search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிபாளையத்தில் வாடகைக்கு ஒட்டிய சொந்த கார் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட கார். 

    பள்ளிபாளையத்தில் வாடகைக்கு ஒட்டிய சொந்த கார் பறிமுதல்

    • கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.
    • ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    உரிய அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்தியதால், உடனடியாக அந்த காரை பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக, குமாரபாளையம் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. இதில் 105 வாகனங்கள் சோதனை செய்து 21 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றிய மணல் லாரிகள் 2 சிறைபிடிக்கப்பட்டது.

    இந்த குற்றங்களுக்கு வரியாக ரூ.55 ஆயிரத்து 965, அபராதமாக கட்டணம் ரூ.60 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் நேற்று நடந்த தணிக்கையில் வாடகைக்கு பயன்படுத்திய சொந்த கார் ஒன்று பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×