search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்த மாதம் 4 நாட்கள் நடக்கிறது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்- கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி
    X

    அடுத்த மாதம் 4 நாட்கள் நடக்கிறது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்- கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி

    • அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு சுருக்க திருத்த பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் அடுத்த மாதம் 4, 5 ந் தேதிகள் மற்றும் 18,19-ந்தேதிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே, 01.01.2024-ந் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×