search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interview"

    • கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.
    • லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் பேட்டியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் தங்களுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    இது குறித்து லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் "மாலைமலர்" நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் கடந்த 2022-23ம் ஆண்டு நெற்பயிர்களை விவசாயம் செய்தனர்.விளைந்த பயிர்கள் எல்லாம் மழை இல்லாமல் கருகி அவர்க ளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்குட்பட்ட கருங்குளம்,அச்சங்குடி,கண்ணனை, பெரிய தாம ரைக்குடி, சின்ன தாமரைக்குடி,நல்லிருக்கை மற்றும் வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தற்காலி மாக கைவிடுகிறோம். பயிர் காப்பீடு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டினால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.
    • கோவை மாவட்டத்தை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் இருப்பதாக கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி

    கோவை,

    சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டருடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு திட்டங்களை செயல்ப–டுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் உள்ளது.

    குறிப்பாக போக்சோ வழக்குகள் பதிவாகி வருகிறது. இதனை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மற்றும் மாதம் ஒருமுறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

    மனித-வனவிலங்கு மோதல் தடுக்க தனிகுழு அமைக்கப்பட உள்ளது. காட்டுப்பன்றி பிரச்சினை சட்ட ரீதியாக அணுக வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    திட்டங்கள் செயல்படுத்துவதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு துறைகள் 5 முதல் 10-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறையில் "ஸ்டெப் சர்வே" இலக்கு வைத்து உள்ளது. அந்த இலக்கு நோக்கி சென்று வருகிறோம். பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் தவிர்ப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வருடம் 3 முதல் 4 இறப்பு பதிவாகி உள்ளது.

    மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு அட்டையை 7 லட்சம் பேர் வைத்துள்ளனர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் பயன்படுத்தி கொள்ள முடியும். நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கோவை மாவட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 100 சதவீதம் எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.

    இதனை அனைத்து வகை யான பயனாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆலோசனை கூட்டம் பயனுள்ளதாக இருந்தது.

    கோவைக்கான மாஸ்டர் பிளானை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். இதற்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன். மண்டல அளவிலான மாஸ்டர் பிளான் தயாரித்து வருகிறோம்.

    மாவட்டத்தில் அரசு நிலம் மீட்பு அதிகளவில் நடந்து வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்தில் தற்போது வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விமான நிலையம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    மீதம் உள்ள 20 முதல் 30 ஏக்கர் வரையிலான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடியும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பாதுகாக்க வேலி அமைக்கப்படும்.

    கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் படிப்படியாக நடத்தப்படும். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு 2ம் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் டிசம்பரில் முடியும். மெட்ரோ ரெயில் அவிநாசி ரோடு, சரவணம்பட்டி இடது புறத்தில் அமைய உள்ளது. இந்த பணிகளால் பாதிப்பு ஏற்படாது. யாரும் கவலைப்பட தேவையில்லை.

    டெக்னாலஜி நிறைய இருக்கிறது. பிளான் செய்து பணிகள் நடத்தப்படும்.

    மேலும், தொழில் துறையினருக்கு குறைதீர் கூட்டம் நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கங்கள் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திட்ட சாலைக்கு என ரூ.144கோடி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில், ரூ. 20 கோடிக்கு திட்ட சாலைக்கு அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கல்வி கடனுக்கு 2,500 விண்ணப்பம் வாங்கி உள்ளோம். இதில், வங்கிகளில் உள்ள பிரச்சினை குறித்து தலைமை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

    இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் குழு அமைத்து 2 வாரங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    கோவைக்கு கல்வி கடன் வழங்க ரூ.400 கோடி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் யாருக்கு தேவை என்பதை கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மகளிர் உரிமைத் தொகைக்கு 31 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர். மாவட்ட அளவில் 60 சதவீதம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.

    பள்ளி, கல்லூரியில் போதை பொருள் பழக்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆ.ராசா எம்.பி.யிடம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர்
    • ரூ.1 கோடி மதிப்பில் எச்.பி.எப் பகுதியின் அருகில் வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை இடித்து புதிய கட்டிடம் கட்டபல்வேறு காரணங்களால் எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த மாதம் நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை சந்தித்தனர்.

