search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யய்யோ, நான் அப்படி கூறவில்லை, அது பொய் செய்தி- அலறி அடித்து விளக்கம் கொடுத்தார் குல்தீப் யாதவ்
    X

    அய்யய்யோ, நான் அப்படி கூறவில்லை, அது பொய் செய்தி- அலறி அடித்து விளக்கம் கொடுத்தார் குல்தீப் யாதவ்

    மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். #KuldeepYadav
    விக்கெட் கீப்பிங் பணியில் எம்எஸ் டோனி உலகத்தரம் வாய்ந்த வீரராக போற்றப்படுகிறார். பேட்ஸ்மேனின் மனநிலையை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றபடி சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைப்பதும், பீல்டிங் வியூகம் அமைப்பதிலும் டோனிக்கு நிகர் டோனியே.

    குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். அவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.

    ஆனால் டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறியிருந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது. அவர் சொல்வதுபோல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று சொல்ல முடியாது.



    அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று அவர் தெரிவித்தார்’’ என்பதே அந்த செய்தி.

    இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக கிளம்பியது. டோனி ரசிகர்கள் குல்தீப் யாதவை கடுமையாக திட்டி தீர்த்தனர். உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற குழப்பம் நிலவியதால் குல்தீப் யாதவ் உடனடியாக பதில் அளித்துள்ளார்.

    மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தக்கருத்தும் கூறவில்லை. அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை’’  என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×