search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்ப்பு"

    • இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்து உள்ளது.
    • GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

    வருகிற 14 - ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது.விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ள GOAT படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உருவாகி உள்ளது.

    கடந்த பல மாதங்களாகவே விஜய் கண்டிப்பாக அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மேலும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.




    வருகிற 2026- ல் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார் .தளபதி -69' படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தளபதி - 69 படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்து வருகிறது.இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜெ. பாலாஜி ,வெற்றிமாறன், எச்.வினோத் உள்ளிட்டோரில் ஒருவர் தான் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்து உள்ளது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்து உள்ளார்

    GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது
    • நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது

    1996-ம் ஆண்டில் சுந்தர் சி-யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகியவற்றில்உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுராஜ். 1997-ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி-க்கு தொடர்ந்து உதவியதோடு ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார்.

    பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை வைத்து 2006-ல் தலைநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுராஜ். 'அதன் பின் 'மருதமலை' படத்தை 2007-ல் சுராஜ் இயக்கினார். இப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். 2009-ல், தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :-



     

    மருதமலை படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் ஸ்கிரிப்டை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கினார். இதில் நடித்திருந்தால் மருதமலையே அவரது முதல் போலீஸ் வேடமாக இருந்திருக்கும். ஆனால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் "சச்சின்" படம் காரணமாக விஜய் இதிலிருந்து விலகினார்.

    இதற்கிடையில் நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது. அவர் அதே நேரத்தில் "கிரீடம்"படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததாலும், வடிவேலுக்கு அப்போது அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததாலும் எங்களால் இந்த படத்தை தொடர முடியவில்லை.

    பிறகு நான், சுந்தர்.சி பணியாற்றிய "கிரி"படம் மூலம் அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது. உருவானது.அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர்  கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை.
    • அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் சட்டசபை கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.

    மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை 24-ந் தேதி திறந்து வைக்க செல்கிறார். 25-ந்தேதி சென்னையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 26-ந்தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.

    இதனால் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் தனியாகவும், வேளாண் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுகிறது.

    பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அறிய துறை வாரியான ஆய்வுக் கூட்டங் கள் தலைமைச் செயலகத் தில் நேற்று முதல் நடை பெற்று வருகிறது.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொழில்துறை மற்றும் சிறு தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார். இதேபோல் ஒவ்வொரு துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வணிகர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நிதி அமைச்சர் ஆலோசனைகள் நடத்த இருக்கிறார்.

    இதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். முதலமைச்சர் கூறும் கருத்துக்களுக்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்பதால் தேர்தலில் மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெற செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    அதேபோல் பெண்கள் மாணவ-மாணவிகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப் புகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று உள்ளதால் புதிதாக தொழில் துவங்கும் நிறுனங்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    உலக நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வலுவான இணைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறு-குறு நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்து வருவதால் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் அவற்றை இடம் பெற செய்வார் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் சலுகைகள் இடம்பெறும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வேளாண் பட்ஜெட்டும் தயாராகி வருகிறது.

    அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    ஏனென்றால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில வரிகளை தவிர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார். இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

    இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதன்பிறகு கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவிட்டது.

    இந்த சூழலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம்கூட வேண்டிய சட்டசபைக் கூட்டம் இதுவரை தொடங்க படவில்லை.

    அடுத்த மாதம் தான் (பிப்ரவரி) சட்டசபை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்கு கவர்னர் அழைக்கப்படுவாரா? அல்லது கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்குமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

    • பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
    • வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உடுமலை:

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 6-ந்தேதி முதல் வரும் 10-ந்தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுச்சீட்டு சமர்ப்பித்து, முன்னதாகவே 'ஹால் டிக்கெட்' பெற்று வருவோர் மட்டுமே, செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    • குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.
    • ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 200 பத்திரப்பதிவுக்கான டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.

    ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் முதல் நாளே முகூர்த்த தினம் என்பதால் பத்திரங்கள் அதிகம் பதிவாகும் என எதிர்பார்த்து 200 டோக்கன்கள் வழங்கப்பட்டது. தினமும் அதிகம் பதிவாகும் அலுவலகங்களில் 100க்கு பதிலாக, 150 டோக்கன்கள் வழங்கலாம் என்று பத்திரப்பதிவு துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார்.

    திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஜாயின்ட்-1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார் - பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இதுதவிர்த்து நல்லூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், கணியூர், உடுமலை, கோமங்கலம் என 15 அலுவலகங்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது. பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய இடங்களில் 100க்கு மேல் பத்திரங்கள் பதிவாயின. ஆயுத பூஜை முடிந்தநிலையில் பத்திரப்பதிவு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்ட பதிவாளர் லிங்கேஸ்வரன் கூறுகையில், வரும் முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கிறோம்.

    சர்வர் பிரச்னை காரணமாக பதிவு பணி சற்று தாமதம் ஆனது என்றார்.

    • இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 15 மி.மீட்டரும், 24-ந் தேதி 12 மி.மீட்டரும், 25-ந் தேதி 40 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

    இதனிடையே வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 64 சதவீதமாகவும் இருக்கும்.

    மழைக்கு வாய்ப்பு

    சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது.
    • ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 11.41 சதவீத சரிவை சந்தித்துள்ளது.இந்திய ஆயத்த ஆடை ரகங்களுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி 2021 வரை நீடித்த கொரோனா பெருந்தொற்று உலகளாவிய நாட்டு மக்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தையும், பொருட்கள் நுகர்விலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச சந்தை, இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகர்கள், ஆடை இறக்குமதியை குறைத்துள்ளனர். மக்களின் சிக்கன நடவடிக்கை, உணவு முதலான அடிப்படை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, வெளிநாடுகளில் ஆடை நுகர்வை குறையச் செய்துள்ளது.இதன் எதிரொலியாக இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவு நிலையை சந்தித்துவருகிறது. நடப்பு நிதியாண்டிலும், ஆடை ஏற்றுமதி எதிர்பார்த்த அளவில் எழுச்சி பெறவில்லை. ஏற்றுமதி வர்த்தக மதிப்பு மாதந்தோறும் சரிந்துகொண்டே செல்கிறது.

    கடந்த 2022 ஜூலை மாதம் 10,994 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பாண்டு ஜூலை மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,815 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதம் 9,382 கோடியாக 4.42 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் 49,133 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், 55,463 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 5மாதங்களில் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 11.41 சதவீதமும்,டாலரில் கணக்கிடும்போது 15.98 சதவீதமும் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    வழக்கமாக ஒரு நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டால் மற்றொரு நாட்டுக்கான வர்த்தகம் அதிகரிக்கும். ஆனால் தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நமது நாடு மட்டுமல்ல, சீனா போன்ற மற்ற நாடுகளின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. பல நாடுகளில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; இதனால் மக்களின் ஆடை நுகர்வு குறைந்துள்ளது.அதற்காக பேஷன் ஆடை மீதான மக்களின் மோகம் குறையவில்லை. சற்று விலை குறைவான ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.இவ்வாறு சபரிகிரீஷ் கூறினார்.

    இந்தநிலையில் திருப்பூருக்கான புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடக்கும் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் வரிசையில், உலக அளவில் அதிக ஆடை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக திகழ்வது ஜெர்மனி. அந்நாட்டின் மொத்த இறக்குமதியில், இந்தியாவில் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஜெர்மனியுடன் கூடுதல் வர்த்தக தொடர்பை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட பேரிடர் இருந்தாலும் கூட கடந்த 5 ஆண்டுகளாக, இந்திய -ஜெர்மனி இடையேயான வர்த்தகம் நிலையாக இருக்கிறது. சீனா, வங்கதேச நாடுகள், ஜெர்மனி இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கின்றன. துருக்கி, வியட்நாமிற்கு அடுத்தபடியாக, இந்தியா ஐந்தாவது இறக்குமதி நாடாக இருக்கிறது.சீனாவின் பங்களிப்பு 23.16 சதவீதம், வங்கதேசத்தின் பங்களிப்பு 21 சதவீதம், இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. இனிவரும் நாட்களில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொரோனா பேரிடர் இருந்தும் ஜெர்மனி உடனான, இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கவில்லை. உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் காரணமாக மந்தமாக இருந்தாலும், ஏராளமான வர்த்தக வாய்ப்பு, ஜெர்மனியில் கொட்டிக் கிடக்கின்றன. இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க வசதியாக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஏற்றுமதியாளர் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது. பொருளாதார மந்தநிலையில் இருந்து ஜெர்மனி எளிதில் மீண்டுவிட்டது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. புதிய வர்த்தக வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி என, இரண்டு நாட்கள் நடக்கும், வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறலாம்.