    ஆ.ராசா எம்.பி.யிடம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட எம்.பி. ஆ.ராசா எம்.பி. மார்க்கெட் சங்க நிர்வாகிகளிடம் விவரங்களை கேட்டறிந்து, தானே பொறுப்பேற்று தனது எம்.பி நிதியின் மூலம் தற்காலிக கடைகளை கட்டி தருவதாக உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து ஊட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் மார்க்கெட் வியாபாரிகளுக்காக, எம்.பி. நிதியில்அமைக்கப்பட்டு வரும் தற்காலிக கடைகளை ராசா எம்.பி. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஊட்டி நகரின் மிகத் தொன்மையான மார்க்கெட் கடைகளை புதுப்பிக்கும் வகையில்நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக ஏறத்தாழ கார் பார்க்கிங் அமைப்பதற்கு ரூ.18 கோடியும், புதிய மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

    அதுவரை ஊட்டி ரேஸ்கோர்ஸ் பார்க்கிங் பகுதியில்ரூ .20 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சிற்றுந்துகள் நிறுத்துவதற்கான இடத்துடன் கூடிய தமிழகத்திலேயே முன்னோடி மார்க்கெட்டாக ஊட்டி நகராட்சி மார்க்கெட் அமைய உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஊட்டி 200-யினை கொண்டாடும் வகையில் ஊட்டி நகராட்சிக்கு ரூ.10 கோடி சிறப்பு திட்ட நிதி வழங்கி, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் புதியதாக உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    மேலும், ரூ.1 கோடி மதிப்பில் எச்.பி.எப் பகுதியின் அருகில் வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமான தோடர் மக்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களின் குடில் மற்றும் உருவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீலகிரி வனப்பகுதியில் உள்ள விலங்குகளை அங்கீகரிக்கும் வகையில் யானை சிலை மற்றும் மான் சிலைகள் வைக்கப்பட்டது

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், தி.மு.க. நகர செயலாளரும், கவுன்சிலருமான ஜார்ஜ், கவுன்சிலர் முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.
    • தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும்

    கோவை,

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கோவை மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு பாரதி காலனியில் நடந்த தூய்மை பாரத நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு தூய்மை பணியாளர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல் நிலைப்பள்ளிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சந்திராயன் 3 மாதிரியை மாணவிகளிடம் அவர் வழங்கினார்.

    மாணவர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    சந்திராயன் 3-ஐ சிலர் குறை கூறலாம். ஆனால் இது மிகப்பெரிய சாதனை. சந்திராயன் நிலவின் தென் பகுதியில் இறக்கி சாதனை செய்து இருக்கின்றனர். வேறுநாடுகள் யாரும் இதை செய்ய வில்லை.

    பிரஞ்யான் அங்கு என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரிவித்து வருகின்றது. அங்கு இருக்கும் கெமிக்கல் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றது. 2047-ம் ஆண்டு இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கிரெடிட் அவுட்ரீச் என்ற நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் இன்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டம், யோஜனா திட்டம், ஜன்தன் யோஜனா திட்டம், பயிர் காப்பீடு திட்டம், சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3,749 கோடி கடன்களை பயனாளி களுக்கு காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த முறை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பின ர்கள் தென்னை சார்ந்த தொழில் புரியும் விவசாயிக ளுக்காக பல்வேறு கோரி க்கைகளை வைத்திருந்திரு ந்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு பல்வேறு வங்கிகள் மூலமாக 1400 தென்னை சார்ந்த விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கடன் வழங்கப்பட்டது என்றார்.

    இதனை தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

    கடந்த முறை நான் டெல்லி செல்லும் போது தென்னைச் சார்ந்த தொழில் புரியும் விவசாயிகளையும் உடன் அழைத்துச் சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தற்போது கடன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். எல்லோரும் நினைப்பது போல் தென்னை விவசாயம் கேரளா வில் அதிகமாக இருப்ப தாக நினைக்கி ன்றார்கள்.

