search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகரில் குற்றசம்பவத்தை தடுக்க 26 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள்- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி
    X

    மாநகரில் குற்றசம்பவத்தை தடுக்க 26 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள்- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி

    • காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
    • பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகரில் கைதிகளை நீதிமன்றம், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஆயுதப்படை போலீசாருக்கு பாடி ஓன் காமிரா என்ற தோள்பட்டை காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 24 போலீசாருக்கு தோள்பட்டை காமிராக்களை வழங்கினார்.

    தொடர்ந்து அதிநவீன காமிராக்கள் பொருத்திய வாகனங்கள் அணிவகுப்பு நடத்த ப்பட்டது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    தொடர்ந்து பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றச ம்பவங்களில் ஈடுபட்டு சிறை செல்லும் கைதிகளை நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் வழிக்காவலில் தப்ப முயலும் நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு தோள்பட்டை கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போல கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    சிறை கைதிகளை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் ஆகிய வற்றை நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் 26 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் மட்டும் 15 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, பல கி.மீ. தொலைவு வரை சென்று அவர்களை கைது செய்து வருகிறோம். மாநகரில் கஞ்சா புழக்கம் பெரிய அளவில் இல்லை. ஆனாலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநகரில் உள்ள போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ப தால் ஆரஞ்சு அலார்ட் ஒத்திகை வாகன சோதனை நடைபெற்றது. திடீரென பெரிய அளவில் கொள்ளை மற்றும் குற்றச்சம்பவம் நடைபெறும்போது உடனடியாக மாநகர் முழுவ தும் வாகன சோதனையை துரிதப்படுத்துவதற்காக குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ளது.

    மாநகரில் இருசக்கர வாகன திருட்டு குறைந்து உள்ளது. மேலும் பழைய குற்றவாளிகள் கண்காணிப்பில் உள்ளனர். இருசக்கர வாகன திருட்டில் சமீபகாலமாக புதிய குற்றவாளிகள் இறங்கி உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவ மழையால் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை துரிதபடுத்த 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடிய விரைவில் போலீசாருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான காவலர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர் என கூறினார்.

    Next Story
    ×