search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interview"

    • நேர்காணல் நாளை மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது.
    • புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை கிழக்கு மாவட்ட த்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நாளை ( சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் மாநில இளைஞரணி செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு, ராஜா, இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ஆனந்தகுமார், அப்துல் மாலிக், பிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் வந்து கலந்து கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து வந்து நேர்காணலில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறது.
    • உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினரு மான காதர் பாட்சா முத்து ராமலிங்கம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்பேரில், மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாளை (நவ.1) ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மதியம் 2 மணிக்கு நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப் பிற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கான நேர்காணல் நடக்கிறது. எனது தலைமை யில் (காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்) நடக்கும் இந்த நேர்காணலில் ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்பு களில் ஏற்கெனவே பணியாற்றியிருந்தால், அதுதொடர்பான உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு சுருக்க திருத்த பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் அடுத்த மாதம் 4, 5 ந் தேதிகள் மற்றும் 18,19-ந்தேதிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே, 01.01.2024-ந் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற ேதர்தலில் 40 ெதாகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சியில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பி் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். பஞ். தலைவர் விஜயலட்சுமி விவே கானந்தன் முன்னிலை வகித்தார்.

    மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத் தினார். ஜெயலலிதா ஆட்சி யில் தாலிக்கு தங்கம், இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப் டெப் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி னார்.

    எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி காலத்தில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். நான் கேட்டு கொண்டதற்கிணங்க விருதுநகரில் மருத்துவ கல்லூரி ரூ.385 கோடி செலவில் அமைத்து தந்தார். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்தார்.

    மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி கட்டணங்களை அரசே செலுத்தும் என அறிவித்தார். கொரோனா காலத்தில் அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு ரூ.2,500, 25 கிலோ ரேசன் அரிசி வழங்கினார். விருது நகர் மாவட்டத்தில் 25 மினி கிளினிக்குகள் அமைக்கப் பட்டது.

    தி.மு.க. தேர்தல் நேரத் தின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம். அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். கல்விக் கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக் கப்பட்டது. தற் போது ஒரு கோடி பெண்க ளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வை ரத்து செய்ய வில்லை. கல்விக்கடன், நகைக்கடனையும் ரத்து செய்யவில்லை.

    பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள் ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எடப் பாடி சுட்டி காட்டு நபரே பிரதமராக வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயினார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா செய்திருந்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்.

    • சண்டைக் காட்சிகள் அனைத்தும் அருமை
    • கண்டிப்பா லியோ 2-ம் பாகம் வரும்னு எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    கோவை.

    விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. கோவை மாவட்ட த்தில் பல்வேறு திரையரங்குகளிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

    மதியம் 12 மணிக்கு முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியில் வந்தனர். அவர்கள் லியோ திரைப்படம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சஞ்சய் என்பவர் கூறியதாவது:-

    தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி உள்ள லியோ திரைப்படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது. படத்தில் விஜயின் நடிப்பு நன்றாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி உள்ளார். இந்த படம் கட்டயாம் மிகப்பெரிய வெற்றியை அடையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கரும்புக்கடையை சேர்ந்த ஜனஸா கூறும்போது, லியோ திரைப்படம் படம் வேற லெவல்ல இருக்குது. படத்தில் இட ம்பிடித்துள்ள அனைத்து சண்டை காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளை ரொம்ப அருமையாக எடுத்துள்ளனர். தளபதினாலே மாஸ் தான். படம் மிகப்பெரிய வெற்றி யடையும் என்றார்.

    கோவையை சேர்ந்த சந்துரு கூறுகையில், முதலில் இருந்தே படம் நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் காட்சிகள் அனைத்தையும் லோகேஷ் பார்த்து பார்த்து எடுத்து இருக்கிறார். அனைத்துமே சிறப்பாக வந்துள்ளனது. சண்டை காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது. கண்டிப்பா லியோ 2-ம் பாகம் வரும்னு எதிர்பார்க்கிறோம் என்றார்.

    சாய்பாபாகாலனியை சேர்ந்த ரஜித் கூறும்போது, படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. முதல் ஷோ பார்க்கறதுல ரொம்ப சந்தோசம். இந்த லியோ படம் கண்டிப்பா மிகப்பெரிய வெற்றியை அடையும். படத்தில் பாட்டு, சண்டை என எல்லாமே நல்லா அமைந்தி ருக்கிறது என்றார். உக்கடம் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:-

    லியோ படத்துல வரக்கூடிய காட்சிகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது.

    இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் லோகேஷ் கண்டிப்பாக எடுப்பார். படத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன் என அனைவருமே மிக அருமையாக நடித்துள்ளனர். சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறும் பெட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
    • புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு, முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநக ராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனராக பிரதாப் என்பவர் இருந்து வந்தார். இவர் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து கோவை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

    அவரை முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர் அறைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு கோவை மாநகராட்சியின் முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், புதிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுருபிரபாகரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டு கோப்புகளில் கையெ ழுத்திட்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு, முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநக ராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு 2 வருடம் மாநகராட்சி பணிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. அதனை வைத்து இங்கு பணிகளை மேற்கொள்வேன்.

    பொதுமக்கள் என்னிடம் அளிக்க கூடிய கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவையில் முக்கிய பணிகளான பாதாள சாக்கடை சாலை மேம்படுத்துவது உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு என்ன பிரச்சினை, அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து சக அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரனிடம், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் முதல் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், விதவைகள், முதியவர்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறும் பெட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.

    • ஆக்‌ஷன் காட்சிகளில் அனைத்து தரப்பினரையும் நடிகர் விஜய் தன்வசப்படுத்தி விட்டார்.
    • லியோ படம் பார்த்த மதுரை ரசிகர்கள் நெகிழ்ச்சி பேட்டியளித்துள்ளனர்.

    மதுரை

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை காண ரசி கர்களிடம் இருந்த ஆர்வத் திற்கேற்ப படமும் சிறப்பாக வந்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் கள்.

    மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அள வுக்கு 41 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. அதிகாலை முதலே முதல் காட்சியான 9 மணிக்கு படம் திரையி டப்பட்டதும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். தியேட்டருக்கு வெளியே விஜய்யின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் திரையரங்கிற்கு உள்ளேயும் விஜயின் அறி முக காட்சியை பார்த்து மெய்சிலிர்த்தனர்.

    படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் நம்மிடம் கூறியதாவது:-

    சதீஷ் (விஜய் மக்கள் இயக்க மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர்): தளபதி விஜயை இதுவரை காதல் சப்ஜெக்ட் படங்களிலேயே அதிகம் பார்த்து வந்துள்ளோம். அதிலும் அவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்துள் ளார். காலம் மாற, மாற ரசிகர்கள், பொதுமக்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ற படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் இந்த லியோ படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக மக்களையும் ஈர்த்துவிட்டார்.

    அதாவது இந்த சமுதாயத்தில் புரையோடிப்போய் இருக்கும், சமூகத்தை சீரழிக்கும் போதைப்ெபாருள் ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த லியோ திரைப்படம் அதனை ஒழிக்கும் விதத்தையும் தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள போதைப்பொருள் குறித்த நெட் ஒர்க் குறித்து முழுமையாக காண்பித்து அனைத்து காட்சிகளிலும் விஜய் மிரட்டியுள்ளார்.

    ஆக்ஷன், காமெடி, பாடல், சென்டிமெண்ட் என்று அனைத்திலும் விஜய் ஜொலிக்கிறார். மாஸ் என்றால் தளபதி, தளபதி என்றால் மாஸ் என்பதை மீண்டும் ஒருமுறை விஜய் நிரூபித்துள்ளார். படத்தின் இறுதிகாட்சியில் மீண்டும் நீர வரவேண்டும் என்பது போல் முடிந்துள்ளது. எனவே லியோ படத்தின் 2-ம் பாகத்தை விரைவில் நாம் எதிர்பார்க்கலாம் என்றார்.

    சூர்யகுமார், விஜய் (திருப்பரங்குன்றம்): நடிகர் விஜய் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். தனது அசுரத்தனமான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி இருக்கிறார். லியோ படம் வெளியான இன்றுதான் எங்களுக்கு தீபாவளி. படத்தில் அவரது கெட்அப், நடிப்பு, ஆக்ஷன், காமெடி என எதையும் ஒதுக்கிவிட முடியாது. அத்தனையும் சிறப்பாக இருக்கிறது. சமூகத்தை சீர்திருத்த அவர் எடுத்துள்ள முயற்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழகாக இயக்கியுள்ளார். சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் ரசித்து பார்க்கும் அளவிற்கு படம் வந்துள்ளது.

