search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்புமணி"

    • தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
    • விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதும் அந்த திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும்.

    சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம், மறுசுழற்சி செய்திட வேண்டும். சேலம் உருக்காலையினை தனியார் மயமாக்கிடும் திட்டத்தினை அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் திருப்ப ஒப்படைக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு அதற்கான குழுவை மட்டுமே அமைத்துள்ளது. திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வெளிவந்த பின்னரே பா.ம.க. அதுகுறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.

    விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் என கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம், வக்கீல் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், எடப்பாடி மேற்கு ஒன்றிய அமைப்பு தலைவர் தம்பிதுரை, வன்னியர் சங்க பொறுப்பாளர் ராமச்சந்திரன், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் கிழக்கு ஒன்றியம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது.
    • டெல்லி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.

    சகல கட்சிகளையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் பா.ம.க.வின் கூட்டணி வியூகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கணித்துவிட முடியாது.

    2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம், முன்னேற்றம்-அன்புமணி என்ற முழக்கத்தோடு பா.ம.க. தனித்து போட்டியிட்டு ஏமாற்றத்தைதான் பெற்றது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. தற்போது அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கி றதா? என்றால் டெல்லி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இல்லை என்கிறார்.

    என்ன தான் நினைக்கிறாராம் அன்புமணி? 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மந்திரி சபைக்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறாராம். தமிழகத்தில் வலிமையான தலைவர்கள் இல்லாததால் எங்கள் சின்னவர் போடும் கணக்கும் சரியாக இருக்கலாம் என்கிறார்கள் பாட்டாளி சொந்த ங்கள்.

    தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். #anbumani

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை காக்கவும், வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் நடந்தது. இதில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    வைகை ஆற்றை காப்பதில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டுள்ளது.

    தண்ணீர் தேக்கும் திட்டங்கள் அரசிடம் இல்லை. மன்னர் காலத்தில் கட்டிய நீர்த்தேக்கங்களை 50 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கண்டுகொள்ள வில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கட்சிகள்தான் தமிழகத்தில் உள்ளன.

    நீர் மேலாண்மை திட்டத்தில் திராவிட கட்சிகள் முதலீடு செய்யவில்லை. மாறாக இலவச திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தமிழக முன்னேற்ற திட்டங்கள் பா.ம.கவிடம் நிறைய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீரின்றி வைகை வறண்டுள்ளது. வைகை அணையின் 71 அடி உயரத்தில் 21 அடி தூர்ந்து போயுள்ளது.

    258 கி.மீ. நீளம் கொண்ட தமிழகத்தின் 4-வது பெரிய ஆறான வைகையை நாம் காப்பாற்ற வேண்டும்.

    தமிழக மீனவர்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை அரசு துப்பாக்கியால் சுட்டால் ஒரு செய்தியுடன் முடிந்து விடுகிறது.

    அதே சமயத்தில் மற்ற மாநில மீனவர்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்துகிறது. எங்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது. ஓட்டு நோக்கம் கிடையாது. தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும்.

    காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் மிக மோசமான விளைவுகள் வரவிருக்கிறது. ஓராண்டு வெள்ளம். அடுத்த மூன்று ஆண்டு வறட்சி. அடுத்து மழை, அடுத்து வெள்ளம் இப்படி மாறி மாறித்தான் வரவிருக்கிறது. நாம் இதற்கு தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.

    150 ஆண்டுகளுக்கு முன் புவியின் சராசரி வெப்ப நிலை 14 சென்டி கிரேட் ஆக இருந்தது. இன்று 15 சென்டிகிரேட் ஆக மாறி உள்ளது. 15.5 சென்டிகிரேட் ஆக ஆகும்போது உலகம் அழிந்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல்ரமணன், பொருளாளர் திலகபாமா, துணை செயலாளர் தளபதி ராஜ்குமார், மாவட்ட செயலாளர் அக்கீம் உள்பட பலர் பங்கேற்றனர். #anbumani

    உடல்நிலை குறைவால் உயிரிழந்த காடுவெட்டி குரு உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு ராமதாஸ், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினர். #KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.குரு (வயது 57) நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    இதையடுத்து குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குருவின் உடலுக்கு வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காடுவெட்டிக்கு வந்து குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


    முன்னதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.பி. பொன்னுச்சாமி, அ.தி.மு.க.வை சேர்ந்த அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராம ஜெயலிங்கம், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
    இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காடுவெட்டிக்கு நேரில் சென்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு காடுவெட்டி குரு உடல் இன்று அடக்கம் செய்யப்படும். #KaduvettiGuru #Ramadoss #PonRadhakrishnan
    ×