search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jail"

    இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

    ஜெயங்கொண்டம், நவ.24-

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் அருண்பிரசாத் (வயது 28). இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

    இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின்படி இந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்ய ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

    விசாரணையில், சேலம் மாவட்டம், வீராணம் கிராமத்தை சேர்ந்த வீமனூர் தங்கராஜ் மகன் சரவணன்(19), மோட்டூர் கோவிந்தசாமி மகன் கோகுலகண்ணன்(19), கோரத்துப்பட்டி சுப்பிரமணியன் மகன் சந்திரன்(20) ஆகிய 3 பேரும், அருண்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ஒரு மோட்டார் சைக்கிள், சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் நேற்று மாலை திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போ லீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆனத்தூர் காலனியை சேர்ந்த ரவி மகன் ஜான் என்கிற ராஜ் (வயது 19), சென்னை புழல் பகுதியை சேர்ந்த மோகன் மகன் அபினேஷ் (20), சந்திரசேகரன் மகன் சுபாஷ் (22) ஆகிய 3 பேரும் ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துனர்.அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 3 வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம்4 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை
    • அரியலூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குந்தபுரம், காலனித் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி முருகன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன்(வயது 23).

    இவர், கடந்த 2021-ம் ஆண்டு 11 -ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அதற்கு அச்சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராதா கிருஷ்ணன் ஊர் நாட்ட மைகள் மூலம் பேசி, சிறுமியின் பெற்றோர் விருப்பமில்லாமல் அச்சிறு மியை கட்டாயப்படுத்தி கடந்த 23.5.2021 அன்று திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.

    இதற்கு ராதாகிருஷ்ணன் பெற்றோர் பழனியாண்டி (55), லதா(45), சகோதரர் பாலச்சந்தர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், 4 பேருக்கும் தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

    • இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
    • அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர்

    துவாக்குடி

    திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 44). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து கோபிநாத் உடனடியாக துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்ற அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில்சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா தங்கவேலு மற்றும் போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மணி நகர் பஞ்சமுக ஆஞ்நேயர்கோவில் அருகில் புதுவை சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் ஏராளமான புதுவை மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (வயது49) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான புதுவை சாராய பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
    • தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே கண்டன்விளை மட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி கல் குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தை பரீசிலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி தரிசு நிலமாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை தாசில்தார் ருக்மணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ருக்மணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ருக்மணியை இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    நீதிபதி அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து துணை தாசில்தார் ருக்மணி தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை தாசில்தார் ருக்மணி கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    • இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார்.
    • தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, கோயம்மேடு மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். இவரது கையில் அடிபட்டதால் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 5-ம் வகுப்பு பயிலும் மகள் உள்ளார். இந்நிலையில் ெதாழிலாளி, தனது 10 வயது மகளை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன 5-ம் வகுப்பு மாணவியிடம், அவரது தாய்மாமன் விசாரித்துள்ளார்.

    மாணவி நடந்த விஷய ங்களை தாய்மாமனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த தாய், மகளிடம் விசாரணை மேற்கொண்டு நடந்த சம்பவத்தை உறுதி செய்தார். உடனடியாக வேப்பூர் போலீசாரிடம் புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
    • தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். சிறுவயதிலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய இவர், தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 219 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இனியாவது கொள்ளையில் ஈடுபடாமல் திருந்தி குடும்ப வாழ்க்கை வாழ முடிவு செய்திருக்கும் அவர், கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். தனது வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்துள்ள அவர், தன்னை பற்றி சுயசரிதை எழுதியிருக்கிறார். கள்ளந்தோ ஆத்மகதா (ஒரு திருடனின் சுயசரிதை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சுயசரிதையில் தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    சித்திக் தனது 14 வயது வயதில் தனது சகோதரியின் மகனின் தங்க மோதிரத்தை திருடி தனது முதல் திருட்டை தொடங்கியிருக்கிறார். பின்பு ரேசன்கடையில் தனது மாமாவின் பணத்தை திருடியது, தாயின் தங்க செயினை திருடியது என்று அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.

