என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுவையில் இருந்துவேனில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். உடனே போலீசாரை கண்டவுடன் வேனில் வந்தவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர்.
உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதுவை மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக புதுவை மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்