search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
    • நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    கோவை:

    பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இந்த திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தியும் பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த திட்டமானது தங்களது குடும்ப தேவைக்கு உதவும் என்றும் செல்போனில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்க்கும் போது மன நிறைவாக உள்ளதாகவும் பயனாளிகள் கூறுகிறார்கள்.

    அத்துடன் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் இந்த 1000 ரூபாயானது பெரிதும் உதவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைத்த சில நாட்களில், அவர்களின் செல்போனுக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ மற்றும் ஆடியோக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வழக்கம் போல பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வீடியோ வந்தது.

    அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பேசுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பதிலாக அந்த வீடியோவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோ வந்திருந்தது.

    அந்த வீடியோவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

    தமிழக மக்களுக்கு வணக்கம். நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறேன். நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க.

    மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழக்கம் போல இந்த மாதமும் உங்களுக்கு வந்திருக்கும்.

    உங்கள் பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய திராவிட மாடல் அரசுடைய ஒரே நோக்கம்.

    காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குற வரைக்கும் ஓயாமால் உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு இணையானது எதுவுமே இல்லை.

    உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

    இது எதோ சலுகை தொகை கிடையாது. உங்களுக்கான உரிமை தொகை.

    இந்த தொகையானது உங்களது சொந்த தேவைக்கோ, உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கோ, மருத்துவ செலவிற்கோ நிச்சயம் உதவும்.

    செலவு போக மீதமுள்ள பணத்தை முடிந்தவரை சேமித்து வையுங்கள். என்றைக்காவது ஒரு நாள் அது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    தி.மு.க அரசு உங்களுக்கான உரிமையையும், சமத்துவத்தையும் எப்போதும் நிலைநாட்டும். உங்களுக்கு ஆதரவாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. முதலமைச்சரும் இருக்கிறார்.

    நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக மக்களாகிய நீங்கள் தான் உள்ளீர்கள்.

    நம் முதலமைச்சரின் முகமாக இருந்து அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும். நன்றி வணக்கம்.

    இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது.
    • ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது.

    இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10-ந்தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதமே உதவித்தொகை கிடைக்கும்.

    மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    வரும் 10-ந்தேதி முதல் 1.15 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்துள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்துள்ளது. 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் மகளிர் உரிமைத்திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்து வருகிறது.

    அந்த வகையில் 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    • சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம்.
    • முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண் ஆயிரம் ரூபாய் பெற்றனர்.

    2021 சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தது.

    திமுக அளித்திருந்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.

    அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்றன. பின்னர் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் முதன்முதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். சுமார் ஒன்றரை கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு, இந்த திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    அப்போது பலரது பெயர் விடுபட்டதாக விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பலர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதன் பலனடைவோர் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து, 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10-ந்தேதிக்கு மேல் 15-ந்தேதிக்குள் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    • இதுவரை 1,13,84,300 பேருக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
    • அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி துவங்கி வைத்தார். அப்போது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கிற்கு மாதம் ரூ. 1000 அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் விடுபட்டவர்களுக்கு கடந்த 10-ம் தேதி 2-வது கட்டமாக பணம் வழங்கப்பட்டது. இதில் 7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது. அந்த வகையில் இரண்டு கட்டங்களை சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

     


    இதுதவிர கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதற்காக கடந்த அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான புதிய விண்ணப்பம் ஜனவரிக்கு பிறகு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருக்கிறார். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    • இரண்டு கட்டங்களையும் சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்துள்ளனர்.
    • தமிழகத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    அப்போது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்பிறகு விடுபட்டவர்களுக்கு கடந்த 10-ந்தேதி 2-வது கட்டமாக பணம் வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு 1000 ரூபாய் கிடைத்தது.

    மொத்தமாக இரண்டு கட்டங்களையும் சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்துள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 25-ந்தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. இந்த பணி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இதில் விண்ணப்பங்கள் முழுமையாக பரிசிலீக்கப்பட்டு இப்போது தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    • அனைத்து பெண்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டிருந்தது. அதை அனைவரும் அணிந்து விழாவில் அமர்ந்திருந்தனர்.

    தற்போது பல பகுதிகளில் சளி, இருமல் போன்றவை பரவுவதால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    • ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • 11 லட்சத்து 86 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இதில் தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இதில் விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து செல்போனில் குறுஞ்செய்தியும் அனுப்பப் பட்டிருந்தது.

    மேலும் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணைதளத் தையும் தமிழக அரசு தொடங்கி இருந்தது.

    இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மனு நிராகரிக்கப் பட்டதற்கான காரணத்தை தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

    அதை அறிந்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். செப்டம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வரை மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் பிறகு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.

    தற்போது மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் தொலைபேசி வாயிலாக விண்ணப்ப தாரரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனர். சில வீடுகளுக்கு நேரில் சென்றும் விசாரித்து வந்த வண்ணம் உள்ளனர்.

