search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exports"

    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
    • மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழில் சார்ந்த ஏற்றுமதிகள், பொறியியல் சம்பந்தமான ஏற்றுமதிகள் மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசின் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

    அதில் மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்று உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022-23-ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023-ம் ஆண்டிற்கான விவரங்களை – ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

    ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக் கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டு உள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம் தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது.

    மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குவதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    • இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது.
    • ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 11.41 சதவீத சரிவை சந்தித்துள்ளது.இந்திய ஆயத்த ஆடை ரகங்களுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி 2021 வரை நீடித்த கொரோனா பெருந்தொற்று உலகளாவிய நாட்டு மக்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தையும், பொருட்கள் நுகர்விலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச சந்தை, இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகர்கள், ஆடை இறக்குமதியை குறைத்துள்ளனர். மக்களின் சிக்கன நடவடிக்கை, உணவு முதலான அடிப்படை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, வெளிநாடுகளில் ஆடை நுகர்வை குறையச் செய்துள்ளது.இதன் எதிரொலியாக இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவு நிலையை சந்தித்துவருகிறது. நடப்பு நிதியாண்டிலும், ஆடை ஏற்றுமதி எதிர்பார்த்த அளவில் எழுச்சி பெறவில்லை. ஏற்றுமதி வர்த்தக மதிப்பு மாதந்தோறும் சரிந்துகொண்டே செல்கிறது.

    கடந்த 2022 ஜூலை மாதம் 10,994 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பாண்டு ஜூலை மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,815 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதம் 9,382 கோடியாக 4.42 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் 49,133 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், 55,463 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 5மாதங்களில் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 11.41 சதவீதமும்,டாலரில் கணக்கிடும்போது 15.98 சதவீதமும் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    வழக்கமாக ஒரு நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டால் மற்றொரு நாட்டுக்கான வர்த்தகம் அதிகரிக்கும். ஆனால் தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நமது நாடு மட்டுமல்ல, சீனா போன்ற மற்ற நாடுகளின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. பல நாடுகளில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; இதனால் மக்களின் ஆடை நுகர்வு குறைந்துள்ளது.அதற்காக பேஷன் ஆடை மீதான மக்களின் மோகம் குறையவில்லை. சற்று விலை குறைவான ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.இவ்வாறு சபரிகிரீஷ் கூறினார்.

    இந்தநிலையில் திருப்பூருக்கான புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடக்கும் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் வரிசையில், உலக அளவில் அதிக ஆடை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக திகழ்வது ஜெர்மனி. அந்நாட்டின் மொத்த இறக்குமதியில், இந்தியாவில் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஜெர்மனியுடன் கூடுதல் வர்த்தக தொடர்பை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட பேரிடர் இருந்தாலும் கூட கடந்த 5 ஆண்டுகளாக, இந்திய -ஜெர்மனி இடையேயான வர்த்தகம் நிலையாக இருக்கிறது. சீனா, வங்கதேச நாடுகள், ஜெர்மனி இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கின்றன. துருக்கி, வியட்நாமிற்கு அடுத்தபடியாக, இந்தியா ஐந்தாவது இறக்குமதி நாடாக இருக்கிறது.சீனாவின் பங்களிப்பு 23.16 சதவீதம், வங்கதேசத்தின் பங்களிப்பு 21 சதவீதம், இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. இனிவரும் நாட்களில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொரோனா பேரிடர் இருந்தும் ஜெர்மனி உடனான, இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கவில்லை. உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் காரணமாக மந்தமாக இருந்தாலும், ஏராளமான வர்த்தக வாய்ப்பு, ஜெர்மனியில் கொட்டிக் கிடக்கின்றன. இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க வசதியாக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஏற்றுமதியாளர் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது. பொருளாதார மந்தநிலையில் இருந்து ஜெர்மனி எளிதில் மீண்டுவிட்டது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. புதிய வர்த்தக வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி என, இரண்டு நாட்கள் நடக்கும், வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறலாம்.