    பாலாஜி (ஆரப்பாளையம்): தளபதியின் 67-வது படமான லியோ அருமையாக வந்துள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட படம் சூப்பர். மற்ற மாநிலங்களில் எல்லாம் படம் முன்கூட்டியே திரையிடப்பட்டாலும் படத்தை பார்த்ததும் அந்த ஏக்கம் மறந்து போனது. லோகேஷ் கனகராஜ் அருமையாக படம் எடுத்திருக்கிறார்.

    தமிழகத்தில் சிறப்பு காட்சி காலை 7 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அந்த கவலையெல்லாம் திரையில் தளபதியை பார்த்ததும் மறந்து போனது. தளபதியை பார்த்தோம், ரசித்தோம், என்ஜாய் பண்ணினோம். வரும் 6 நாட்கள் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லியோ படம் வெற்றி பெற இறைவனை வேண்டுவதாக பேட்டியளித்தார். அவருக்கு என் நெஞ்சார்த்த நன்றிகள்.

    கணேஷ்குமார் (திடீர்நகர்): தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ரசிகர்களாகிய நாங்கள் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தளபதி விஜய் இரண்டு வேடங்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க இரண்டும் ஒன்றுதான் என்று கதையில் பிரமிக்க வைக்கிறது.

    இறுதியாக கமலஹாசன் தளபதி விஜய்க்கு தொலைபேசி மூலம் நாம் இருவரும் இணைந்து இந்நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று அடுத்த படத்துக்கு தயாராகிறார்கள். இது அடுத்த படத்திற்கு மட்டுமல்லாது அரசியலிலும் இணைந்து செயல்படுவார்களா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்பு
    • நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளருக்கு எண்ணற்றோர் விண்ணப்பம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார்.

    சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரகாஷ், இளையராஜா, அப்துல்மாலிக், பிரபு, சீனிவாசன், ஆனந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நௌபுல், நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கட்சி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம், நகர-ஒன்றிய-பேரூர் கழகம் வாரியாக மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோவன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு நன்றி கூறினார்.

    • 75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார்.
    • அமலாக்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

    கோவை,

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை தனியார் கல்லூரியில் இன்று நடந்த பேச்சு போட்டியை நீலகிரி தொகுதி எம்.பி.ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    நான் படித்த காலத்தில் கலை கல்லூரியில் மட்டும்தான் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு நடத்துவதில்லை. அரசியலில் பொறியியல், மருத்துவ மாணவ ர்களுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இருந்ததை இங்கு போக்கி இருக்கின்றோம்.

    பள்ளி பருவத்தில் எனக்கு கலைஞரையும், அண்ணாவையும் தெரியாது. பரிசு கிடைக்கும் என்பதால் அண்ணா மறைவிற்கு கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையை படித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தியது.

    75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார். 1975-க்கு முன்னாடியே தமிழகத்தில் அத்தனை கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. வெற்றி தோல்விகளை தாண்டி, இங்கு இருக்கும் மாணவர்கள் அரசியலில் ஜொலிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து ஆ.ராசா எம்.பி.யிடம் நிருபர்கள், கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள உங்களது நிலங்களை அமலாக்கதுறை முடக்கியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அமலா க்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

    தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஏன் பதுங்கிக்குவாங்களா? என பதில் அளித்தபடியே புறப்பட்டு சென்றார்.

    • காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
    • பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகரில் கைதிகளை நீதிமன்றம், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஆயுதப்படை போலீசாருக்கு பாடி ஓன் காமிரா என்ற தோள்பட்டை காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 24 போலீசாருக்கு தோள்பட்டை காமிராக்களை வழங்கினார்.

    தொடர்ந்து அதிநவீன காமிராக்கள் பொருத்திய வாகனங்கள் அணிவகுப்பு நடத்த ப்பட்டது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    தொடர்ந்து பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றச ம்பவங்களில் ஈடுபட்டு சிறை செல்லும் கைதிகளை நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் வழிக்காவலில் தப்ப முயலும் நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு தோள்பட்டை கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போல கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    சிறை கைதிகளை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் ஆகிய வற்றை நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் 26 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் மட்டும் 15 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, பல கி.மீ. தொலைவு வரை சென்று அவர்களை கைது செய்து வருகிறோம். மாநகரில் கஞ்சா புழக்கம் பெரிய அளவில் இல்லை. ஆனாலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநகரில் உள்ள போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ப தால் ஆரஞ்சு அலார்ட் ஒத்திகை வாகன சோதனை நடைபெற்றது. திடீரென பெரிய அளவில் கொள்ளை மற்றும் குற்றச்சம்பவம் நடைபெறும்போது உடனடியாக மாநகர் முழுவ தும் வாகன சோதனையை துரிதப்படுத்துவதற்காக குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ளது.

