search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் காப்பீடு"

    பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நடப்பாண்டு சிறப்பு பட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 22-ந் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 31-ந் தேதி வரையிலும் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.487, மக்காச்சோளத்திற்கு ரூ.296, பருத்தி பயிருக்கு ரூ.484 தொகையினை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மட்டும் தேசிய மயமாக்க ப்பட்ட வங்கிகளில் செலுத்தி பதிவு செய்யலாம்.

    பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை ரிஷிவந்தியம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) ஈஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புகள், வாய்க்கால்கள் சீரமைப்பு, பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள இடையூறுகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விவசாயிகள் உரிய தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எனவே, விவசாயிகள் பருவ மழையால் ஏற்படும் பிரச்சனைகளான வயலில் நீர் தேங்குதல், வடிகால் பிரச்சனைகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்த தகவல்களை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் தொடர்பு எண் விவரம்:

    தஞ்சாவூர் - 6379399728, பூதலூர் - 9443336758, திருவையாறு - 8189956026, ஒரத்தநாடு - 9942237587, திருவோணம் - 9600082492, பட்டுக்கோட்டை - 8526062230, மதுக்கூர் - 9943387147, பேராவூரணி - 6381918376, சேதுபவாசத்திரம் - 9443785789, பாபநாசம் - 7904069083, அம்மாப்பேட்டை - 9344072899, கும்பகோணம் - 8754243626, திருவிடைமருதூர் - 9751786010, திருப்பனந்தாள் - 9444846155, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் - 04362 - 267679 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கான பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்ப ட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் தங்கள் நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52,000 ஹெக்டேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரப்பள்ளம் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்ணீரில் மூழ்கியிருக்கும் பயிர்களை அமைச்சரிடம் காண்பித்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உப்பனாற்றை முழுவதுமாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் கதவணைகளை புதுப்பித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    இதன் பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது, 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.

    மேலும் கனமழை காரணமாக எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகளின் கோரிக்கையான உப்பனாறை தூர்வாரவும் இப்பகுதியில் பழுதடைந்துள்ள 6 கதவணைகளை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52,000 ஹெக்டேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள அனைத்து விவசாயிகளும் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது.
    • பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி பெரும்பாலான ஏக்கர் பயிர்கள் கருகி வீணாகி விட்டன.

    இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

    பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு விவசாயிகள் நிர்வாக காரணங்களினால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    தற்போது மழை பெய்து வருவதாலும், காவேரி தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் இறங்கி உள்ள நிலையில் காப்பீடு செய்வ தற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்டம் நிர்வாகமும் பரிசீலித்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பண்ணை கருவிகள் ஜிப்சம், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • சம்பா பயிர் காப்பீடு செய்ய வருகிய 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள பூவாணம் மற்றும் அழகியநாயகிபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு பருவ பயிற்சி நடைபெற்றது.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தலைமை வகித்து பேசியதாவது, கிராம முன்னேற்றத்திற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து குழுவாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம்.

    வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 39 நெல் ரகம் விசைத்தெளிப்பான்கள் 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது எனவும், பண்ணை கருவிகள் ஜிப்சம், சிங்க் சல்பேட், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திடவும் கேட்டுக்கொண்டார்.

    நடப்பு நெல்-சம்பா பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடன் பயிர் காப்பீடு செய்திட அறிவுறுத்தினார்.

    கலைஞர் திட்டத்தின் மூலம் தொழு உரத்தினை ஊட்டமேற்றி பயன்படுத்திட திரவ துத்தநாக உயிர் உரம் ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் அளவில் 100 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பூவாணம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஏ.தேவதாஸ், அழகியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    முடிவில் துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம்.
    • திருமருகல் ஒன்றியத்தில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சம்பா,தாளடி சாகுபடி தொடங்கியுள்ளது.நெற்பயிர்களை இயற்கை இடர்பாடுகள், மழை,வெள்ளம் மற்றும் பூச்சி நோய் தாக்கப்பட்டால் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் பயிர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 1.5 சதவிகித பிரிமியத்தொகை ரூ.539 மட்டும் செலுத்தி விண்ணப்பம்,முன்மொழிவு படிவம்,வங்கி கணக்கு புத்தகம்,ஆதார் நகல்,சிட்டா அடங்கல் ஆவணம் ஆகியவற்றை வரும் 15-ம் தேதிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 கிராமங்களை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். 2022-23-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 65 வருவாய் கிராமங்கள் காப்பீட்டு தொகை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் பயிர்க்கடன் மற்றும் பயிர் காப்பீடு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் வலியு றுத்தினர்.

