search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்க்கை"

    • ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள்.
    • 6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. வருகிற 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர். 5 நாட்களில் 60 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் பெற்றோர் குவிகிறார்கள். இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் எவ்வித செலவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.

    குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்க்க அலைமோதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்க தொடங்கிய முதல் நாளில் பெற்றோர் குவியத் தொடங்கினர்.

    ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள். விண்ணப்ம் வாங் குவதற்கு நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அசோக் நகர் மேல் நிலை பள்ளியில் குறிப்பாக 6-ம் வகுப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். அப் பகுதியில் உள்ள மெட்ரிக் குலேஷன், தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவர்கள் இங்கு சேருகின்றனர் என்றார்.

    இந்த பள்ளியில் 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முழு அளவில் தேர்ச்சி பெறுவதால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.

    அரசு பள்ளிகள் என்றாலே தரம் இருக்காது, கட்டமைப்பு வசதி இருக்காது என்ற பொதுவான பார்வைக்கு மத்தியில் அசோக்நகர் அரசு மகளிர் பள்ளி மட்டும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.

    • மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தொடங்கி வைத்தனர்
    • குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் குனியட்டி கிராமத்தில் இல்லந்தோறும் இளைஞரணி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் பீமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில்குன்னியட்டி கிளை செயலாளர் குமார், ஊர் தலைவர் பெள்ளிராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரத்குமார், ஒன்றிய இளைஞரணி மிதுன், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி துணை அமைப்பாளர்வினோத் குமார், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், தனசக்தி, சாஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது
    • இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    இதில் பி.காம், பி.காம்(சி.ஏ.), பி.பி.ஏ., பி.எஸ்சி. (சி.டி.எப்) பி.எஸ்சி. சி.எஸ். (ஏ.ஐ.) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கல்லூரியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கல்லூரியில் சிறப்பு கணபதி ஹோமம் பூஜை திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓ.கே.எம்.கந்தசாமி, துணைத்தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பி.வி.எஸ். பி.முருகசாமி, இணைச் செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்பட அறக்கட்டளை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இக்கல்லூரி முதல்வர் 20 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கல்லூரி முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றில் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

    • பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும்
    • மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர்.

     தாராபுரம்,ஆக.8-

    அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபிஸ்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் செயலாளர் டாக்டர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:- அதிகரித்து வரும் சர்க்கரை நோயின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அறிகுறிகள் தெரிந்த, நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தவோ, பாதிப்பை குறைக்கவோ முடியும்.

    பக்கவாத பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க, அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லாதது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதனால் கிராமப்புறத்தினர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உடல் ஊனத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை அளிக்க ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

    பிசியோதெரபிஸ்ட்டுகளும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர். இந்நிலை நீடித்தால், தமிழகத்தில் பக்கவாதத்தால், உடல் ஊனம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக, பிசியோதெரபிஸ்டுகளை நியமிக்க வேண்டும். பயிற்சி பிசியோதெரபிஸ்டுகளை ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும்.

    பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும்.
    • வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, தட்டாங்கோவிலில் உள்ள கோட்டூர்மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. படிக்க விரும்பு பவர்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

    கோட்டூர் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவுகள் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர். மேலும், டாடா டெக்னாலஜி 4.0 திட்டத்தின் கீழ் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் மற்றும் அட்வான்ஸ் சி.என்.சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய அதிநவீன தொழி ற்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.ஐ.டி.ஐ-ல் படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகளுக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவை யான நுகர்பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 80721 34721 மற்றும் 99523 53587 என்ற மொபைல் எண்ணிற்கு அல்லது நேரடியாக தொடர்பு கொ ண்டு ஐ.டி.ஐ படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
    • நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது

    திருப்பூர்:

    அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 28ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 0422-2590080,94869-77757 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்

    திருப்பூர்:

    திருப்பூா், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல் பிரிவுகள், மேம்பட்ட தொழில் நுட்ப படிப்பான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெறலாம். ஒரு குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட் விலையில்லாமல் வழங்கப்படும். அரசுப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயின்று இந்தப் பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண்திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 கூடுதலாகப் பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ஆகவே, விருப்பமுள்ள மாணவ, மாணவியா் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2429201, 04258 - 230307, 04252 - 22334 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை முதல் நடைபெற உள்ளது.
    • 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது.

    இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ- மாணவிகள் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04365-250 129, 04369-276 060 மற்றும் 94871 60168 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.

    கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

    • 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.
    • அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும், தஞ்சாவூர் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.

    இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவிகள் வரும் 15-ம் தேதி வரை www.https://scert.tnschool.gov.in

    என்ற இணையதள முகவரியில் விண்ணப்பி க்கலாம்.

    அவ்வாறு இணையத ளத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள்.
    • 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரமாண்டமாக கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு மற்றும் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் புதுப்பிப்பு இருக்கும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் 29-ந் தேதி வந்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் விதம், ஆய்வகம், மருத்துவ மாணவர்களுக்கான வசதிகள், விடுதி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் நோயாளிக–ளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக அனைத்து மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். தங்கள் தரப்பில் இருந்து அனைத்தையும் திருப்திகரமான முறையில் தேசிய மருத்துவ ஆணைய குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2023-24-ம் ஆண்டுக்கான 100 மருத்துவ இடங்கள் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் பேட்ஜ், 2022-23-ம் ஆண்டு 2-வது பேட்ஜ் என்ற நிலையில் வருகிற 2023-24-வது ஆண்டு 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதுபோல் 2022-23-ம் ஆண்டு அங்கீகாரம் முதல் தடவை புதுப்பிக்கப்பட்டது என்றும், தற்போது 2-வது ஆண்டாக அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் மற்றும் ஏற்கனவே படித்து வருபவர்களுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு கிடைத்துள்ளதால் மருத்துவத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்–தப்பட உள்ளது.
    • துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் மாநகர பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிகளில் படித்து இடைநின்ற, படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் பேசும்போது, `பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதை சிறப்பாக செயல்–படுத்த வேண்டும். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 84 பேர் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவும் ஆசிரியர்களை நியமிக்கலாம்' என்றார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×