search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadoss M.P."

    • சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
    • விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதும் அந்த திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும்.

    சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம், மறுசுழற்சி செய்திட வேண்டும். சேலம் உருக்காலையினை தனியார் மயமாக்கிடும் திட்டத்தினை அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் திருப்ப ஒப்படைக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு அதற்கான குழுவை மட்டுமே அமைத்துள்ளது. திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வெளிவந்த பின்னரே பா.ம.க. அதுகுறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.

    விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் என கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம், வக்கீல் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், எடப்பாடி மேற்கு ஒன்றிய அமைப்பு தலைவர் தம்பிதுரை, வன்னியர் சங்க பொறுப்பாளர் ராமச்சந்திரன், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் கிழக்கு ஒன்றியம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • புதுவை அரசு காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றாமல் மத்திய அரசின் ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி உள்ளது.
    • இந்த இட ஒதுக்கீட்டில் முன்னேறிய சமுதாயங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையின் மிகப்பெரிய சமுதாயமாகிய வன்னியர்களுக்கும், 3-வது மிகப்பெரிய சமுதாயமாகிய மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றாமல் மத்திய அரசின் ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி உள்ளது.

    புதுவை மக்களுக்கு, குறிப்பாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக அநீதியை இழைப்பதாக உள்ளது. 60 இடங்களில், 25 பொதுப் பிரிவினருக்கும், 6 பொருளாதார ரீதியாக நலிவடைந்தவருக்கும், 19 இதர பிற்படுத்தப்ப ட்டவர்க ளுக்கும், 9 அட்டவணை இனத்தவருக்கும் 1 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த இட ஒதுக்கீட்டில் முன்னேறிய சமுதாயங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையின் மிகப்பெரிய சமுதாயமாகிய வன்னியர்களுக்கும், 3-வது மிகப்பெரிய சமுதாயமாகிய மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை. தேர்வில் புதுவை அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றி தான் 60 இடங்களையும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

    பொதுப் பிரிவு 24, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் 6, இதர பிற்படுத்தப்பட்டவர் 7, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 11, இ.பி.சி. மீனவர் 1, பி.சி.எம். 1, பி.டி. 1, அட்டவணை இனத்தவர் 9 என ஒதுக்குவதால் எந்தக் கொள்கை மீறலும் முரண்பாடும் கிடையாது.

    நம் மாநில நியமனத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே 16 பதவிகளுக்கும் புதுவை அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும் என்ற ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த ஆணை பிறப்பிக்கும் வரை பதவியை நிரப்பும் பணியை தள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×