என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிசி பத்திரங்கள்"

    • பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பாலிசி பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ரூபவ் வேளாண்மை துறையின் சார்பில் ரூபவ் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூபவ் 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ரூபவ் பாலிசி பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பயர் காப்பீடு பாலிசி பத்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 60 ஆயிரத்து 109 விவசாயிகளால் 63 ஆயிரத்து 50.72 எக்டேர் பரப்பளவிலான நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ள பிரிமியம் தொகை, அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் மானிய தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை முதலான விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங் கள் விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரூபவ் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பாலிசி பத்திரங்கள் ரூபவ் பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படு கிறது.

    காப்பீடு செய்துள்ள விவசாயிகள் தங்களின் பாலிசி பத்திரங்களை நேரடியாக பெற்று அதில்கு றிப்பிடப்பட்டுள்ள காப்பீடு குறித்த விபரங்களை சரி பார்த்து உறுதி செய்து பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×