search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்
    X

    சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்

    • அதிகாரி தகவல்
    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத் தில் நடப்பு சம்பா பட்டத்தில் இதுவரை 1,159-ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இப்பட்டத்திற்கான பயிர் காப்பீடு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை, முதல் மிக கனமழை பெய்து வருகிறது. எனவே பருவமழை மிக அதிகமாக பெய்து சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே, விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி விவசாயிகள் வருகிற 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசி நேர பதிவை தவிர்த்து உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து கொள்ளு மாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்மொழிவு விண்ணப் பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங் கும் அடங்கல் சான்று (பசலி 1432) மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், உள்ளிட் டவற்றை சமர்பித்து மேற்கண்ட ஆவணங்களின் புல எண். தற்போது பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×