search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் காப்பீடு திட்டத்தில் உதவியாளர் பணி குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம்
    X

    பயிர் காப்பீடு திட்டத்தில் உதவியாளர் பணி குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம்

    • இணையதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது-

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவ னங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்து றையில் ஒப்புதல் பெற்றி ருக்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவுத் துறையில் பதிவு செய்யாத கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. தற் போது, பாரதீய கூட்டுறவு பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர் காப் பீடு உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனத் தின் பெயரிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    இந்த அறிக்கையில் இப்ப ணியிடத்திற்கு விரும்புப வர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என இணையதளத்தில் தவ றான தகவல் பரவி வரு கிறது.

    இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் மூலம் இத்தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டிருப்ப தால் இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×