search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skill"

    • தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது.
    • திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான், நல்ல சம்பளத்தில், சிறப்பான பணியிடத்தில் உங்களுக்கான பணிச்சூழலைக் கட்டமைக்க முடியும்.

    1. தொழில்நுட்ப அறிவு

    தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப திறன்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, எக்செல் மற்றும் ஜி-சூட் போன்ற மென்பொருள்களைக் கையாளும் திறன், மென்பொருள் அல்லாத துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் சரியான தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதில் உங்கள் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

    2. சிக்கல் தீர்க்கும் திறன்

    நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன. அவை அனைத்தையும், ஒருவர் மட்டுமே தீர்த்துவிட முடியாது. எனவே, தங்களுடைய நிறுவனத்தில்/ குழுவில் பணியாற்றும், எல்லா பணியாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    3. மேம்பாடு

    கற்றல் மற்றும் மேம்பாடு என்பது முடிவில்லாத கற்றல் செயல்முறையாகும். வேகமாக மாறிவரும் துறையில், புதிய விஷயங்களையும், சமீபத்திய வழிமுறைகள்/தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தால், புதிதாக அறிமுகமாகும் கோடிங் மொழிகளை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் நகர முடியும்.

    4. தொடர்பு திறன்

    உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியைக் காண தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் யோசனையை மக்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தொடர்பு திறன் அவசியம். ஒரு நல்ல தொடர்பாளராக, எவ்வாறு பேசுவது, கருத்துகளைப் பரிமாறுவது, பிறர் கருத்தை கவனமாகக் கேட்டறிவது என்பது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    5. நிறுவன திறன்கள்

    ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்காமல், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தலாம். உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் அட்டவணையைத் திட்டமிடுவது உங்களை உந்துதலாகவும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கும்.

    6. நேர மேலாண்மை

    நேரம் என்பது பணம் போன்றது. உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடியாவிட்டால், நீங்கள் உங்களது வருமானத்தை பணயம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் தனது நேரத்தை சிறப்பாக நிர்வகித்தால் மட்டுமே தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற முடியும். இது வேலை-வாழ்க்கை சமநிலையை கடைப்பிடிக்க உதவுகிறது.

    • வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும்.
    • இளம் வழக்கறிஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை தாங்கியது.

    சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிவஞானம், ஆர்.எஸ்.பி.சவுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இவ்விழாவில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் 18 மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் ஏற்புரை வழங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் பேசுகையில், வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும். இளம் வழக்கறிஞர்கள் பொறு மையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இளம் வழக்கறிஞர்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் மட்டுமின்றி, ஒழுக்கத்தை கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தை முழு அதிகாரத்துடன் கூடிய முதன்மை மாவட்ட நீதிமன்றமாக அமைத்துத்தர நீதியரசர்களிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×