search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள சினிமா நடிகைகள் பலர் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தியுள்ளனர்.
    • பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இதுவரை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மலையாள சினிமாவில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக பேசிய அவர், "எனக்கு நன்றாக தெரிந்த இயக்குநர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார். பிறகு என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அவர் முகத்தில் அறைந்து விட்டு கிளம்பி விட்டேன்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி ஹேமா அறிக்கை பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தியது.
    • அதனைத் தொடர்ந்து நடிகைகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இப்படி பல நடிகைகள், சினமாத்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கூற ஆரம்பித்ததால் மலையாள சினிமா துறை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் புகார் கூறியபோதிலும், காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

    இதனால் MeToo-வை எதிர்கொள்ள கேரள மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சோனியா மலிஹார் என்ற நடிகை 2013-ம் ஆண்டு சினிமா செட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எனது புகார் தொடர்பாக மீடியாக்கள் நடிகர் ஜெயசூர்யாவை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது. இந்த 17 புகார் தொடர்பாக பலர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களிம் போலீசார் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக நடிகை மினு முனீர் நடிகர்கள் எம். முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, எடவேலா பாபு ஆகியோர் மீது துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் வந்த மிரட்டல் மெசேஜ்-யை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.

     நடிகை மினு முனீர் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜூ, பாபு ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    நான் படப்பிடிப்பு தளத்தில் கழிவறைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியேறியபோது, எனக்கு பின்னால் இருந்து ஜெயசூர்யா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.

    நடிகர் சங்க முன்னாள் செயலாளர் செயலாளர் பாபு, அம்மா உறுப்பினர் அட்டை பெறுவதற்கு உதவி செய்வதாகக் கூறி அவர் வசிக்கும் வீட்டிற்கு அழைத்தார். அப்போது உடல் தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளானேன்.

    நடிகரும், சிபிஎம் (CPM) எம்.எல்.ஏ.-வுமான நடிகர் முகேஷ், அவருடைய ஆசைக்கு இணைங்க மறுத்ததால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்க மறுத்துவிட்டார்" எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்பொழுது மோகன்லால் அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
    • நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர்.

    கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருப்பவர் நடிகர் மோகன்லால். அவர் தற்பொழுது அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    இவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர். இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் " சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்கு காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களுக்காக அனைத்து பத்திரக்கை ஊடங்களில் பேசும் பொருளாக இருக்கிறது. இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறு தேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்" என தெரிவித்துள்ளனர். மேலும் புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். அனைவருக்கும் நன்றி எங்கள் மேல் உள்ள பிழையை சுட்டி காட்டியதற்கு என தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
    • குற்றச்சாட்டுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

    கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

    திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப் போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.
    • குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை அமைப்பு வேண்டும்.

    பலேரி மாணிக்கம் பட விவாதத்தின் போது அந்த படத்தின் நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என நடிகை ஸ்ரீலேகா மித்ரா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து கேரள திரைப் பட அகாடமி பதவியில் இருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் ரஞ்சித் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நடிகரும் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் மலையாள திரை உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.

    அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்த கோர முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எந்த புகாரும் இல்லை என்று அறிவித்தால் என்ன நடக்கும்? எனவே பிரச்சனைகளை எதிர்கொண்ட பெண்கள் புகார் அளிக்க தயாராகும் வரை எந்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்க முடியாது.

    கேரளா கலாசித்ரா அகாடமியின் தலைவர் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர் ராஜினாமா செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் என் நண்பர் மற்றும் சக ஊழியர். தான் நிரபராதி என அவர் கூறுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை அமைப்பு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின.
    • இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின.

    மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியது. மேலும் எலிக்காய்ச்சலுககு அதிகளவில் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி மாதம் முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ம் ஆண்டு 103 பேரும் பலியாகியிருக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். அதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
    • வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு தலைமைச் செயலாளராக இருப்பவர் டாக்டர் வி.வேணு. கடந்த ஆண்டு வேணு கேரள அரசு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் வருகிற 31-ம் தேதியுடன் வேணு ஓய்வு பெறுகிறார். இதைதொடர்ந்து திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

    மந்திரி சபை கூட்டத்தில் புதிய தலைமை செயலாளராக வேணுவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி சாரதா முரளீதரனை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இவர் திட்டக்குழு கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்.

