search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuldeep Yadav"

    • நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம்.
    • அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    கொல்கத்தா:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ 50 ரன்னும், குசல் மென்டிஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 86 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதன் பின் லோகேஷ் ராகுல் (64ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (36ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த போட்டி நெருக்கமான விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகள் நிறைய கற்று கொடுக்கிறது. லோகேஷ் ராகுல் நீண்ட காலமாக 5-வது வரிசையில் விளையாடி வருகிறார். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    தொடக்க வரிசையில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை எடுத்துள்ளனர். நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் எங்களுக்கு தெரியும்.

    3-வது ஒரு நாள் போட்டிக்கான ஆடுகளத்தை பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் தொடரும் வர உள்ளது. எனவே ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்று பார்ப்போம்.

    இப்போட்டியில் குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினர். இந்த நேரத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது அணிக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை கேப்டன் ஷனகா கூறும் போது, இப்போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் போதிய ரன்களை எடுக்க தவறி விட்டோம். ஆரம்பத்தில் 280 ரன்கள் பற்றி விவாதித்தோம். ஆனால் குல்தீப் யாதவ் நன்றாக பந்து வீசினார் என்றார்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

    3-வது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    • குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
    • இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

    வங்காளதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் 16 ஓவர்கள் வீசி 40 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். முன்னதாக அவர் பேட்டிங்கில் 40 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
    • வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    மிர்புர்:

    3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
    • இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஐபிஎல் இந்த சீசன் எனது நம்பிக்கையை உயர்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா-ஏ அணிக்காகவும் சிறப்பாக பந்து வீசினேன்.

    நீங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளைப் பெறுவீர்கள், சில நேரங்களில் நீங்கள் விக்கெட்டுகளைப் பெறுவதில்லை. இருப்பினும் என் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள்
    • கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.

    புதுடெல்லி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர்.

    இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    அதேசமயம் காயமடைந்த கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

    மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். #KuldeepYadav
    விக்கெட் கீப்பிங் பணியில் எம்எஸ் டோனி உலகத்தரம் வாய்ந்த வீரராக போற்றப்படுகிறார். பேட்ஸ்மேனின் மனநிலையை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றபடி சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைப்பதும், பீல்டிங் வியூகம் அமைப்பதிலும் டோனிக்கு நிகர் டோனியே.

    குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். அவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.

    ஆனால் டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறியிருந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது. அவர் சொல்வதுபோல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று சொல்ல முடியாது.



    அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று அவர் தெரிவித்தார்’’ என்பதே அந்த செய்தி.

    இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக கிளம்பியது. டோனி ரசிகர்கள் குல்தீப் யாதவை கடுமையாக திட்டி தீர்த்தனர். உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற குழப்பம் நிலவியதால் குல்தீப் யாதவ் உடனடியாக பதில் அளித்துள்ளார்.

    மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தக்கருத்தும் கூறவில்லை. அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை’’  என்று தெரிவித்துள்ளார்.
    டோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
    மும்பை:

    நவீன கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், டோனி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியை பல்வேறு உச்ச நிலைக்கு அழைத்து சென்றுள்ள 37 வயதான டோனி கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், தற்போதைய கேப்டன் விராட்கோலி மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவது வாடிக்கையாகும்.

    குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். அவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.

    ஆனால் டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறி இருக்கிறார். சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாக தான் முடிந்தது. அவர் சொல்வது போல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் போய் சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையே தான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று தெரிவித்தார்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட இருக்கும் நிலையில் குல்தீப் யாதவின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் (50 ஓவர்) இந்திய அணி டோனி தலைமையில் தான் வென்றது. 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, 2017-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். #India #T20Rank #KuldeepYadav
    துபாய்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), காலின் முன்ரோ (நியூசிலாந்து), முதல் 2 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) ஒரு இடம் சரிவு கண்டு 3-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும், ரோகித் சர்மா 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 2 இடம் பின்தங்கி 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 14-வது இடத்தை பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 17 இடம் முன்னேறி 5-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் முதலிடத்தை பெற்றுள்ளார். #India #T20Rank #KuldeepYadav 
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    ஐசிசி டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்து முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் நீடிக்கிறது. #ICCRankings #IND #PAK
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது. அதேபோல் பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    இதனால் இன்று வெளியிடப்பட்ட ஐசிசி-யின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.



    பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் பெற்று 138 புள்ளிகளுடனும், இந்தியா 3 புள்ளிகள் பெற்று 127 புள்ளிகளுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் 14 இடங்கள் முன்னேறி குல்தீப் யாதவ் 23-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதல் இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 7-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 12-வது இடத்திலும், தவான் 16-வது இடத்திலும், கேஎல் ராகுல் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
    ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா (134), விராட் கோலி (139), ரவிந்திர ஜடேஜா (100) ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது. சேஸ் 53 ரன்களும், கீமோ பால் 47 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    181 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாலோ-ஆன் ஆகி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் தொடக்க வீரரான பொவேல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 196 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    பொவேல் 93 பந்தில் 83 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்களும், ஜடேஜா மூன்று விக்கெட்டும், அஸ்வின் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

    ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
    ×