search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்த வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்த வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை

    • புதுவை அரசு காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றாமல் மத்திய அரசின் ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி உள்ளது.
    • இந்த இட ஒதுக்கீட்டில் முன்னேறிய சமுதாயங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையின் மிகப்பெரிய சமுதாயமாகிய வன்னியர்களுக்கும், 3-வது மிகப்பெரிய சமுதாயமாகிய மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றாமல் மத்திய அரசின் ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி உள்ளது.

    புதுவை மக்களுக்கு, குறிப்பாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக அநீதியை இழைப்பதாக உள்ளது. 60 இடங்களில், 25 பொதுப் பிரிவினருக்கும், 6 பொருளாதார ரீதியாக நலிவடைந்தவருக்கும், 19 இதர பிற்படுத்தப்ப ட்டவர்க ளுக்கும், 9 அட்டவணை இனத்தவருக்கும் 1 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த இட ஒதுக்கீட்டில் முன்னேறிய சமுதாயங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையின் மிகப்பெரிய சமுதாயமாகிய வன்னியர்களுக்கும், 3-வது மிகப்பெரிய சமுதாயமாகிய மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை. தேர்வில் புதுவை அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றி தான் 60 இடங்களையும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

    பொதுப் பிரிவு 24, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் 6, இதர பிற்படுத்தப்பட்டவர் 7, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 11, இ.பி.சி. மீனவர் 1, பி.சி.எம். 1, பி.டி. 1, அட்டவணை இனத்தவர் 9 என ஒதுக்குவதால் எந்தக் கொள்கை மீறலும் முரண்பாடும் கிடையாது.

    நம் மாநில நியமனத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே 16 பதவிகளுக்கும் புதுவை அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும் என்ற ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த ஆணை பிறப்பிக்கும் வரை பதவியை நிரப்பும் பணியை தள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×