    விவரங்களுக்கு, ஏ.இ.பி.சி., அலுவலகத்தை 99441 81001, 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக்கொடுப்பதில் திருப்பூருக்கு முக்கிய பங்கு உண்டு.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் 4.42 சதவீதம் குறைந்துள்ளது.

    திருப்பூர், செப்.17-

    திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக்கொடுப்பதில் திருப்பூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு மாதம் அகில இந்திய அளவில் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி விவரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதத்துக்கான அகில இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 382 கோடியே 45 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.9 ஆயிரத்து 815 கோடியே 91 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் 4.42 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.55 ஆயிரத்து 463 கோடியே 57 லட்சத்திற்கு நடந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ரூ.49 ஆயிரத்து 133 கோடியே 96 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 11.41 சதவீதம் குறைவாகும்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் 69.20 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி
    • இறக்குமதி 14 சதவீதம் குறைந்துள்ளது

    இந்தியாவின் ஒட்மொத்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 60.09 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா 69.20 அமெரிக்க டாலர் அளவில் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் தற்போது 13 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இந்த குறைவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளது. 2022 ஜூன் மாதத்தில் 80.12 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்த இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 14 சதம்வீதம் குறைத்து 68.98 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது.

    இறக்குமதி ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசம் 10.92 பில்லியனில் இருந்து 8.89 பில்லியனாக குறைந்துள்ளது.

    ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 182.70 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இது கடந்த ஆண்டை விட 7.29 சதவீதம் குறைவாக ஏற்றுமதி செய்துள்ளது.

    • தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
    • கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அங்கு கடைகள் அமைத்திருந்த சிறு, குறு வியாபாரிகள் தங்களது முதலீடுகளை இழந்து கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு கடை அமைத்திருந்த 57 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளை சார்பாக வியாபாரி சசிகுமாரிடம் வழங்கப்பட்டது.

    இதில் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், கடை வியாபாரிகளின் நிலையை விளக்கி, அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

    • மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது.
    • தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் தகவல் அடிப்படையில் மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவர ங்களை பராமரிக்கிறது. இந்தநிலையில் கடந்த நிதியாண்டு க்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிட ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 62 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக இருந்த தமிழக த்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்து ள்ளது. மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டா மிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022-23) ரூ.36 ஆயிரத்து 419 கோடி யாக உயர்ந்துள்ளது. இருப்பி னும் முந்தைய ஆண்டில் 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அள விலான பங்களிப்பு 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.

    பருத்தி நூலிழை 'டி- சர்ட்' வகைகள் - ரூ.8,396 கோடி , குழந்தைகளுக்கான பருத்தி நூலிழை பின்னலாடைகள் - ரூ.3,790 கோடி , பாலியஸ்டர் உள்ளி ட்ட செயற்கை நூலிழை 'டி-சர்ட்'கள்-ரூ. 2,493 கோடி , இரவு அணியும் பருத்திபின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - ரூ. 1,933 கோடி , இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா- ரூ.1,288 கோடி , டி-சர்ட் அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் ரூ.1,075 கோடி , உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்க ப்பட்ட மதிப்பு கூட்டிய குழந்தைகள் பின்ன லாடைகள் -ரூ. 806 கோடி ,பருத்தி நூலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கள்-ரூ. 805 கோடி , பருத்தி நூலிழை யிலான இதர பின்ன லாடைகள் - ரூ.705 கோடி , செயற்கை நூலிழை உள்ளாடைகள் ரூ.688 கோடிக்கு ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு இதர பின்ன லாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டி வேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    • மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் தகவல் அடிப்படையில் மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது. இந்நிலையில் கடந்த நிதியாண்டு க்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 62 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022-23) ரூ.36 ஆயிரத்து 419 கோடி யாக உயர்ந்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டில் 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அளவிலான பங்களிப்பு 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.