    ஆனால் உண்மையில் தமிழகத்தில் தான் தென்னை விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதியை வருடத்திற்கு 5 ஆயிரம் டன் என்பதை 10 ஆயிரம் டன் என்ற அளவிற்கு உயர்த்த வேண்டும். தென்னை சார்ந்த தொழிலில் படித்து முடித்து வங்கி கடன் பெற்று பல இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரைக்கு குறைந்த அளவு கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி , கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மத்திய அரசு செயலாளர் ஜோஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொ ண்டனர்.இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள மத்திய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்து இருந்தோம்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கோரிக்கைக்காகவே வந்தோம்.

    கோவை,

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? என்பது குறித்து பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்து இருந்தோம். அந்த மனுவை மீண்டும் வலியுறுத்து வதற்காகவே வந்தோம். மனு கொடுத்து நிதி அமைச்சரை சந்தித்தோம். வேறு எந்த அரசியல் காரணங்களும் கிடையாது.

    மாநில அரசிடம் பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசிடம் வலியுறுத்தியும் வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இங்கு வந்தோம். கூட்டணி குறித்த எல்லாம் பேசவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை மட்டுமே பேசினோம். கூட்டணி குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். நாங்கள் அது தொடர்பாக வரவில்லை. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்படுவோம்.

    விவசாயிகள் பிரச்சினைக்காகவே வந்தோம். இது அரசியல் ரீதியான சந்திப்பை கிடையாது. கூட்டணிக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தமில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கோரிக்கைக்காகவே வந்தோம். அரசியல் காரண காரியங்கள் எதுவுமே கிடையாது.

    எங்களுக்கு ஒரே அம்மா புரட்சித்தலைவி தான். மத்திய நிதி அமைச்சரை மரியாதை நிமித்தமாக அம்மா என்றோம். அம்மா வை (ஜெயலலிதாவை) யாரோடும் ஒப்பிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலை டெல்லி சென்று திரும்பும்போது தலைவராக வருவாரா?
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. கூட்டத்தில் பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழி லா ளர்கள் சங்கம் சார்பில் தீப்பெட்டி, பட்டாசு தொழில் நூற்றாண்டு விழா சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், யூனி யன் துணைத் தலைவர் விவேகன் ராஜ், சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்த ரராஜன், பட்டாசு தொழிற் சங்கத்தை சேர்ந்த தேவா, பாலசுப்பிரமணியம், முரு கன், மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல தடைகளை தாண்டி சிவகாசி தீப்பெட்டி, பட் டாசு தொழில் நூற்றாண்டை கடந்துள்ளது. மோடி அர சால் பட்டாசு தொழிலுக்கு பல சோதனைகள் வந்தது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும். ஏற்று மதிக்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்ப டும். உலக அளவில் பட்டாசு தொழிலை கொண்டு செல்ல இந்திய கூட்டணி தலைவர்கள் விரும்புகி றார்கள்.

    காங்கிரஸ் ஆட்சி செய் யும் மாநிலங்களில் வருகின்ற தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்ப னைக்கு தடை விதிக்காமல் இருக்க தேவையான முன்னேற் பாடுகள் செய்யப் படும். பட்டாசுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. முதலில் அப்பகுதியில் வைக்கோல் எரிப்பதை டெல்லி அரசு தடை செய்ய வேண்டும். டெல்லி சுற்றுச் சூழல் மாசுக்கு பட்டாசு காரணம் இல்லை என்பதை அந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழக காங்கி ரஸ் ஒத்துழைப்பு தரும். அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அவர் திரும்பும் போது தலைவரா கவே வருவாரா? அல்லது புது தலைவர் வருவரா? பொறுத்திருந்து பார்ப் போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலை வர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 660.176 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • பள்ளிக்கூடம் 2.0 ப்ராஜெக்ட் திட்டம் மூலம் 46,884 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு, காணாமல் போன ரூ.39 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பிலான 200 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 519 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது வரை 8 ஆயிரத்து 543 குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    34 கொலை வழக்குகளில் 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 660.176 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, ரூ.70,00,260 ஆகும். இதில் ரூ.33 லட்சம் மதிப்பில் போதை சாக்லேட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திருட்டு தொடர்பாக 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 415 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ..4,78,07,140 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 153 பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 134 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு 10 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

