search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interview"

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    விருதுநகர்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்து ஓராண்டு ஆகியுள்ளது. இதையொட்டி சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது.

    இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட தலை வர்கள் ராஜாசொக்கர். ரங்கசாமி, மாநகர் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர் ரவிசங்கர், ஜீ.பி.முருகன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியா காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. அதை போலவே இந்தியாவுக்கும் புதிய அரசியலை கொடுத்துள்ளது.

    இந்த அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்.7-ந்தேதி தொடங்கி யது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் 900 இடங்களில் இந்த நடைபயணம் நடக்கி றது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பா.ஜ.க. மதஅடிப்படையில் விவாதம் செய்கிறது. இந்தியா என்பது பாரதத்தை தான் குறிக்கிறது. ஆனால் வேண்டும் என்றே பா.ஜ.க. இதனை விவாதமாக்கி வருகிறது.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்த போதே பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தல் காலத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை.

    பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருதமலை கோவில் வளாகத்தில் 8 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு
    • முதல்-அமைச்சர் கோவைக்கு வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பேச்சு

    கோவை,

    சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 152- வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோைவ வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயில் வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.யின் சிலை மற்றும் அவர் ஜெயிலில் இருந்து போது இழுத்த செக் ஆகியவற்றிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருதமலை கோவில் செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. அங்கு கூட்ட நெரிசல் தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும்.

    கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். .குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும்.

    பீக் அவர் மின்கட்டணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் பல செய்ய வேண்டி உள்ளது. அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    பா.ஜ.க. சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இதுகுறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24 -ந் தேதி திருப்பூர் வருகிறார். கோவைக்கு அவர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி நாகராஜ், கோவை மாநகர், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்ட பலர் கலந்து கொண்டனர். 

    • சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
    • விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதும் அந்த திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும்.

    சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம், மறுசுழற்சி செய்திட வேண்டும். சேலம் உருக்காலையினை தனியார் மயமாக்கிடும் திட்டத்தினை அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் திருப்ப ஒப்படைக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு அதற்கான குழுவை மட்டுமே அமைத்துள்ளது. திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வெளிவந்த பின்னரே பா.ம.க. அதுகுறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.

    விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் என கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம், வக்கீல் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், எடப்பாடி மேற்கு ஒன்றிய அமைப்பு தலைவர் தம்பிதுரை, வன்னியர் சங்க பொறுப்பாளர் ராமச்சந்திரன், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் கிழக்கு ஒன்றியம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
    • வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூலித்தேவன் நினைவு நாள், மூக்கையா நினைவு நாள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஓ.பி.எஸ். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40 பேரை நிறுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் ஓ.பி.எஸ். நிலைப்பாடு. வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடி மேலக்கோட்டையை கடந்து தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்துபவர்கள் யாரும் இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜா மணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது.

    கோவை,

    கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதல்-அமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

    அதுபோல, தீபாவளிக்கும் முதல்-அமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதல்-அமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

    ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிற போது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது.

    கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நட வடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தெரிவிக்கிறார்கள்.
    • மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கர், தீயணைப்பு துறைக்கு ஒன்னரை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ள

    திருச்சி 

    திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே என் நேரு கூறும் போது,

    புதிய பேருந்து நிலைய பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தெரிவிக்கிறார்கள். ஆனால் மழை காலம் வர உள்ளதால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்கிற முனைப்பில் பணிகள் நடைபெறுகிறது.

    ஜீயபுரம் வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு இன்னும் ஒன்னறை மாதத்தில் ஒப்பந்தம் கோரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா என்பது தெரியாது. ஆனால் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். அந்த பேருந்து நிலையங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் படாது.

    அங்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம்.

    பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தில் 520 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மாநகராட்சிக்கு 100 ஏக்கரும், 10 ஏக்கர் ஐ.டி பார்க் அமைக்கவும், 30 ஏக்கர் விளையாட்டு திடலுக்கும், காவல் நிலையத்திற்கு ஒன்னரை ஏக்கரும், மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கர், தீயணைப்பு துறைக்கு ஒன்னரை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ளது. வருங்காலத்தில் தேவைப்படும் போது அதை பயன்படுத்துவோம்.

    திருச்சி மற்றும் சேலத்தில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டது. விரைவில் அது கொண்டு வரப்படும்.

