search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பிக்க"

    • கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
    • பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை வைக்கலாம்.

    கிருஷ்ணகிரி, 

    பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனிஷாராணி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், செப் 2-ம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தமிழ்வழிக் கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யாளராகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

    • கோவையில் 6.89 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
    • இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடந்தது.

    முதல், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 1401 முகாம்களில் இதுவரை ஆனைமலையில் 42,731, அன்னூரில் 43,509, கோவை வடக்கில் 16,0160, தெற்கில் 75,409, கிணத்துக்கடவில் 23,346 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    அதேபோல், மதுக்கரை யில் 61,827, மேட்டுப்பா ளையத்தில் 58,072, பேரூரில் 76,025, பொள்ளாச்சியில் 62,306, சூலூரில் 73,300, வால்பாறையில் 12577 விண்ணப்பங்கள் என மொத்தம் 11 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இம்முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் சில கார ணங்களால் விண்ணப்பப் படிவம் பெறாமலும், சில குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பப் படிவம் பெற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களில் சமர்ப்பிக்காமலும் இருப்பது தெரியவந்தது.

    முதல்வரின் உத்தர வின்படி வருவாய்த் துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும், ஏற்கெனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்களும் பதிவு செய்ய 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. அதன்படி விண்ணப்பத்தை பதிவு செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

    இன்றும், நாளையும் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக் கொள்ளலாம்.ஏற்கெனவே முதல், இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    விண்ணப்பப் படிவங்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளித்து பயனடையலாம் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
    • விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையலாம்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் இவ்வாண்டிற்கான நேரடிசேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தருமபுரி மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அரூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கு 31.7.2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் சேர்க்கை சதவீதம் குறைவாக உள்ளதால் அதனை அதிகரித்துடும் பொருட்டு நேரடி சேர்க்கை 16.8.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை.

    2021ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம்.

    தருமபுரி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் (1வருடம்) மற்றும் எந்திர வேலையாள் (2வருடம்).

    இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேனுபேக்ட்சரிங் டெக்னீசியன் (1 வருடம்), பேசிக் டிசைனர் - விர்ச்சிவல் வெரிபையர் (2 வருடம்)

    அரூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளான பொருத்துநர் (2 வருடம்), ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டீசனிங் டெக்னீசியன் ( 2 வருடம்), மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் ( 1வருடம்).

    சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    ஒரிஜினல் 10-ம் வகுப்பு மார்க் சீட், ஒரிஜினர் டி.சி. சாதி சான்று, ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம்.-1, e mail ID மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50- சேர்க்கை கட்டணம் ரூ.195- (அ) ரூ.185

    எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையலாம்.

    விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு - 9445803042, 9361745995, 9894930508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி,

    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளை ஞர்களது பணியை அங்கீ கரிக்கும் பொருட்டு, முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருதில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படுகிறது.

    அதன்படி, 2023-24ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

    அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குரூப் “பி” மற்றும் குரூப் “சி” நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்கா லியிடங்களை அறி வித்துள்ளது.
    • இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் "ஒருங்கி ணைந்த பட்டதாரி நிலை யிலானத் தேர்வு தொடர் பான அறி விப்பினை வெளி யிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்ச கங்கள், துறைகள், நிறு வனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பா யங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "பி" மற்றும் குரூப் "சி" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்கா லியிடங்களை அறி வித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இவ்வி வரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ noticeCGLE03042023.pdf (https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ noticeCGLE03042023.pdf) என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

    இப்பணிக்காலி யிடங்க ளுக்கு www.ssc.nic.in (http://www.ssc.nic.in/) என்ற பணியாளர் தேர்வாணை யத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இத்தேர்வுக ளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3-ந்தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4-ந்தேதி ஆகும்.

    ஜூலை மாதம் தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்க ளிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், இவ்விணை யதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொ லிகளைக் கண்டு பயன்பெ றுமாறும், தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்ப யிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் மாவட்ட கார்மேகம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு பணிக்கான போட்டி

    தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்புமத்திய அரசு பணிக்கான போட்டி

    தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
    • இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.

