search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    900 மதுபாட்டில்கள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கைது செய்யப்பட்ட முருகனுடன் போலீசார்.

    900 மதுபாட்டில்கள் பறிமுதல்

    • விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பழைய பஸ் நிலையம் சைக்கிள் நிறுத்தம் அருகே சிலர் மது வாங்கி சென்றனர்.

    இதனைப் பார்த்த போலீசார் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமான பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் மொத்தமாக 909 மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 1,18,170 ஆகும். இது தொடர்பாக அங்கிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சந்திரகிரி புரத்தைச் சேர்ந்த சிவசக்தி முருகன் (வயது 47) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×