search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் இந்தியா தொடர்"

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
    • நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 77 ரன்கள் குவித்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் 3 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என தொரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.

    தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டையில் முடிந்தது. அத்துடன், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

    இதில் முதலில் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 15 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஜெம்மியா ரோட்ரிகியுஸ் 10 ரன்கள், அமன்ஜோத் கவுர் 15 ரன்கள், தீப்தி சர்மா 20 ரன்கள், பூஜா வஸ்த்ரகர் 7 ரன்கள், பாரெட்டி அனுஷா 2 ரன்களும் எடுத்தனர்.

    ஸ்னேஹ் ரானா ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இதன்மூலம், 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச மகளிர் அணி வெற்றிப்பெற்றது.

    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

    • இந்திய அணியில் அமன்ஜேத் கவுர், அனுஷா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி உள்ளனர்.
    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அமன்ஜோத் கவுர், அனுஷா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி உள்ளனர்.

    இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜேமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ராகர், ஸ்னே ராணா, தேவிகா வைத்யா, அனுஷா.

    வங்காளதேச அணி: ஷர்மின் அக்டர், முர்ஷிதா காதுன், ஷோர்னா அக்டர், நிகர் சுல்தானா (கேப்டன்), பர்கானா ஹோக், நஹிதா அக்டர், ரிது மோனி, பஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், மருபா அக்டர்.

    • இந்திய மகளிர் அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது.

    ஷதி ராணி 22 ரன்னும், ஷமிமா சுல்தானா 17 ரன்னிலும் அவுட் ஆகினர். சோபனா மோஸ்தரி 23 ரன்னிலும், நிகர் சுல்தானா 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக ஆடி 35 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 54 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமினின் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த வெற்றிக்கு 8-வது விக்கெட் ஜோடியான ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் காரணமாக இருந்தனர். 145 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 74 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது.

    இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. இருவரும் சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர்.

    இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 12 ரன்னும், 2-வது இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் எடுத்த 42 ரன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    36 வயதான அஸ்வின் 88 டெஸ்டில் விளையாடி 3043 ரன்கள் எடுத்துள்ளார். 449 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை யை அவர் படைத்தார்.

    இதற்கு முன்பு கபில்தேவ் (இந்தியா), ஹேட்லி (நியூசிலாந்து) பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர். இந்த வரிசையில் 6-வது வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இணைந்து உள்ளார்.

    கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் குவித்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரிச்சர்டு ஹேட்லி 86 டெஸ்டில் 3124 ரன்னும், 431 விக்கெட்டும், வார்னே 145 டெஸ்டில் 3154 ரன்னும், 708 விக்கெட்டும் எடுத்துள்ள னர்.

    பொல்லாக் 108 டெஸ்டில் 3781 ரன்னும், 421 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்டில் 3550 ரன்னும், 566 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த அஸ்வின் 450 விக்கெட் கைப்பற்றி மேலும் ஒரு மைல்கல்லை தொட இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. கும்ப்ளே குறைந்த டெஸ்டில் 450 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். 93-வது டெஸ்டில் அவர் இதை செய்து இருந்தார். அவரது சாதனையை முறியடித்து அதிவேகத்தில் 450 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    அஸ்வின் நேற்று மேலும் ஒரு சாதனை புரிந்தார். 9-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்களை எடுத்து சேசிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் 9-வது வீரராக களம் இறங்கி 40 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்து இருந்தார். தற்போது அஸ்வின் 42 ரன் எடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். இதன் மூலம் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.

    • வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 6 விக்கெட்கள் கைவசம் உள்ளன.
    • இந்திய வீரர்களில் ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் வெற்றி பெற முடியும்.

    டாக்கா:

    இந்தியா வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்காளதேசம், முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.

    தொடந்து 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தள்ளது.

    அக்சர் பட்டேல் 26 ரன்னுடனும், உனத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியிடம் இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்று வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெறுமா? அல்லது இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி வங்காளதேசம் வெற்றி பெறுமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளதாவது: நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதும் பேட்டிங் செய்ய இன்னும் சிலர் இருக்கிறார்கள். அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

    அக்சர் ஏற்கனவே செட் ஆகி உள்ளார். அவர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துகிறார். ரிஷப் (பண்ட்) மற்றும் ஐயர் (ஷ்ரேயாஸ் ) இன்னும் இருக்கிறார்கள். நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களில் யாராவது ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் நாம் வெற்றி பெற முடியும். மேலும் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவை வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

    • ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
    • வங்காளதேச பந்துவீச்சாளர் மெகிடி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 227 ரன்களும், இந்தியா 314 ரன்களும் சேர்த்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் (2), ஷூப்மான் கில் (7), புஜாரா (6), விராட் கோலி (1), என முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். வங்காளதேசம் தரப்பில் மெகிடி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட் எடுத்தார்.

    நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்திருப்பதால் நாளைய ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பவுண்டரியுடன் இன்றைய ஆட்டத்தை முடித்து வைத்த அக்சர் பட்டேல், நாளை தனது இன்னிங்ஸை மீண்டும் உத்வேகத்துடன் தொடங்குவார். அவரது ஆட்டம்தான் இன்று இந்தியாவை சற்று முன்னிலையில் வைத்துள்ளது. எனவே, நாளை அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், அஷ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து களமிறங்க உள்ளனர். வங்காளதேச அணி இந்த இன்னிங்சில் சரியான பதிலடி கொடுத்திருப்பதால், நாளை அதே வேகத்தில் கடும் நெருக்கடி கொடுக்கும். எனவே, ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வங்காளதேச வீரர்கள் ஜாகிர் ஹசன் 51 ரன்கள், லித்தன் தாஸ் 73 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
    • 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இந்தியா 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    மிர்பூர்:

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. இது வங்காளதேசம் ஸ்கோரை விட 87 ரன் கூடுதலாகும். இந்திய அணி ஒரு கட்டத்தில் 94 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான ரிஷப் பண்ட்-ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    ரிஷப் பண்ட் 93 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சகீப்-அல்-ஹசன், தஜி ஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே அஸ்வின் வங்காளதேச அணியின் தொடக்க ஜோடியை பிரித்தார். நஜிமுல் உசேன் 5 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 13 ஆக இருந்தது. 2-வது விக்கெட் டுக்கு ஜாகீர் ஹசனுடன், மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் நிலைத்து நிற்கவிடவில்லை. ஸ்கோர் 26ஆக இருந்தபோது வங்காளதேச அணியின் 2வது விக்கெட் சரிந்தது. மொமினுல்ஹக் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    3-வது விக்கெட்டுக்கு ஜாகீர்ஹசனுடன் சகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 23.1-வது ஓவரில் 50-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜெயதேவ் உனட்கட் பிரித்தார். சகீப்-அல்-ஹசன் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த முஷ்பிகுர் ரகீம் 9 ரன்னில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். வங்காளதேசம் 70 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது.

    நிதானமாக ஆடிய ஜாகிர் ஹசன் 51 ரன்களும், லித்தன் தாஸ் 73 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். நூருல் ஹசன், தஸ்கின் அகமது தலா 31 ரன்கள் சேர்க்க, வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது சிராஜ், அஷ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன், ஷூப்மான் கில் 7 ரன், புஜாரா 6 ரன், விராட் கோலி ஒரு ரன், என முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு  45 ரன்கள் எடுத்திருந்தது. அக்சர் பட்டேல் 26 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 

    • வங்காளதேச அணியின் மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
    • இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் சட்டோ கிராமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை மிர்பூரில் தொடங்கியது. காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றார்.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்காளதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. யாசிர் அலி, எபடோட் ஹொனசர் ஆகியோருக்கு பதில் மொமினுல் ஹக், தஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.

    டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹொசைன் களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். இதில் 5-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் பவுண்டரி அடித்தார்.

    தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது. இருவரும் விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பொறுமையாக விளையாடினார்கள். இதனால் வங்காளதேச அணியின் ரன் வேகம் மெதுவாக இருந்தது.

    15-வது ஓவரில் வங்காள தேசத்தின் முதல் விக்கெட் விழுந்தது. ஜெய்தேவ் உனத்கட் பந்தில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜாகீர் ஹசன் 15 ரன் எடுத்தார். அடுத்த ஓவரில் 2-வது விக்கெட் விழுந்தது. அஸ்வின் பந்து வீச்சில் நஜ்முல் ஹொசைன் (24 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் ஷகீப்-அல்-ஹசன், 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. முஷ்பிகுர் ரகிம் 26 ரன்கள், லித்தன் தாஸ் 25 ரன்கள், மெகிடி ஹசன் 15 ரன்கள், நூருல் ஹசன் 6 ரன்கள் மற்றும் தஸ்கின் அகமது 1 ரனில் ஆட்டமிழந்தனர். மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்காளதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.

    • இந்திய அணி டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும்.
    • சகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேச அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் வெற்றியுடன் தொடரை முடிக்க இந்திய வீரர்கள் விரும்புகிறார்கள்.

    இந்த டெஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . முதல் டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார்.

    பேட்டிங் மட்டும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. புஜாரா (192 ரன்), சுப்மன்கில் (130) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். இருவரும் முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தனர்.

    இது தவிர ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட் ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். விராட் கோலி , ராகுல் இந்த டெஸ்டில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    குல்தீப் யாதவ் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். அக்‌ஷர் படேல், முகமது சிராஜ் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள்.

    சகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேச அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடுவார்கள்.

    இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் அந்த அணி உள்ளது. தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகீர் ஹசன், கேப்டன் சகீப்-அல்-ஹசன், தய்ஜுல் இஸ்லாம், மெகிதி ஹசன் மிராஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய 12 டெஸ்டில் இந்தியா 10-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    • வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார்.
    • 2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு 2- 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    அதனால் முதல் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4வது இடத்திலிருந்த இந்தியா தென்னாப்பிரிக்காவை முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீழ்த்திய உதவியுடன் நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன் காரணமாக இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் களமிறங்கவில்லை.

    வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார். இருப்பினும் அவரது காயம் லேசாக இருந்த காரணத்தால் 2-வது போட்டிக்கு முன்பாக குணமடைந்து வந்து விடுவார் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்தன.

    இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் 2வது போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகுவதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

    2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிய வருகிறது. 

    ×