search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job"

    • பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில் இண்டகரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படும்.

    இதற்கான தகுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பிளஸ் 2-ல், 2022-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    இப்படிப்பிற்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற்றால், ஆண்டு சம்பளமாக ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் சம்பள உயர்வும் பெறலாம்.

    இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    தமிழக மின் வாரியத்தில், உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக , கேங்மேன் பணிக்கு 10 ஆயி ரம் பேர் தேர்வு செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. தேர்வான, 9,600 பேரின் பட்டியல், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

    எழுத்து தேர்வில் பங்கேற்று வேலை கிடைக் காத 5,400 பேர் வேலை கேட்டு, 2 ஆண்டு களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சி னைக்கு தீர்வு காண, செய லர், 3 தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவை, மின் வாரியம், கடந்த ஆண்டு நியமித்தது.

    அக்குழு ஆய்வு செய்து, தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், 54 ஆயிரம் காலி பணி யிடங்கள் இருப்பதால், எழுத்து தேர்வில் பங்கேற்று விடுபட்ட 5,400 பேரை வேலைக்கு நியமிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    • ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
    • அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது.

    ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது. காலையில் தேநீர் தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுப்பது முதல் இரவில் உணவு சமைத்து பரிமாறுவது வரை ஓய்வில்லாமல் உழைக்கும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. அப்படி அதிக நேரம் வேலை செய்யும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். சற்று நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் பெண்கள் தங்கள் உடல் நலனையும், மன நலனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    சோர்வு: உணவை தவிர்ப்பது, போதுமான தூக்கம் இல்லாதது, தண்ணீர் குடிக்காதது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் சோர்வு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து பிஸியாக இருந்தாலோ, நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருந்தாலோ ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குறைவான நேரமே தூங்குகிறார்கள். முழு உடல் ஆற்றலையும் தங்களின் வேலைகளுக்கு செலவிடுகிறார்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலத்தில் அலட்சியம் கொள்வது நீரிழிவு நோய், தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

    மாதவிடாய் பிரச்சினைகள்: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. மாதவிடாய் காலங்களில், கடுமையான தசை பிடிப்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் பி.சி.ஓ.டி. எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் மாதவிடாய் சுழற்சியின்போது முகப்பரு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தம்: நீண்ட நேரம் வேலை செய்யும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை கையாளும் திறன் தன்னிடம் இல்லை என்பதை மூளை உணரும்போது, மன உளைச்சலை அனுபவிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும் திடீர் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பலவீனம்: பொதுவாக பெண்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளாதபோது பலவீனத்தை எதிர்கொள்கின்றனர். இது ரத்த அழுத்தம், குறிக்கோள் மீது ஆர்வமின்மை, வேலையில் செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சமச்சீரான உணவு பழக்கத்தை கையாள்வது பற்றி உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது பல வீனத்தை குறைக்க உதவும்.

    செரிமான பிரச்சினைகள்: உணவுப்பழக்கம், பாக்டீரியா தொற்றுகள், உட்கொள்ளும் சில மருந்துகள் போன்றவற்றால் திடீர் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு பெண்ணும் தினமும் மூன்று வேளையும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடலாம். நீண்ட வேலை நேரத்தால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல்நல பிரச் சினைகளை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினமும் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். அதன் மூலம் வெளியாகும் எண்டோர்பின்கள் மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியையும் தக்க வைக்க உதவும். ஓய்வுக்கு போதிய நேரம் ஒதுக்குவதன் மூலமும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    • ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.
    • வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆகும்.

    இதில், ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.

    வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர் ஆவர்.

    31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 111 பேர் உள்ள னர். இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த பெண் மீது புகார் கொடுக்கப்பட்டது.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணை வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சோைன மீனாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திராணி(39). ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் ஜாகீர்நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி நாகதுர்கா(36). இந்திராணியின் தோழியின் மூலமாக நாகதுர்காவுக்கு இந்திராணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை அறிந்த நாகதுர்கா, தான் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இந்திராணியிடம் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ.4 லட்சத்தை நாகதுர்காவிடம், இந்திராணி கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடிக்கவே இந்திராணி பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு நாகதுர்கா மறுத்தார்.

    அதிர்ச்சியடைந்த இந்திராணி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாகதுர்காவை தேடி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.
    • 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , பிரதமமந்திரி கௌசல் விகாஸ் யோஜனா , மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், 4 சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி பயிற்சிகள், சில்லரை விற்பனை வணிகம், பி.பி.ஓ., துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.

    இப்பயிற்சிக்கு இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு இளைஞர் திறன் திருவிழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, முகாமில் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் கலந்து கொண்டு பயிற்சியினை தேர்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்

    இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த ராமர் பூசாரி என்பவர் கூறியுள்ளார். இதனை நம்பி குருசாமி ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.

    பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது.

