search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் பறிமுதல்"

    • ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளில் விற்பனை செய்தனர்.
    • புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் ஊத்தமதானி கிராமத்தில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளில் விற்பனை செய்வதாக சோழபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெ க்டர்கள் சற்குணன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீஸ் ஏட்டு தேவேந்திரன் மற்றும் தனிப்படை போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் உத்தமதானி கல்லூர் சாலையில் ஒரு வாடகை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான அரசு தடை விதித்திருந்த புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.

    இதை தொடர்ந்து 2 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த வீட்டில் இருந்த கும்பகோணம் அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (வயது 28), கடிச்சம்பாடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் வாடகை வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது.

    சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சணாமூர்த்தி, ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.
    • ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    உரிய அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்தியதால், உடனடியாக அந்த காரை பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக, குமாரபாளையம் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. இதில் 105 வாகனங்கள் சோதனை செய்து 21 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றிய மணல் லாரிகள் 2 சிறைபிடிக்கப்பட்டது.

    இந்த குற்றங்களுக்கு வரியாக ரூ.55 ஆயிரத்து 965, அபராதமாக கட்டணம் ரூ.60 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் நேற்று நடந்த தணிக்கையில் வாடகைக்கு பயன்படுத்திய சொந்த கார் ஒன்று பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று வந்தது.
    • கார் மற்றும் 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று வந்தது.

    அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    பின்னர் கார் மற்றும் 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஐரோப்பாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் மோசமான விகிதங்களில் லாட்வியா உள்ளது.
    • பிப்ரவரி முதல் மே 2022 வரை, உக்ரைனுக்கு 900 வாகனங்களுக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளதாக குழு கூறியுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியாவில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் ராணுவ மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அந்நாட்டு அரசு நன்கொடையாக அனுப்பி வைக்கிறது.

    லாட்வியா நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது நூற்றுக்கணக்கான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த 2 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரத்திற்கு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த கார்கள், உக்ரைனில் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.

    இந்த கார்களை உக்ரைனின் பேரழிவிற்குள்ளான நகரங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளுக்கு வழங்குவதற்காக எட்டு வாகனங்களும் அஜெண்டம் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. பிப்ரவரி முதல் மே 2022 வரை, உக்ரைனுக்கு 900 வாகனங்களுக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளதாக குழு கூறியுள்ளது. இப்போது மொத்தம் 1,200 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    ஐரோப்பாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் மோசமான விகிதங்களில் லாட்வியா உள்ளது. ஆண்டுக்கு 3,500 வழக்குகள் பதிவாகுவதாக கூறப்படுகிறது.

    • புதுவையில் இருந்து கேரளாவுக்கு கார் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     விழுப்புரம்:

    புதுவை மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டியாஸ் காரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோட்டகுப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து போலீசாரும் தீவிர கண்க்காணிப்பில் இருந்தனர். மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட தாழங்காடு கிராமம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் முகமது அஸ்லாம் (வயது 24). கேரள மாநிலம் ஏரிக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து கேரளாவுக்கு காரை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.உடனே போலீசார் அவரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி காரை பறித்த கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மாரியப்பன் (56), அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகன் தங்கராஜ் (26) ஆகிய 3 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். அதனை நம்பி, நான் அவர்களுக்கு பாண்டியராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டியராஜ் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தங்கராஜ் குடும்பத்தினர் எனக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்தனர். அதனை அவர்கள் இதுவரை திருப்பி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×