    1989-ம் ஆண்டு கண்ணூர் மத்திய சிறையில் இருந்தபோது, சிறைத்தோழர் ஒருவரிடம் பூட்டு உடைக்கும் கலையை கற்றுக்கொண்டு, பின்பு சிறையை விட்டு வெளியே வந்ததும் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினார். கொள்ளையடித்த பணத்தை சில நேரங்களில் அனாதை இல்லங்களுக்கும் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற தனது வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது சுயசரிதையில் சித்திக் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

    • தெத்தூர் கிராமத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க சிறைச்சாலை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
    • கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலா ளர் யூனியன் மாநில பொதுச் செய லாளர் தெத்தூர் கரடி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தெத்தூர், மேட்டுப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகள் 10 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகு தியில் 1971-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு சிறுமலை வனப் பகுதியை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து 840 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நிலங்கள் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறுதானிய உற் பத்தி, பலன் தரும் பழ மரங்கள் நட்டும் மற்றும் மானாவாரி பயிரிட்டும் விவசாயம் செய்து வருகின்ற னர். இவர்களின் வாழ்வா தாரம் இந்நிலங்களை சார்ந்துள்ளது. இதில் சிலர் 2006-ல் பட்டா பெற்றுள் ளனர். பலர் பட்டா பெறா மல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பட்டாபிராமில் புதிதாக மதுரை மத்திய சிறைச் சாலை கட்ட அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. சிறைச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தை தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் கையகப் படுத்திருப்பது பொது மக்களிடம், விவசாயி களிடமும் பெரும் எதிர்ப் பையும், அதிருப்திையையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சிறை அமைய உள்ள இடம் சிறுமலையின் தென் பகுதியான அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு காட்டு எருமை, மாடுகள், புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டு பன்றிகள், முள்ளம் பன்றிகள், தேவாங்கு உள்ளிட்ட அனைத்து வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    விவசாயிகள் மற்றும் வன விலங்குகளின் நலனை கொண்டு தெத்தூரில் சிறைச்சாலை கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் பட்டா இல்லாத விவசாயி களுக்கு பட்டா வழங்கி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது என மூவேந்தர் முன்னேற்றக்கழகம் தீர்மானத்தில் கூறியுள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி தலைமை தாங்கி னார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எம்.கே.மருதுபாண்டியன் முன் னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கருப்பையாசுழியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில பொரு ளாளர் கே.என்.நாக ராஜன், தென்மண்டல தலைவர் குஷின் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையா புரி, சோழவந்தான் நகர துணைச் செயலாளர் சாமி நாதன், அலங்கை ஒன்றிய துணை செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சுகுமார், தொழி லாளர் அணி நகர செயலா ளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அக்டோபர் 27-ந்தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, 28-ந்தேதி கும்பகோ ணத்தில் நடைபெறும் தேவர்சிலை திறப்புவிழா, 29-ந்தேதி மாரியப்ப வாண் டையார் நூற்றாண்டு விழா, 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்க ளுக்கு சென்று வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக்கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச் சாலை அமைக்ககூடாது என்றும், அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயி களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.

    சாத்தை யாறு அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவ மழை தொடங்குவதை யொட்டி மழைநீரை சேக ரிக்க ஏரி, கண்மாய், குளங்க ளில் சீமைக்கருவேல முட் களை அகற்றி ஷட்டர்களை பழுதுபார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பு மணிவண்ணன் நன்றி கூறி னார்.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்கு தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை கண்காணித்த போது கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட கோவை காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (29), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட கணபதி சிங் (45) ஆகியோர் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது.

    இருவரிடம் இருந்த செல்போன்களை சிறைக் காவலர்கள் எடுக்க முயன்ற போது செல்போன் தர மறுத்து அவர்களிடம் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுதமிடம் இருந்து ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 2 பேட்டரிகள், இயர் போன் ஆகியவற்றையும், கணபதி சங்கிடமிருந்து ஒரு சிம் கார்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் சிவகுமார் அளித்த புகாரின் பெயரில் கோபி போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோபி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதில் சிறை காவலர்கள் யாரேனும் இவர்களுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×