவும் அவரோடு செல்பி எடுப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். தெருக்களில் நடந்து சென்று வாக்கு கேட்ட குஷ்பு, தன்னை பார்க்க திரண்டு நின்றவர்கள் அருகில் சென்று இளம்பெண்களாக இருந்தால் ரா ரா (வா... வா) கண்ணா என்று அவர்களது கண்ணங்களை தடவியும், வயதானவர்களாக இருந்தால் அவர்களை அம்மா என்று கும்பிட்டும் உங்கள் குஷ்பு வந்திருக்கேன். தாமரை பூவை மறந்திடாதீங்க என்று கேட்டு வாக்கு சேகரித்தார்.

    ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள். இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்.

    இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் யாருக்கும் பயப்படவில்லை. பயப்படவும் மாட்டேன் என்பது தெரிந்த உண்மை. இலங்கையில் நடைபெற இருந்த ஹரிஹரன் கச்சேரியில் இருந்து நான் விலகிவிட்டேன், ஏனெனில் அந்த நேரத்தில் எனது மாமியார் ஒரு பெரிய இதய அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டுள்ளார். எனது முன்னுரிமை அவர்தான். அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

    அதனால் நான் பின்வாங்கிவிட்டேன் என்று நினைப்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்லுங்கள். தெரியாதவர்கள், பெயர் தெரியாதவர்கள், முகம் தெரியாதவர்கள், அந்நியர்கள் என்னை ஒருபோதும் மிரட்ட முடியாது. தயவு செய்து வேறு கதவை தட்டுங்கள். தைரியம் என்பது என் பெயர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார்.
    • மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

    இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? கவர்னருக்கு கண்டனம், கவர்னருக்கு எதிராக போராட்டம் இப்படி ஒரே அஜண்டாவை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது.

    கவர்னருக்கு எதிரான அவர்களது நடவடிக்கையில் ஆச்சரியம் இல்லை. தாங்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடக்கூடாது. ஊழல் வழக்குகளில் சிக்கும் அமைச்சர்களை பற்றி பொதுமக்கள் பேசக்கூடாது என்பதற்காக திசை திருப்பும் முயற்சியை தி.மு.க. செய்து வருகிறது.

    கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார். நீட்டை பொறுத்தவரை தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மாநில மக்களுக்கு நன்மை பயக்காத தனக்கும், குடும்பத்துக்கும் தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் மட்டுமே பலன் அளிப்பதாக இருந்தால் கவர்னர் எப்படி அனுமதிப்பார்? ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பார். அவர் என்ன தாசில்தார் வேலையா பார்க்கிறார்? இருக்கிற சாலைகள் எதுவும் சரியில்லை. 15 நாட்களுக்கு முன்பு போட்ட ரோடுகளும் குண்டும் குழியுமாகிவிட்டன.

    ஆனால் முதல்வர் வீடு, அலுவலகம், அதை போல அமைச்சர்கள் வீடுகள் இருக்கும் சாலைகள் எங்கும் பழுதாகவில்லை. அந்த சாலைகள் மட்டும் பழுதாகவில்லை. இது எப்படி?

    மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலை மறைக்க இதுபோல் இன்னும் நாடகம் ஆடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார்.
    • கவுதமியின் எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    சென்னை:

    நடிகை கவுதமி பா.ஜனதாவில் இருந்து விலகினார். கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார்.

    கவுதமி கட்சியில் இருந்து விலகினாலும் அவருக்கு துணை நிற்போம் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    இந்த நிலையில் கவுதமி விலகல் குறித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது சக உறுப்பினரான கவுதமி பா.ஜனதாவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது. அவர் நல்ல பண்பாளர். சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார். அவரது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.
    • இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    விதவிதமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க.வும் காங்கிரசும் கைதேர்ந்த கட்சிகள்.

    கடந்த தேர்தலில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என்றார்கள். வெற்றிபெற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.

    இப்போது கையில் அளவுகோலுடன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய போகிறார்களாம். அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி இருந்தால் மட்டும் கொடுப்பார்களாம். இல்லாவிட்டால் கொடுத்ததை நிறுத்தி விடுவார்களாம். எப்படியெல்லாம் கதை கதையாய் பொய் சொல்லுகிறார்கள்.

    தேர்தல் நேரத்திலேயே இப்படி தகுதியை சொல்லி அவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறியிருக்கலாமே. பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக அளந்து விட்டார்கள். பெண்களும் ஏமாந்தார்கள்.

    இதே போலத்தான் கர்நாடகத்திலும் அனைத்து பெண்களுக்கும் என்று அறிவித்து விட்டு இப்போது வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு என்கிறார்கள். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.

    ஒற்றை கட்சி ஆட்சிக்கு மோடி திட்டமிடுவதாக கூறுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மறந்து விட்டதா? அல்லது அந்த கூட்டணியை பற்றி பேசவே பயமா?

    இந்தியா கூட்டணியில் மோடி போல் முடிவெடுக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஒருவராவது உண்டா? எல்லோருமே குடும்பத்துக்காக உழைப்பவர்கள். நாட்டை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது. காந்தி குடும்பம், கருணாநிதி குடும்பமும் வாழ வேண்டும். ஆள வேண்டும் இதுதான் கூட்டாட்சியா?

    இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். மோடிக்கு வாக்களித்ததும், இனி வாக்களிக்க போவதும் அனைத்து தரப்பு மக்களும் தான்.

    சனாதன வெறுப்பு பற்றி பேசும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனிகளான இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அதை ஒழிப்பதே எங்கள் வேலை என்று கூறி ஓட்டு கேட்கட்டும் பார்ப்போம். அப்படியானால் அவர்களை கொள்கை வாதிகள் என்று பாராட்டலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×