    இதில் தகுதியானவர்களுக்கு செல்போனில் இப்போது குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே முதற்கட்டத்தில் மனு கொடுத்து அதில் விடுபட்டவர்களுக்கும் இப்போது தகுதி பார்த்து குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட திட்டத்தை விழாவாக நடத்தி தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி இந்த திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    அதன்படி தகுதியான மகளிருக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சென்று ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெற்று பயனடைந்துள்ளனர்.
    • கடைசி நாளான அக்டோபர் 25-ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

    கடந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே குடும்பத் தலைவிகளுக்கு பணம் கிடைத்துவிட்டது.

    மகளிர் உரிமைத் தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கி இருந்தனர். மேலும் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு மணியார்டர் மூலமும் பணம் அனுப்பப்பட்டது.

    இந்தப் பட்டியலில் சிலருக்கு இன்னும் பணம் கிடைக்காமல் உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

    அவ்வாறு பணம் போய் சேராமல விடுபட்டவர்களுக்கு 10-ம் தேதிக்குள் பணம் கிடைக்கும் வகையில் ரூ.1000 அனுப்பிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு விடுபட்டவர்களுக்கு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகளிர் உரிமைத் தொகை மேல் முறையீட்டு மனுக்கள் 11 லட்சத்து 85 ஆயிரம் வந்திருந்தது. இதனால் கடந்த மாதம் 25-ம் தேதியுடன் மனு வாங்குவது நிறுத்தப்பட்டது. இந்த மனுக்கள் மீது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். வீடுகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தப் பணிகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு 25-ம் தேதியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அடுத்த மாதம் முதல் பணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது.
    • அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயதநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு மனு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் சாத்தூர் தாலுகாவில் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்திருந்த பெண்ணிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்போனில் பேசினார். அப்போது எந்த காரணத்திற்காக மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் அளித்தார். தொடர்ந்து உரிய தகுதிகள் இருந்தால் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்கும் என அமைச்சர் கூறினார்.

    ஆய்வு முடிந்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமூகத்தில் அவர்கள் சுய மரியாதையோடு வாழவும் தலா ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேற்கண்ட 2 கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18 முதல் 20-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது. மேலும் அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர். இதனை தொடர்ந்து 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 மகளிர் உரிமை தொகை செலுத்தப்பட்டது.

    கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதிகள் சரி பார்க்கப்படுகிறது. அரசாணையில் குறிப்பிட்டு உள்ளபடி தகுதிகள் பூர்த்தி செய்யபடாவிடில் நிராரிக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் நிலைமை குறித்து விண்ணப்பித்தவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. நிராரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான காலக்கெடு கடந்த 24-ந்தேதியோடு முடிவடைந்தது. நேற்று மாலையுடன் மேல்முறையீட்டு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 87 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதனை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து உரிய தகவல் தர அறிவுறுத்தப்பட்டது.

    இதில் ஏற்கனவே பெற்ற 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 4 லட்சத்து 35 ஆயிரம் மனுக்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்படும்.

    மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உரிய பரிசீலனை நடத்தி தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை வேகப்படுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அரசு மூலம் நமது முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார்.

    கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். தி.மு.க. ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.
    • இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    விதவிதமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க.வும் காங்கிரசும் கைதேர்ந்த கட்சிகள்.

    கடந்த தேர்தலில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என்றார்கள். வெற்றிபெற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.

    இப்போது கையில் அளவுகோலுடன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய போகிறார்களாம். அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி இருந்தால் மட்டும் கொடுப்பார்களாம். இல்லாவிட்டால் கொடுத்ததை நிறுத்தி விடுவார்களாம். எப்படியெல்லாம் கதை கதையாய் பொய் சொல்லுகிறார்கள்.

    தேர்தல் நேரத்திலேயே இப்படி தகுதியை சொல்லி அவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறியிருக்கலாமே. பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக அளந்து விட்டார்கள். பெண்களும் ஏமாந்தார்கள்.

    இதே போலத்தான் கர்நாடகத்திலும் அனைத்து பெண்களுக்கும் என்று அறிவித்து விட்டு இப்போது வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு என்கிறார்கள். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.

    ஒற்றை கட்சி ஆட்சிக்கு மோடி திட்டமிடுவதாக கூறுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மறந்து விட்டதா? அல்லது அந்த கூட்டணியை பற்றி பேசவே பயமா?

    இந்தியா கூட்டணியில் மோடி போல் முடிவெடுக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஒருவராவது உண்டா? எல்லோருமே குடும்பத்துக்காக உழைப்பவர்கள். நாட்டை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது. காந்தி குடும்பம், கருணாநிதி குடும்பமும் வாழ வேண்டும். ஆள வேண்டும் இதுதான் கூட்டாட்சியா?

    இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். மோடிக்கு வாக்களித்ததும், இனி வாக்களிக்க போவதும் அனைத்து தரப்பு மக்களும் தான்.

    சனாதன வெறுப்பு பற்றி பேசும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனிகளான இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அதை ஒழிப்பதே எங்கள் வேலை என்று கூறி ஓட்டு கேட்கட்டும் பார்ப்போம். அப்படியானால் அவர்களை கொள்கை வாதிகள் என்று பாராட்டலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×