search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது
    X

    கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது

    • வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது என மூவேந்தர் முன்னேற்றக்கழகம் தீர்மானத்தில் கூறியுள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி தலைமை தாங்கி னார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எம்.கே.மருதுபாண்டியன் முன் னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கருப்பையாசுழியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில பொரு ளாளர் கே.என்.நாக ராஜன், தென்மண்டல தலைவர் குஷின் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையா புரி, சோழவந்தான் நகர துணைச் செயலாளர் சாமி நாதன், அலங்கை ஒன்றிய துணை செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சுகுமார், தொழி லாளர் அணி நகர செயலா ளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அக்டோபர் 27-ந்தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, 28-ந்தேதி கும்பகோ ணத்தில் நடைபெறும் தேவர்சிலை திறப்புவிழா, 29-ந்தேதி மாரியப்ப வாண் டையார் நூற்றாண்டு விழா, 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்க ளுக்கு சென்று வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக்கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச் சாலை அமைக்ககூடாது என்றும், அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயி களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.

    சாத்தை யாறு அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவ மழை தொடங்குவதை யொட்டி மழைநீரை சேக ரிக்க ஏரி, கண்மாய், குளங்க ளில் சீமைக்கருவேல முட் களை அகற்றி ஷட்டர்களை பழுதுபார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பு மணிவண்ணன் நன்றி கூறி னார்.

    Next Story
    ×