என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது
    X

    தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது

    • தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி

    தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி தியாகதுருகம் அண்ணா நகர் பகுதியில் டீக்கடையில் மது பாட்டில் விற்பனை செய்த தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 52), வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தவர்களான பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (60), வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மா (37), வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (48), சூளாங்குறிச்சி டாஸ்மார்க் அருகே மது பாட்டில் விற்பனை செய்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் ராஜா (39) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×