    சேலம்:

    மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், அதன் தன்னாட்சி நிறுவனமாகிய இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த சமூக மேம்பாட்டு வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் தலைமை யிலான இளையோர் கலந்துரையாடல், 5 உறுதிமொழிகள் குறித்த நேர்மறை விவாதம் நடை பெறும். இதில் குறைந்த பட்சம் 500 இளையோர் (இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்) பங்கேற்பர்.

    இதன் நிறைவில் எதிர்கால இந்தியாவிற்கான திட்டங்கள் உருவாக ஆணை செய்வார்கள். இந்நிகழ்ச்சியை சிறப்பாக திட்டமிட்டு அமைப்ப தற்கான செலவு தொகை யாக ரூ.20 ஆயிரம் பொறுப்பேற்று நடத்தும் சமூக அடிப்படை நிறுவ னத்திற்கு நிகழ்ச்சி முடிந்தபின் தரப்படும்.

    இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்போர் எவ்வித அரசியல், கட்சி சார்பற்றவர்களாகவும், எந்த வித களங்கமும், இல்லாத முன்வரலாறு கொண்டவர்களாகவும் இருப்பதோடு நிறுவனங்கள் மீது எவ்வித குற்ற வழக்கும் இருக்கக் கூடாது.

    மேலும் இளையோர் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி முடிக்க போதிய நிறுவன அமைப்பு பலம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் டர்வின் சார்லஸ்டன் தெரிவித்து உள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.
    • பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

    சேலம்:

    தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்,பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள். நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக சேலம் மாவட்டத்தில் செயல்ப டுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலை மையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான www.tnpcb.gov.in -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும் எனவே தகுதி

    யானவர்கள் விண்ணப்பிக்கு மாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம், வட்டார அளவில் காலியாக உள்ள, 2 வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் 12 உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், ஒரு கணக்காளர் மற்றும் எழுத்தர் என 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கம் திறன் பெற்று இருக்க வேண்டும். உதவி தொழில் நுட்ப மேலாளர்களுக்கான பணியிடங்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் திறன் முடித்திருக்க வேண்டும். கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    இந்தபணியிடங்கள் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, அனுபவம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பணி நியமன முகமைகள், தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்(வே.தொ.மே.மு), வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நெ. 1, செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், சேலம் மாவட்டம்-636 001 என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

    சேலம், அக்.8-

    மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளி யிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

    இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புடன் 1.1.2022 அன்றைய நிலையில் வயது வரம்பு, எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

    மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகை யில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 11-ந்தேதி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் இப்பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடைபெறவுள்ளது

    அரியலூர்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜூலை 2023 மாத பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி அன்று நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை கொண்டதாக இருக்கும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை "கமாண்டன்ட், ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248003" என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரி இணைய வழியாக பொது பிரிவினர் ரூ.600-ம் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-ம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1.7.2023-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in ல் பார்க்கவும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

    • சேலம் மாவட்டத்தில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இதற்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

    வெல்டர், பெயிண்டர் (பொது), போன்ற பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பிலும், பிட்டர், மெசினிஸ்ட் கிரைண்டர், கம்மியர் கருவிகள், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஹஊ மெக்கானிக், கோபா, போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், இ மெயில் ஐ.டி, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்), முன்னுரிமை கோரினால் முன்னிரிமை சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ.245 ஆகும். பயிற்சிக் கட்டணம் இல்லை.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்க ளுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாட நூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

    முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.
    • தோட்டக்கலைத்துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்க லைத்துறை உதவி இயக்குநர் கோதைநாயகி வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்கு, உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.

    சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 2022-2023 -ல் அனைத்து விவசாயிகளும் இணையதளத்தில் https://tnhorticulture.tn.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால் மட்டுமே மானியம் பெற இயலுமென தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

    எனவே, பெத்தநா யக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி தோட்டக்கலைத்துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×