search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள்"

    • நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1069 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகம் பின்புறம் கலால் பிரிவு வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கென்னடி தலைமையிலான காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர். அழிக்கப்பட்ட மது பாட்டில்களில் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு கெம்பளம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அந்த காரில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இந்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. தனராஜ் மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையிலான வாழவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் பெரிய கோவிலூரை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் என்பதும், இருவரும் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில்சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா தங்கவேலு மற்றும் போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மணி நகர் பஞ்சமுக ஆஞ்நேயர்கோவில் அருகில் புதுவை சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் ஏராளமான புதுவை மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்மாய்க்குள் நிரம்பி கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ளது பணிக்கனேந்தல் கிராமம். இங்குள்ள கண்மாயின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வருபவர்கள் மது குடித்து விட்டு பாட்டில் களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். பாட்டில் களை வீசி எறியும் போது அவை உடைந்து கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடக்கின் றன. இதனால் கண்மாய் அழியும் நிலை உள்ளது.

    கண்மாயில் நிரம்பிக் கிடக்கும் பாட்டில் துகள் களை அகற்றவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி பணிக்கனேந்தல் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்தி ரன் ஆகியோர் கூறியதா வது:-

    பனிக்கனேந்தல் கிராமம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.

    இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் கண்மாய் கரையிலேயே அமர்ந்து குடித்து விட்டு மது போதையில் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அந்த பகுதியில் பள்ளி மாணவிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமூக விரோத செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனால் இந்த கிராமத்திற்கு தனியாக வர பொதுமக்கள் அஞ்சு கின்றனர். பகலிலேயே இந்த பகுதியில் நடமாட முடியாத அளவுக்கு போதை ஆசாமிகள் சுற்றி திரிகின்ற னர். பனிக்கனேந்தல் கிராமத்தில் மூன்றாம்குளம், இரண்டாம் குளம், சன்னதி யேந்தல், பனிக்கனேந்தல் ஆகிய 4 கண்மாய்கள் உள்ளது. மது பிரியர்களின் அட்டகா சத்தால் கண்மாய் கள் பாழாகி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.

    டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
    • 2 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரை க்காலில் இருந்து நாக ப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் கடத்தல்கா ரார்களும் பல்வேறு நூதன முறையில் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

    நாகை நல்லியான் தோட்டம், வடக்குபொய்கை நல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டி ல்களை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து மறைத்து வைத்திருந்திருந்த 1180 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்பட்ட 6 மூதாட்டி உள்பட 9 போலீ சாரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து கடத்தி லுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டி ல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    வெளி மாநில மதுபாட்டி ல்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடர் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படு பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.

    • திருச்சுழி அருகே மதுபாட்டில்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குலசேகர நல்லூர் பகுதியில் சாக்கு பையுடன் நின்று கொண்டி ருந்த குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான கூறிவந்தார். இதில் சந்தேகம் அடைந்த போாலீசார் அவரது பையை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக சுமார் 75 மதுபான பாட்டில் கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சுழி போலீசார் அவற்றை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் மேலகண்ட மங்கலம் பகுதியிலும் திருச்சுழி போலீசார் ரோந்து சென்ற போது அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்த கடம்பன் மகன் மருதுபாண்டி (வயது 33) என்பவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பின்னர் மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆட்டோவில் 1100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தீ மிதி திடல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது.

    போலீசாரை பார்த்ததும் அதனை ஓட்டி வந்த வெளிப்பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அதில் 1100 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சேர்ந்த திலிப்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பார்வையிட்டார்.

    கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    புகார் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    • ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக ராஜபாளையம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீனிவாச பெருமாள் துணை சூப்பிரண்டு பிரீத்திக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி மற்றும் போலீசார் ராஜ பாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.

    அப்போது தனியார் பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றுகொண்டி ருந்தார். அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில ளித்தனர். பின்னர் அந்த இடத்தில் சோதனையிட்ட போது 30 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் கருப்பசாமி (60) என்பது தெரியவந்தது.

    அதேேபால் தவ வனபுரம் போலீசார் நேற்று இரவு புத்தூர் இனாம்கோவில் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது ஜெய் சங்கர்(39) மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. அப்போது அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து 500 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் ராமநாயக்கன் குல வடகரை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அருள்மொழித் தேவன் சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 500 சாராய பாட்டில்களும், நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மது பாட்டில்களை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்தார்.

    • அவினாசி போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபான பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில அவினாசியை அடுத்து நரியம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அன்னூரை சேர்ந்த நஞ்சப்பன் மகன்பாக்யராஜ் (வயது41) ,அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயன் மகன் சூரியதேவன் (23) என்பதும் தெரியவந்தது.அவர்கள் வந்த வாகனத்தை சோதனையி ட்டபோது மதுப்பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. அவர்கள் அவினாசியை அடுத்து கருவலூரில் டாஸ்மாக் கடையில் 165 மதுபான பாட்டில்கள் வாங்கி அதை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபான பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் துளை வழியாக 25 முழு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
    • போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார்.

    கன்னியாகுமரி :

    வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்றிரவு வெள்ளிச்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளிச்சந்தை சந்திப்பு அருகே டாஸ்மாக் கடையின் பின் பக்கம் சுவரில் துளை போடும் சப்தம் கேட்டது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு வாலிபர் துளை வழியாக 25 முழு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

    போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து, மது பாட்டில்களையும் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திங்கள்நகரை அடுத்த ஆரோக்கியபுரம் குழியூரை சேர்ந்த வில்சன் (வயது 35) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வில்சனை கைது செய்தனர்.

    ×