    பள்ளிக்கூடம் 2.0 ப்ராஜெக்ட் திட்டம் மூலம் 46,884 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 687 பள்ளிகளில் இதுவரை 1302 விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 பள்ளிகளில் மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • க.தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றிய, பேரூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. மாணவரணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் சேலம் ரா.தமிழரசன், கா.அமுதரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகரம், 15 ஒன்றியம் மற்றும் 3 பேரூர் ஆகிய பகுதிகளுக்கான மாணவரணி அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் பதவிக்கு பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
    • சேடபட்டி மு.மணிமாறன் தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வழி காட்டுதலின்படி மாணவ ரணி அமைப்பாளர்களுக்கு நேர்கணால் நடைபெற்று வருகிறது.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப் பட்டி மு.மணிமாறன் தலை மையில் மாநில மாணவ ரணி இணை செயலாளர் ஜெரால்டு மற்றும் மாநில மாணவரணி துணை செய லாளர் வீரமணி, தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன் முன்னிலையில் தெற்கு மாவட்ட மாண வரணி அமைப்பாளர்களுக் கான நேர்காணல் நடை பெற்றது.

    நேர்காணலின்போது மாநில விவசாய இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப் பினர் மகிழன், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ராமமூர்த்தி, ஆலம் பட்டி சண்முகம், மதன் குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பாச பிரபு உட்பட மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன் றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண் ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நேர்காணலுக்கு வரும் ஒவ்வொரு விண்ணப்பதா ரர்களும் வயதை சரிபார்க்க கல்விச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் கார்டு, கட்சி மாணவரணி உள் ளிட்ட ஏதாவது ஒரு அமைப்பில் பணியாற்றி இருந்தால் அதுதொடர்பான புகைப் படம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

    • அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
    • மது வேண்டாம் என்றவர் அண்ணா. ஆனால் மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி.

    கோவை,

    பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை.

    எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானமே எனக்கு முக்கியம். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க பேசிய கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

    மது வேண்டாம் என்றவர் அண்ணா. ஆனால் மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவை பற்றி நான் தரக்குறைவாக எங்கேயும் விமர்சித்தது இல்லை.

    நாளை அ.தி.மு.க தலைவர்களை பார்க்கும் போது அதே மரியாதையோடு தான் பழகுவேன். எனக்கும் அ.தி.மு.க தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் கிடையாது. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாற்று ரீதியாக நடந்த விஷயத்தை நான் பேசினேன். அதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்போம்.
    • மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இன்று தே.மு.தி.க. 19-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது உரிமைத் தொகை ஆயிரம் வழங்கியுள்ளது.

    இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், இந்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மதுரையில் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், குப்பை கூழமாகவும் இருக்கிறது.

    மேலும் இந்த உரிமை தொகை ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் போன்று. 'உன் பணம் பணம். என் பணம் பணம், உன் பணம் என் பணம்' என்ற நிலையில் தான் இருக்கிறது. மேலும் தேர்தல் வருவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் சனாதன பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. மக்களிடம் சனாதனம் குறித்து எந்த பாகுபாடும் இல்லை. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அரசியல் கட்சிகள் தான் தங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சனாதன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.

    இப்போது சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இதனால் சனாதனத்தை கையில் எடுக்கிறார்கள். அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை கையில் எடுப்பதை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பாலன், அழகர்சாமி, கணபதி, முத்துப்பட்டி மணிகண்டன், பாலச்சந்திரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
    • மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கிறோம்.

    மதுரை

    மதுரையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடை களை மூடுவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மது பான கூடங்களை மூடு வதற்கு அரசு முன்வர வில்லை. மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கி றோம்.

    இல்லையென்றால் மக்களின் ஆதரவுடன் பெரும் போராட்டம் வெடிக்கும். சில மாதங்க ளுக்கு முன்பு 200 கடை களை மூடிவிட்டு தற்போது எந்த வித முன்னறி விப்புமின்றி பல டாஸ்மாக் கடைகளை திறந்து வரு கின்றனர்.

    சனாதனம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு புரிதல் இல்லை. தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியை திசை திருப்பும் வகையில் சனாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழை யூர் குணா, மாவட்ட செய லாளர் சிறுதூர் பாலா, மாநகர் மாவட்ட செயலா ளர் தாமோதரன் உடனிருந்தனர்.

    ×