search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரப்பதிவு களை கட்ட வாய்ப்பு
    X

    கோப்பு படம்.

    பத்திரப்பதிவு களை கட்ட வாய்ப்பு

    • குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.
    • ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 200 பத்திரப்பதிவுக்கான டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.

    ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் முதல் நாளே முகூர்த்த தினம் என்பதால் பத்திரங்கள் அதிகம் பதிவாகும் என எதிர்பார்த்து 200 டோக்கன்கள் வழங்கப்பட்டது. தினமும் அதிகம் பதிவாகும் அலுவலகங்களில் 100க்கு பதிலாக, 150 டோக்கன்கள் வழங்கலாம் என்று பத்திரப்பதிவு துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார்.

    திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஜாயின்ட்-1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார் - பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இதுதவிர்த்து நல்லூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், கணியூர், உடுமலை, கோமங்கலம் என 15 அலுவலகங்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது. பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய இடங்களில் 100க்கு மேல் பத்திரங்கள் பதிவாயின. ஆயுத பூஜை முடிந்தநிலையில் பத்திரப்பதிவு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்ட பதிவாளர் லிங்கேஸ்வரன் கூறுகையில், வரும் முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கிறோம்.

    சர்வர் பிரச்னை காரணமாக பதிவு பணி சற்று தாமதம் ஆனது என்றார்.

    Next Story
    ×