    கேரளாவில் கணவரை தொடர்ந்து மனைவி தலைமை செயலாளராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    • ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது.
    • முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அடிக்கடி பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்களை சுங்கத்துறையினர் பிடித்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

    இந்த நிலையில் குவைத்தில் இருந்து கொச்சி நெடும்பசேரி விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் கண்காணித்தனர்.

    இதில் ஒரு பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பையில் செயற்கை பூக்கள் மற்றும் ஸ்குரு டிரைவர்கள் இருந்துள்ளது. அதனை சோதனை செய்தபோது நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    செயற்கை பூக்களின் கைப்பிடியை தங்ககம்பிகளாக்கி அதனை இரும்பு நிற பொருட்களால் பூசியும், ஸ்குரு டிரைவர்களின் கைப்பிடிக்குள் வைத்தும் ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனை கடத்தி வந்த பெங்களூரைச் சேர்ந்த முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி.
    • இரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநில சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து வரும் நபர்கள் முறையான சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அரியவகை பழங்களான ரம்பூடான், மங்குஸ்தான் உள்ளிட்ட சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால் சோதனை சாவடியில் வைத்து அவற்றை சுகாதாரத்துறையினர் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதன்பின்னரே அதனை குற்றாலத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

    அந்த பழங்களில் வவ்வால்கள் கடித்து சேதமாகி இருந்தால், அதனை அப்படியே வாகனத்தில் கேரளாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார்
    • அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

    கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.

    'இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார். அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

     

     

    பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். 52 போட்டியாளர்களுடன் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட மிலி, இளைஞர்களின் தற்கொலை எண்ணங்களை மட்டுப்படுத்த யோகாவின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். 

    • எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
    • வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர்.

    கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் ஏற  விமான நிலையத்துக்கு வந்த 42 வயதான மனோஜ் குமார் என்பவரது பையையும் அதிகாரிகள் சோதித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்தபோது, எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.

    அவர் எதோ ஜோக் அடிப்பது போல் இதைக் கேட்டிருந்தாலும், வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாணை நடந்த அவரை உள்ளூர் போலீசிடம் பாதுகாப்பு அதிகரிகள் ஒப்படைத்தனர்.

    • டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். அதேநேரத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்தது அந்த டாக்டர் கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுவிட்டார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார்.

    அப்போது ஒரு கும்பல் அவரிடம் காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த இர்ஷானா(வயது34) என்ற இளம்பெண்ணை அறிமுகம் செய்து வைத்தது. இர்ஷானாவை திருமணம் செய்து கொள்ளும் வகையில் அந்த கும்பல் டாக்டரிடம் பேசியிருக்கிறது. இளம்பெண் என்பதால் அதற்கு டாக்டரும் சம்மதித்திருக்கிறார்.

    இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இர்ஷானாவின் சகோதரர் என்று அறிமுகமாக ஒரு நபர் உள்ளிட்டோர் கோழிக்கோட்டில் வைத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரையும் குடியமர்த்த வீடு பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    அதன்பேரில் டாக்டர் ரூ.5 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்டதும் டாக்டரை ஒரு மசூதி முன்பு விட்டு விட்டு இர்ஷானா உள்ளிட்ட அனைவரும் மாயமாகினர். அவர்கள் டாக்டரின் செல்போன், டேப் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டனர். அதன்பிறகே இர்ஷானா உள்ளிட்ட நபர்கள் திருமண மோசடியில் ஈடுபட்டதை டாக்டர் அறிந்தார்.

    தன்னிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பற்றி கோழிக்கோடு போலீசில் டாக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபிரசாத் தலைமையிலான போலீசார் மோசடி கும்பலை தேடிவந்தனர். இந்நிலையில் டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் திருமண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இர்ஷானா, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த கும்பல் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி பணம் பறித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×