    மாநகரில் இருசக்கர வாகன திருட்டு குறைந்து உள்ளது. மேலும் பழைய குற்றவாளிகள் கண்காணிப்பில் உள்ளனர். இருசக்கர வாகன திருட்டில் சமீபகாலமாக புதிய குற்றவாளிகள் இறங்கி உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவ மழையால் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை துரிதபடுத்த 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடிய விரைவில் போலீசாருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான காவலர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர் என கூறினார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.
    • லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் பேட்டியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் தங்களுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    இது குறித்து லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் "மாலைமலர்" நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் கடந்த 2022-23ம் ஆண்டு நெற்பயிர்களை விவசாயம் செய்தனர்.விளைந்த பயிர்கள் எல்லாம் மழை இல்லாமல் கருகி அவர்க ளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்குட்பட்ட கருங்குளம்,அச்சங்குடி,கண்ணனை, பெரிய தாம ரைக்குடி, சின்ன தாமரைக்குடி,நல்லிருக்கை மற்றும் வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தற்காலி மாக கைவிடுகிறோம். பயிர் காப்பீடு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டினால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.
    • கோவை மாவட்டத்தை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் இருப்பதாக கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி

    கோவை,

    சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டருடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு திட்டங்களை செயல்ப–டுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் உள்ளது.

    குறிப்பாக போக்சோ வழக்குகள் பதிவாகி வருகிறது. இதனை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மற்றும் மாதம் ஒருமுறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

    மனித-வனவிலங்கு மோதல் தடுக்க தனிகுழு அமைக்கப்பட உள்ளது. காட்டுப்பன்றி பிரச்சினை சட்ட ரீதியாக அணுக வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    திட்டங்கள் செயல்படுத்துவதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு துறைகள் 5 முதல் 10-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறையில் "ஸ்டெப் சர்வே" இலக்கு வைத்து உள்ளது. அந்த இலக்கு நோக்கி சென்று வருகிறோம். பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் தவிர்ப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வருடம் 3 முதல் 4 இறப்பு பதிவாகி உள்ளது.

    மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு அட்டையை 7 லட்சம் பேர் வைத்துள்ளனர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் பயன்படுத்தி கொள்ள முடியும். நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கோவை மாவட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 100 சதவீதம் எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.

    இதனை அனைத்து வகை யான பயனாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆலோசனை கூட்டம் பயனுள்ளதாக இருந்தது.

    கோவைக்கான மாஸ்டர் பிளானை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். இதற்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன். மண்டல அளவிலான மாஸ்டர் பிளான் தயாரித்து வருகிறோம்.

    மாவட்டத்தில் அரசு நிலம் மீட்பு அதிகளவில் நடந்து வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்தில் தற்போது வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விமான நிலையம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    மீதம் உள்ள 20 முதல் 30 ஏக்கர் வரையிலான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடியும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பாதுகாக்க வேலி அமைக்கப்படும்.

    கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் படிப்படியாக நடத்தப்படும். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு 2ம் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் டிசம்பரில் முடியும். மெட்ரோ ரெயில் அவிநாசி ரோடு, சரவணம்பட்டி இடது புறத்தில் அமைய உள்ளது. இந்த பணிகளால் பாதிப்பு ஏற்படாது. யாரும் கவலைப்பட தேவையில்லை.

    டெக்னாலஜி நிறைய இருக்கிறது. பிளான் செய்து பணிகள் நடத்தப்படும்.

    மேலும், தொழில் துறையினருக்கு குறைதீர் கூட்டம் நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கங்கள் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திட்ட சாலைக்கு என ரூ.144கோடி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில், ரூ. 20 கோடிக்கு திட்ட சாலைக்கு அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கல்வி கடனுக்கு 2,500 விண்ணப்பம் வாங்கி உள்ளோம். இதில், வங்கிகளில் உள்ள பிரச்சினை குறித்து தலைமை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

    இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் குழு அமைத்து 2 வாரங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    கோவைக்கு கல்வி கடன் வழங்க ரூ.400 கோடி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் யாருக்கு தேவை என்பதை கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மகளிர் உரிமைத் தொகைக்கு 31 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர். மாவட்ட அளவில் 60 சதவீதம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.

    பள்ளி, கல்லூரியில் போதை பொருள் பழக்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×