search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை டெல்லி சென்று திரும்பும்போது தலைவராக வருவாரா?
    X

    சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசிய காட்சி.

    அண்ணாமலை டெல்லி சென்று திரும்பும்போது தலைவராக வருவாரா?

    • அண்ணாமலை டெல்லி சென்று திரும்பும்போது தலைவராக வருவாரா?
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. கூட்டத்தில் பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழி லா ளர்கள் சங்கம் சார்பில் தீப்பெட்டி, பட்டாசு தொழில் நூற்றாண்டு விழா சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், யூனி யன் துணைத் தலைவர் விவேகன் ராஜ், சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்த ரராஜன், பட்டாசு தொழிற் சங்கத்தை சேர்ந்த தேவா, பாலசுப்பிரமணியம், முரு கன், மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல தடைகளை தாண்டி சிவகாசி தீப்பெட்டி, பட் டாசு தொழில் நூற்றாண்டை கடந்துள்ளது. மோடி அர சால் பட்டாசு தொழிலுக்கு பல சோதனைகள் வந்தது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும். ஏற்று மதிக்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்ப டும். உலக அளவில் பட்டாசு தொழிலை கொண்டு செல்ல இந்திய கூட்டணி தலைவர்கள் விரும்புகி றார்கள்.

    காங்கிரஸ் ஆட்சி செய் யும் மாநிலங்களில் வருகின்ற தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்ப னைக்கு தடை விதிக்காமல் இருக்க தேவையான முன்னேற் பாடுகள் செய்யப் படும். பட்டாசுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. முதலில் அப்பகுதியில் வைக்கோல் எரிப்பதை டெல்லி அரசு தடை செய்ய வேண்டும். டெல்லி சுற்றுச் சூழல் மாசுக்கு பட்டாசு காரணம் இல்லை என்பதை அந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழக காங்கி ரஸ் ஒத்துழைப்பு தரும். அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அவர் திரும்பும் போது தலைவரா கவே வருவாரா? அல்லது புது தலைவர் வருவரா? பொறுத்திருந்து பார்ப் போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலை வர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×