    விவரங்களுக்கு, ஏ.இ.பி.சி., அலுவலகத்தை 99441 81001, 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது
    • பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது . இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படியும் , தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக செயல்பட்டுவரும் டான்ஹோடா விற்பனை நிலையத்தில் பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது . இங்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் தினசரி டான்ஹோடா விற்பனை நிலையத்தை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறும்படி கேட்டுக்கொ ள்ளப்பட்டனர்.இந்நிகழ்ச்சி யில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் , தோட்டக்க லை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி , தோட்டக்கலை உதவி அலுவலர் வெங்கடாசலபதி ,வேளாண்மை உதவி அலுவலர் அமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
    • மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உலக மகளிர் தின விழா மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல் வீதியில் உள்ள ஆர்.ஓ.ஏ. சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரசர்வதேச கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராகவேந்திரன், வணிகர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் அறம்செய் அறக்கட்டளை செயலாளர் மரகதவல்லி செந்தில் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர்அய்யர் கலந்துகொண்டு சாதனை படைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில்

    இந்தியாவில் அரசியில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு தான் பெண்கள் வெளிஉலகத்திற்கு வரத்தொடங்கினர்.

    குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கி ஒரு தேர்தலில் பெண் நிற்கும்போது அவரை எதிர்த்து ஒருசில பெண்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டு ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

    பொதுவாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்கள் அவர்கள் பணியை அவர்களது கணவர்கள் மேற்கொள்வதை அனுமதிக்கக்கூடாது பெண்கள் தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இதில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகணேசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், கனகசபை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், அறம்செய் அமைப்பு சிவக்குமார், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்ஜெயின் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது.
    • புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது.

    திருப்பூர்:

    உலகின் மிகப்பெரிய மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகளிடையே நிலவும் போர் சூழலால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகியுள்ளன. போர் சூழல் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தொழில்களும், விவசாயமும் பாதித்தது. கோதுமை, பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி சமையல் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போர் சூழல் காரணமாக உலக மக்களின் வாங்கும் திறன் குறைந்து போயுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போரின் எதிர்விளைவுகளை சந்திக்க தங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிக்கொண்டனர். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டனர்.

    இதன் காரணமாக இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும் நேரடியாக பாதித்தது. திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டும் 75 சதவீதம். கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வுக்கு பிறகு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிய ஆர்டர் வெகுவாக குறைந்துவிட்டது.

    பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது. சாயக்கழிவு சுத்திகரிப்பு, நூல் விலை, மூலப்பொருள் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து எளிதாக மீண்டு வந்த திருப்பூருக்கு உக்ரைன் போர் சூழல் எதிர்பாராத சவாலாக மாறிவிட்டது.புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதற்கு பிறகும் அந்நாடுகள் போராடி வருகின்றன.

    இருப்பினும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை மாறி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் இருந்து அமெரிக்கா இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளும் படிப்படியாக இயல்பான இயக்கத்துக்கு மாறி வருகின்றன.இந்த நிதியாண்டை சமாளித்தால் போதும். வழக்கமான அளவு ஆர்டர்கள் வரத்துவங்கியதும் திருப்பூரில் மீண்டும் பரபரப்பு கூடிவிடும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். 

    • இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் வளரவேண்டும்.
    • இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கமாகும். இந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஒரு நல்ல தொடக்கமாகும்.

    இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் இது வளரவேண்டும்.

    கொங்கு மண்டலத்தில் இருக்கும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி பால் உற்பத்தியிலும் தங்களது உழைப்பின் மூலம் கணிசமான வருவாயை பெருக்கி வருகின்றனர்.

    அவர்களை போன்று தாங்களும் தங்களது உழைப்பில் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தி பால் உற்பத்தியை பெருக்கி தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும்.

    கடந்த மாதம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் பால் குளிரூட்டும் கருவி அமைக்கப்ட்டது.

    எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றது.

    பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில ஆத்மா திட்டக்குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக் குழுத்தலைவர் தமிழரசி, பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த நிலையில், இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. இதில் சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சதிரன், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்கி தர வேண்டும் என்பது முதல் - அமைச்சரின் எண்ணம். தமிழகம் முழுவ தும் முகாம் நடத்தி 1½ ஆண்டில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையே இருக்க கூடாது என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். அதனை செயல்படுத்திட அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கிராமங்கள் தோறும் எடுத்து செல்ல வேண்டும். இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், பொறியியல், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு படிப்பு

    படித்தவர்கள் வரை கலந்து கொண்டு விலை வாய்ப்பை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் அனைத்து பகு தியை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் இல வச பேருந்து வசதி களும், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    ×