என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
4 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை
- சிறுமிக்கு கட்டாய திருமணம்4 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை
- அரியலூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குந்தபுரம், காலனித் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி முருகன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன்(வயது 23).
இவர், கடந்த 2021-ம் ஆண்டு 11 -ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அதற்கு அச்சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராதா கிருஷ்ணன் ஊர் நாட்ட மைகள் மூலம் பேசி, சிறுமியின் பெற்றோர் விருப்பமில்லாமல் அச்சிறு மியை கட்டாயப்படுத்தி கடந்த 23.5.2021 அன்று திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.
இதற்கு ராதாகிருஷ்ணன் பெற்றோர் பழனியாண்டி (55), லதா(45), சகோதரர் பாலச்சந்தர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், 4 பேருக்கும் தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்