    பருத்தி நூலிழை 'டி- சர்ட்' வகைகள் - ரூ.8,396 கோடி , குழந்தைகளுக்கான பருத்தி நூலிழை பின்னலாடைகள் - ரூ.3,790 கோடி , பாலியஸ்டர் உள்ளி ட்ட செயற்கை நூலிழை 'டி-சர்ட்'கள்-ரூ. 2,493 கோடி , இரவு அணியும் பருத்திபின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - ரூ. 1,933 கோடி , இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா- ரூ.1,288 கோடி , டி-சர்ட் அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் ரூ.1,075 கோடி , உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டிய குழந்தைகள் பின்னலாடைகள் -ரூ. 806 கோடி ,

    பருத்தி நூலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கள்-ரூ. 805 கோடி , பருத்தி நூலிழையிலான இதர பின்னலாடைகள் - ரூ.705 கோடி , செயற்கை நூலிழை உள்ளாடைகள் ரூ.688 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு இதர பின்னலாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டி வேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    • ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நுாற்பாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன.

    ராஜபாளையம்

    தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள், பேண்டேஜ் மருத்துவ துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது அதன்படி திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், ராஜபாளையத்தில் இருந்து பஞ்சு நூல் மற்றும் ராஜ பாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் பகுதிகளில் இருந்து பாண்டேஜ் மருத்துவ துணி போன்ற பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட சரக்குகள், கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருப்பு வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அந்த நாட்டு மக்கள் சிக்கன நடவடிக்கையில் உள்ளனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து, எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கணிசமாக அளவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,680 கோடியாக குறைந்துள்ளது. 2022 ஏப்ரலில் ரூ.8,831 கோடியாக இருந்த பருத்தி நுால், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி, நடப்பாண்டில், ரூ. 7 ஆயிரத்து 282 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நுாலிழை 'பேப்ரிக்' மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ. 3 ஆயிரத்து 477 கோடியாக இருந்தது. இந்தாண்டில், ரூ.3ஆயிரத்து 223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது

    இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.348 கோடியாக இருந்த நிலையில் தற்போது, ரூ.274 கோடியாக குறைந்துள்ளது. 'கார்பெட்' ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ.952 கோடியாக இருந்து, ரூ. 862 கோடியாக குறைந்துள்ளது.

    கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தி யாகும் கார்பெட் ஏற்றுமதி ரூ.1,182 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ரூ.989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு, அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு-நுால் விலையுடன் தயார்நிலையில் இருந்தும், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. நுாற்பாலைகளும், உற்பத்தியை குறைத்து உள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல், இயல்புநிலை திரும்பாது. போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.

    இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது. எனவே அனைத்து தரப்பி னரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்து றையினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு
    • ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு

     தோஹா:

    இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

    கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கேரளாவிற்கு காய்கறிகள் செல்வது பாதியாகக் குறைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கேரளாவிற்கு 90 சதவீத காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு தினசரி 50 ல் இருந்து 60 லோடு வரை காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கேரளாவிற்கு காய்கறிகள் செல்வது பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் காய்கறி வர்த்தகசபை தலைவர் வைத்திய லிங்கம்,செயலாளர் குமார் ஆகியோர் கூறியதாவது.

    மேட்டுப்பாளையம் காய்கறிமார்க்கெட்டில் இருந்து 90 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தினசரி 60 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும்.ஆனால் தற்போது கேரளாவில் பெய்யும் மழை காரணமாக தினசரி 25 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றிச்சென்ற லாரிகள் மழை காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிவழியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

    மேலும் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்தாலும் காய்கறிகளை இறக்கிவைக்க முடியாமல் அங்கேயே நிறுத்தப் பட்டுள்ளன. இத்தகைய காரணங்களால் கேரளாவிற்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காய்கறிகள் தேக்கம் அடையாமல் இருக்க தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×