    கொரோனாவிற்கு பிறகான வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?, கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதா?, தொழில்துறையிலும் - வேலைவாய்ப்பிலும் கொரோனா ஏதாவது மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறதா?... இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடைய எழுகின்றன. இவை அனைத்திற்கும் பதிலளிக்கிறார், பிச்சுமணி துரைராஜ். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பல ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றியவர். இப்போது, அதை சொந்த முயற்சியாக முன்னெடுத்திருக்கிறார். கூடவே தன்னுடைய அனுபவம் மூலம், நேர்காணலில் வெற்றி பெற வழிகாட்டுகிறார். அவர் தொழில்துறையின் நகர்வு பற்றியும், வேலைவாய்ப்பு குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

    *கொரோனா தாக்கத்திற்கு பிறகான தொழில்வாய்ப்புகள் எப்படி உள்ளன?

    கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது. ஆனால் இப்போது தொழில்வாய்ப்புகளை இரு மடங்காக்கி உள்ளது. முடங்கியிருந்த எல்லா துறையும், இப்போது இருமடங்கு - மும்மடங்காக வளர்ச்சி பெற்று, பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    * எந்தெந்த துறை வளர்ச்சி கண்டிருக்கிறது?

    ஐ.டி.துறை கொரோனா காலத்திலும் சுணங்கவில்லை . அதனால் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதே போல மெடிக்கல், ஹெல்த்கேர், கட்டுமானம், சுற்றுலாதுறை , ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், உற்பத்தி துறை, வீடு தேடி பொருள் சேர்க்கும் ஈ-காமர்ஸ் போன்றவை எதிர்பார்த் ததை விட, அதிகம் வளர்ச்சி பெற்றுள்ளன.

    * 'ஒர்க் பிரம் ஹோம்' முறை தொழில்துறையினருக்கும், பணியாளர்களுக்கும் வசதியாக இருக்கிறதா ?

    நேரடியாக பணியாற்றும் அளவிற்கு வசதியாக இல்லாவிட்டாலும், பணி செய்யமுடியாத நிலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை சிறப்பாகவே வழங்குகிறது. அதே போல வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளும் (ஜூ ம் கால், டீம் மீட்டிங்) ஐ.டி.பணியாளர்களுக்கு ஏற்ப , முன்னேறி கொண்டே இருக்கிறது.

    * ஒர்க் பிரம் ஹோம் முறையில் இருந்து அவசர அவசரமாக ஐ.டி. துறையினர் பணிக்கு அழைக்கப்படுவார்களா?

    இல்லை. 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அலுவலக வாழ்க்கைக்கு மாற குறைந்தது ஓரிரு ஆண்டுகள் ஆகும். நகரங்களில் வாழும் ஊழியர்களை தவிர்த்து, வெளியூரில் வசிக்கும் ஊழியர்களும் ஒர்க் பிரம் ஹோம் முறையையே விரும்புகிறார்கள். 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அவசர அவசரமாக அலுவலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டால், அசவுகரியம் காரணமாக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுவார்களோ என்ற அச்சம் எல்லா நிறுவனங்கள் மத்தியிலும் நிழலாடுகிறது.

    அதனால் பகுதி-பகுதியாகவே அழைக்கப்படுவர். உள்ளூர் ஊழியர்கள், பக்கத்து ஊர்களில் வசிப்பவர்கள்... இப்படி 100 சதவிகித அலுவலக வாழ்க்கையை எட்ட , 2 ஆண்டுகள் ஆகலாம்.

    * ஒர்க் பிரம் ஹோம் மாதிரியில் சமீபகாலமாக ஆன்லைன் முறையிலேயே நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. இதை நடத்துவதும், கலந்து கொள்வதும் சுலபமானதாக இருக்கிறதா ?

    நேரடி நேர்காணல்களை விட, நேர்காணல் நடத்தும் நிறுவனங்களுக்கும், கலந்து கொள்பவர்களுக்கும் இது மிகவும் சுலபமானது. மிக குறைந்த நேரத்திலேயே அதிகமானோரை நேர்காணல் செய்து விட முடிகிறது. அதே போல நேர்காணலில் கலந்து கொள்பவர்களும், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டே 4 முதல் 5 நேர்காணல்களில் கலந்து கொள்ள முடிகிறது. சொந்த ஊரில் இருந்து நேர்காணல் நடக்கும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் இல்லை . புதிய இடத்தில் வழி தேடி அலைந்து, டென்ஷனாக வேண்டிய சூழலும் இல்லை . அமர்ந்த இடத்தில் இருந்தே , அமைந்தகரையில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம். அமெரிக்காவில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம்.

    முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு 300 நபர்கள் வரை நேர்காணல் செய்வதே கொஞ்சம் கடினமாக இருக்கும். இப்போது 3 ஆயிரம் நபர்கள் வரை மிக சுலபமாக ஆன்லைனில் நேர்காணல் செய்துவிடலாம். பல ஐ.டி.நிறுவனங்கள் இந்த வேலையை, அவுட்சோர்ஸிங் முறையில் எங்களிடம் பிரித்து கொடுத்திருக்கின்றன.

    * கொரோனாவினால் நிகழ்ந்த நன்மைகள் என்ன?

