search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி பதவிகளுக்கு நாளை நேர்காணல்- மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கை
    X

    நெல்லை கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி பதவிகளுக்கு நாளை நேர்காணல்- மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கை

    • நேர்காணல் நாளை மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது.
    • புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை கிழக்கு மாவட்ட த்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நாளை ( சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் மாநில இளைஞரணி செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு, ராஜா, இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ஆனந்தகுமார், அப்துல் மாலிக், பிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் வந்து கலந்து கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து வந்து நேர்காணலில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×