    வரத்து கால்வாய் சீரமைத்தல், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், கருவேல மரங்களை அப்புறப் படுத்துதல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரிசெய்தல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பா கவும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அவர்க ளது கோரிக்கைகளை பரிசீ லனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.

    இதில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • தியாகியின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம் அதிகாரியின் அலட்சியத்தால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் அனைத்து கிராமங்க ளிலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயிகள் பருவ காலங்களில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்ற னர். கடந்த சில ஆண்டுக ளாகவே பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் அதிக கடன் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காரை வருவாய் உள்ள டங்கிய 14 கிராமங்களில் விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் விவசாய பணி களை மேற்கொள்ளும்போது பயிர் காப்பீடு செய்து வரு கின்றனர். ஆனால் 4 ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்ததால் விளை நிலங்கள் வறண்டு காணப் பட்டது.

    மோட்டார் பாசன மூலம் ஓரிரு இடங்களில் விளைச் சல் ஏற்பட்டுள்ளது. அதி காரிகள் கணக்கில் கொண்டு அந்த பகுதி முழுவதும் விளைச்சல் அடைந்துள்ள தாக கணக்கீடு செய்ததால் காப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை கண்மாய் பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை கடன் மற்றும் விவசாய கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ லில் காப்பீடு தொகை கூட கிடைக்காததால் விவசாயி கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    பயிர் காப்பீடு செய்யும் பொழுது அரசு அந்நிறுவ னத்தை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசு விவசாயி களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத கிராமங்க ளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர போராட்ட தியாகி யின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.
    • லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் பேட்டியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் தங்களுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    இது குறித்து லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் "மாலைமலர்" நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் கடந்த 2022-23ம் ஆண்டு நெற்பயிர்களை விவசாயம் செய்தனர்.விளைந்த பயிர்கள் எல்லாம் மழை இல்லாமல் கருகி அவர்க ளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்குட்பட்ட கருங்குளம்,அச்சங்குடி,கண்ணனை, பெரிய தாம ரைக்குடி, சின்ன தாமரைக்குடி,நல்லிருக்கை மற்றும் வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தற்காலி மாக கைவிடுகிறோம். பயிர் காப்பீடு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டினால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    • கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்படுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • இணையதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது-

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவ னங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்து றையில் ஒப்புதல் பெற்றி ருக்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவுத் துறையில் பதிவு செய்யாத கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. தற் போது, பாரதீய கூட்டுறவு பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர் காப் பீடு உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனத் தின் பெயரிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    இந்த அறிக்கையில் இப்ப ணியிடத்திற்கு விரும்புப வர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என இணையதளத்தில் தவ றான தகவல் பரவி வரு கிறது.

    இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் மூலம் இத்தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டிருப்ப தால் இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்க ளின் கூட்டமைப்பு செய லாளரும், வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவ ருமான செந்தில்குமார் கூறிய தாவது:-

    வெங்கலகுறிச்சி, கருங்காலக்குறிச்சி, தொட்டியவலசை, திரு வாக்கி, கீழப்பனையடி யேந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியது வெங்கல குறிச்சி ஊராட்சி. 6 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன. வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெங்கலகுறிச்சி, கருங்காலகுறிச்சி கிராமங்க ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கருங்காலக்குறிச்சியில் தடுப்பு சுவர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கலகுறிச்சி, கிருஷ்ணாபுரம், தொட்டிய வலசை, கருங்காலக்குறிச்சி பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

    எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து 24 மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு போதுமான நிதி இல்லாததால் அடிப் படை வசதி செய்ய முடியாமல் உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழபனையடியேந்தல், வெங்கலகுறிச்சி கிராமங்களுக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். கீழபனையடியேந்தல் கிராமத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய தால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வது டன் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×