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும் போது அந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய போது ஒரு லட்சம் மாணவர்களுக்கு அது வழங்கப்பட்டது. அது தற்போது விரிவுப்படுத்தப்பட்டு இன்று 11 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டு முதலமைச்சர் அதை தொடங்கி உள்ளார். நிதி நிலைமைக்கு ஏற்ப அது மேலும் விரிவுப்படுத்த முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரக் குளம் கிராமத்தில் முதல–மைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டை–யன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரக் குளத்தில் தொடங்கி வைப் பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது இந்தியா–வின் முன்னோடி திட்டமாக உள்ளது. உன்னதமான நோக்கத்தில் உருவாக்கப் பட்ட இந்த திட்டம் மிகப்பெ–ரிய வெற்றி அடைய வேண் டும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவிட வேண் டும்.

    நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய பெண்கள் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்வது வழக் கம். ஆனால் தாமாக வந்து தி.மு.க. அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை விசா–ரிக்கும் அந்த நீதி அரசர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மீதும் தாமாக வந்து விசாரணை செய்வதிலும் வேகத்தை காட்ட வேண்டும். நீதி என் பது அனைவருக்கும் ஆன–தாக இருக்க வேண்டும். ஒரு சாரருக்கு மட்டும் இருக்கக் கூடாது.

    அ.தி.மு.க.வினர் ஆளுங் கட்சியினரை ஏதாவது பழி சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வளை–யங்குளத்தில் நடைபெற்ற மாநாட்டில் வந்தவர்களுக்கு உணவு கூட அளிக்க முடி–யாத நிலையில் தான் உள்ளனர். இதனால்தான் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி, முன் னாள் அமைச்சர்கள் செல் லூர் ராஜூ, ஆர்.பி.உதய–குமார், ராஜன் செல்லப்பா போன்றவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் சென்று விட்டார்.

    தமிழக அமைச்சர் உதய–நிதி ஸ்டாலின், மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறியதை வரவேற்கி–றேன். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக் கும். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப் படும். அந்தந்த மாநிலங் களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் இருக் கும்.

    தமிழக அரசு நிராகரிக்கும் எந்த திட்டங்களையும் ராகுல் காந்தி தலைமையி–லான அரசு தமிழகத்தில் திணிக்காது. இதை முன்னெ–டுத்து இருக்கின்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலி–னுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    நிகழ்ச்சியில் அவருடன் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலை–வர் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சத்யன், வித்யா–பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்தது.
    • இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31-ந்தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலு வலகத்தில் நடை பெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி யாளர் பணி மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடை பெற்றது. புதுக்கோட்டையில் உள்ள யூனியன் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது விண்ணப்பதாரர்களிடம் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், ஆணையாளர் ஹெ லன் பெண்மணி, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகி யோர் நேர்காணல் நடத்தினர். நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றி தழ்கள் சரிபார்ப்பு நடந்தது.

    அலுவலக உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போது மானது ஆனால் என்ஜினீயரிங் பட்டதாரிகள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என 2 காலி பணியிடங்களுக்கு 656 பேர் நேர்காணக்கு வந்திருந்த தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. நேர்காணலின் போது மேலாளர் சண்முக சுந்தரி மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    நாளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் காலியாக உள்ள இரவு காவலாளி பணிக்கான நேர்முகத் தேர்வு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் 180-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுடன் நேர்காணல் நடைபெற உள்ளது. இதனைத் தொ டர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31-ந்தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலு வலகத்தில் நடை பெறுகிறது. இதில் மா வட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) கலந்து கொண்டு நேர்கா ணலை நடத்துகிறார்.

    • கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை பணி தொடங்கப்பட்டு உள்ளது.
    • அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    கோவை,

    கோவை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.

    சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை ரூ. 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ரூ. 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவையில் சுற்றுவட்ட சாலை அறிவிப்பை 2007-ம்ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். 2009 ம் ஆண்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் தொய்வடைந்தது.

    இங்குள்ள பெரும்பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, மேற்கு புறவழிச்சாலை பணியை முதன்மையாக சொன்னார்கள்.

    அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து 3 கட்டமாக இந்த பணிகளை செய்ய இருக்கின்றோம். முதற்கட்டமாக மதுக்கரை-மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும்போதே 2ம் கட்ட பணிகளுக்கு 95 சதவீதம்நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    செம்மொழி மாநாடு கோவையில் தான் கருணாநிதி நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அ.தி.மு.க தான் கிடப்பில் போட்டார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க விட்டு சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகிறோம்.

    தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனமும் செய்யவில்லை. கோவையை இந்த அரசு புறக்கணிக்க வில்லை. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

    அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தலைமை பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் , மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர் சோமசுந்தரம், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அலகு) பாலசுப்பிரமணியன், முன்னாள் எம் எல் ஏ நா.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கும் பிளாஸ்டிக் கவர்களில் தான் அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்கின்றனர்.
    • தற்போது நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    ஊட்டி,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஊட்டியில் உள்ள மார்க்கெட்கடைகளை இடமாற்றம் செய்யும் பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படுத்திய எம்.பி. ராஜாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக இதுவரை மாற்று பொருட்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல.

    பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கும் பிளாஸ்டிக் கவர்களில் தான் அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றன.

    ஆனால் அவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பது இல்லை. இதற்கு மாறாக சிறு வியாபாரிகள் மீது மட்டும் அரசாங்கம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு அதிக அபராதம் விதிப்பதையும், கடைக்கு சீல் வைப்பதையும் அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்.

    மத்திய அரசின் பொருளாதார கொள்கை தவறாக உள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது பொதுமக்களிடம் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சிறப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இதன்மூலம் அவற்றின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும்.
    • வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, தட்டாங்கோவிலில் உள்ள கோட்டூர்மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. படிக்க விரும்பு பவர்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

    கோட்டூர் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவுகள் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர். மேலும், டாடா டெக்னாலஜி 4.0 திட்டத்தின் கீழ் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் மற்றும் அட்வான்ஸ் சி.என்.சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய அதிநவீன தொழி ற்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.ஐ.டி.ஐ-ல் படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகளுக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவை யான நுகர்பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 80721 34721 மற்றும் 99523 53587 என்ற மொபைல் எண்ணிற்கு அல்லது நேரடியாக தொடர்பு கொ ண்டு ஐ.டி.ஐ படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது.
    • திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான், நல்ல சம்பளத்தில், சிறப்பான பணியிடத்தில் உங்களுக்கான பணிச்சூழலைக் கட்டமைக்க முடியும்.

    1. தொழில்நுட்ப அறிவு

    தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப திறன்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, எக்செல் மற்றும் ஜி-சூட் போன்ற மென்பொருள்களைக் கையாளும் திறன், மென்பொருள் அல்லாத துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் சரியான தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதில் உங்கள் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

    2. சிக்கல் தீர்க்கும் திறன்

    நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன. அவை அனைத்தையும், ஒருவர் மட்டுமே தீர்த்துவிட முடியாது. எனவே, தங்களுடைய நிறுவனத்தில்/ குழுவில் பணியாற்றும், எல்லா பணியாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    3. மேம்பாடு

    கற்றல் மற்றும் மேம்பாடு என்பது முடிவில்லாத கற்றல் செயல்முறையாகும். வேகமாக மாறிவரும் துறையில், புதிய விஷயங்களையும், சமீபத்திய வழிமுறைகள்/தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தால், புதிதாக அறிமுகமாகும் கோடிங் மொழிகளை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் நகர முடியும்.

    4. தொடர்பு திறன்

    உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியைக் காண தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் யோசனையை மக்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தொடர்பு திறன் அவசியம். ஒரு நல்ல தொடர்பாளராக, எவ்வாறு பேசுவது, கருத்துகளைப் பரிமாறுவது, பிறர் கருத்தை கவனமாகக் கேட்டறிவது என்பது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    5. நிறுவன திறன்கள்

    ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்காமல், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தலாம். உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் அட்டவணையைத் திட்டமிடுவது உங்களை உந்துதலாகவும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கும்.

    6. நேர மேலாண்மை

    நேரம் என்பது பணம் போன்றது. உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடியாவிட்டால், நீங்கள் உங்களது வருமானத்தை பணயம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் தனது நேரத்தை சிறப்பாக நிர்வகித்தால் மட்டுமே தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற முடியும். இது வேலை-வாழ்க்கை சமநிலையை கடைப்பிடிக்க உதவுகிறது.

    ×