search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chahal"

    • முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. பகர் சமான் 12 ரன்னுடனும், பாபர் ஆசம் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    வெளிநாட்டு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என சாஹல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் இருந்தார்கள். மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சாஹல் இடம்பிடித்தார்கள்.

    இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். வாய்ப்பு கிடைத்தபோது அதில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பிளாட் பிட்ச்-யில் கூட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு தொடரில் லெக் ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பான விஷயம். இது உலகளவில் பிரபலமாகி வருகிறது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது கீழே விழுந்த சாஹலை, நெய்மருடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெல் ட்ரோல் செய்துள்ளனார். #ENGvIND
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அணி காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக நட்சத்திர வீரரான நெய்மர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    போதுமான பயிற்சி ஆட்டத்தில் விளையாட நேரம் கிடைக்கவில்லை. நேரடியாக உலகக்கோப்பையில் களம் இறங்கினார். எதிரணி வீரர்கள் அவரது காலை தட்டினாலே கீழே விழுந்து உருண்டு விடுவார். ஒரு போட்டியில் அல்ல. எல்லாப் போட்டிகளிலும் இப்படி நடந்ததால் நெய்மர் விமர்சனத்திற்கு உள்ளானார். அவர் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது என்று கணக்குப்போடும் அளவிற்கு உள்ளானார்.

    அத்துடன் மட்டுமல்லாம் நெய்மர் சேலஞ்ச் என்று உருவாக்கி, நெய்மர் என்றதும் கீழே விழுந்து உருளுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு ட்ரோல் செய்து வந்தனர்.



    இந்நிலையில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்தானர். விழுந்ததும் கால் மூட்டை பிடித்துக்கொண்டு உருண்டார்.

    இந்த காட்சியை வைத்து ‘கிரிக்கெட்டின் நெய்மர்’ என்று மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் ரசிகர்களும் சாஹலை ட்ரோல் செய்து வருகின்றனர்.
    குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டியுள்ளது என்று அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் தெரிவித்துள்ளார். #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (97), தவான் (74) ரன்கள் ஆகியோரின் அதிரடியால் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய அயர்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்களில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் 8 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பறினார்கள்.

    இந்நிலையில் இந்த இருவரையும் எப்படி சமாளிப்பது என்பதுதான் எங்களுக்கு முக்கிய வேலை என்று அயர்லாந்து கேப்டன் கூறியுள்ளார்.



    மேலும் இதுகுறித்து அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் கூறுகையில் ‘‘நாங்கள் வீரர்கள் அறையில் உட்கார்ந்து குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை 2-வது ஆட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பது குறித்து யோசிப்பது தேவையானது.

    இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி. இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்தார்கள். சுழற்பந்து வீச்சு 2-வது இன்னிங்சில் இந்த அளவிற்கு வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் சுழற்பந்து வீச்சை அதிக அளவில் பயன்படுத்திருக்க வேண்டும்’’ என்றார்.
    ×