search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
    X

    நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    • இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 15 மி.மீட்டரும், 24-ந் தேதி 12 மி.மீட்டரும், 25-ந் தேதி 40 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

    இதனிடையே வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 64 சதவீதமாகவும் இருக்கும்.

    மழைக்கு வாய்ப்பு

    சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×