search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்- ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேட்டி
    X

    கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்- ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேட்டி

    • ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறும் பெட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
    • புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு, முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநக ராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனராக பிரதாப் என்பவர் இருந்து வந்தார். இவர் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து கோவை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

    அவரை முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர் அறைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு கோவை மாநகராட்சியின் முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், புதிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுருபிரபாகரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டு கோப்புகளில் கையெ ழுத்திட்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு, முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநக ராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு 2 வருடம் மாநகராட்சி பணிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. அதனை வைத்து இங்கு பணிகளை மேற்கொள்வேன்.

    பொதுமக்கள் என்னிடம் அளிக்க கூடிய கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவையில் முக்கிய பணிகளான பாதாள சாக்கடை சாலை மேம்படுத்துவது உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு என்ன பிரச்சினை, அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து சக அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரனிடம், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் முதல் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், விதவைகள், முதியவர்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறும் பெட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.

    Next Story
    ×