    பணிவாய்ப்பிற்கான வரையறையை தகர்த்து எறிந்திருக்கிறது. அதாவது கொரோனாவிற்கு முன்பு சில நிறுவனங்கள் அந்தந்த நகரங்களில் வசிப்பவர்களை மட்டுமே பணியமர்த்தி வந்தது. பிறமாவட்ட, மாநில பணியாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தாக்கத்தினால், ஒர்க் பிரம் ஹோம் முறை இத்தகைய வரையறையை முற்றிலுமாக நீக்கி இருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே போல, வெளியூர் பணியாளர்கள் சென்னை , பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் வந்து தங்கியிருந்துதான் பணியாற்ற வேண்டிய நிர்பந்தமும் இப்போது இல்லை ஆன்லைன் நேர்காணல் என்ற நிலை உருவாகியுள்ளது.

    * ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் இழைக்கும் தவறுகள் என்னென்ன ?

    ஆன்லைன்/ஆப்லைன் இவ்விரண்டுமே நேர்காணல்கள்தான். இவ்விரண்டிற்குமே, உங்களை பற்றிய நல்ல - கெட்ட புரிதலை உருவாக்கும் சக்தி உண்டு. அதனால் ஆன்லைன் நேர்காணல் என்று மெத்தனம் காட்ட வேண்டாம். குறித்த நேரத்திற்கு முன்பே ஸ்கைப்/டீம் மீட்டிங்/ ஜூ ம் போன்ற ஆன்லைன் தளங்களில் காத்திருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை பிரகாசமாக வைத்திருங்கள். தடையில்லா இணைய வசதி அவசியம். அதே போல தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். உங்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு தெரிந்த பதில்களை மட்டும் கூறுங்கள். ஆன்லைனில் தானே நேர்காணல் நடக்கிறது, இணையத்தில் பதில் தேடி விடை கூறலாம் என்பது போன்ற வீண் முயற்சிகளை கைவிடுங்கள். ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் நீங்கள் விடைதேடும் முயற்சிகளை கூட கண்டறிந்து கூறிவிடும். அதே போல, இரைச்சல் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த குறிப்புகளை எல்லாம் தவறவிடும்போது தான், தவறுகள் இழைக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

    • மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி காரை பறித்த கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மாரியப்பன் (56), அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகன் தங்கராஜ் (26) ஆகிய 3 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். அதனை நம்பி, நான் அவர்களுக்கு பாண்டியராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டியராஜ் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தங்கராஜ் குடும்பத்தினர் எனக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்தனர். அதனை அவர்கள் இதுவரை திருப்பி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் முதற்கட்டமாக 13 ஆயிரத்து 331 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆரம்ப கல்வி பட்டயபடிப்பு, டிப்ளமோ பட்டயப்படிப்பு, பி.எட்., எம்.எட், உள்ளிட்ட பட்டங்களை படித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் குவிந்தனர்.

    இதனால் கல்வி அலுவலகங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். கலெக்டர் அலுவலக சுவரிலும், நோட்டீசு போர்டிலும் எந்த எந்த பள்ளிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது குறித்த பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் அரசு பள்ளிகளின் பெயர் , பாடம், பணியிடங்களின் எண்ணிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

    அவர்கள் அவற்றை பார்த்து எந்த பள்ளியில் பணியாற்ற விருப்பம் என்பதை தேர்வு செய்து, அவர்கள் அங்கேயே அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ், புகைப்படம் போன்றவைகளை இணைத்து அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை (எஸ்.ஜி.டி.)-193, பட்டதாரி (பி.டி.)-130, முதுகலை பட்டதாரி (பி.ஜி.)-43 என மொத்தம் 366 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 366 பணியிடங்களுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிக்கு திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    சேலம்:

    இந்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில்   முதன்மை ப்ராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் அசோசியேட்ஸ், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    இளங்கலை, முதுகலை பட்டம் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவம் படித்திருக்க வேண்டும்.  8 வருட அனுபவம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மற்றும் கல்வியில் வளர்ச்சி நிறுவனங்கள் அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

    விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்குமாறு நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி கேட்டுக் கொண்டுள்ளது. 
    மத்திய அரசு மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் சார்பில் நடைபெற உள்ள பேஸ்-2 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
    சேலம்:

    இந்திய அரசின் மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) சார்பில் தொழில் நுட்பம் சாராத மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இதன் முதற்கட்ட பேஸ்-1 தேர்வு சமீபத்தில் கம்ப்யூட்டர் வழியாக  நடந்து முடிந்தது.  

     இதற்காக சேலம் சிவதாபுரம்  உள்பட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஏராளமான இளம்பெண்கள், இளை ஞர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக  இந்த தேர்வு நடைபெற்றது. 

    இதனைத் தொடர்ந்து பேஸ்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  விண்ணப்பதாரர்கள்  எடுத்த  மதிப்பெண் அவர்களுடைய பதிவு எண், வரிசை எண்களுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் கட்- அப் மதிப்பெண் எவ்வளவு ? என அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹால்டிக்கெட் வெளியீடு இந்த நிலையில் பேஸ்-1 முதன்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு  பேஸ்-2 முதன்மை தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த இணையதளத்தில் பதிவு எண் அல்லது வரிசை எண் மற்றும் கடவுச் சொல் கொடுத்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை மட்டுமே ஹல்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
    ×