என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pmk alliance"

    • வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
    • கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.

    இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், பாமகவுக்கு ராமதாஸ் மட்டுமே தலைவர் என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட விரோதம் என பாமக தலைவர் ராமதாஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.

    17.12.2025 முதல் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.

    இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #ADMK #PMK #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தொகுதிகளை பிரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். 

    மேலும், 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக-பாமக கூட்டணி குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பா.ம.க.-அ.தி.மு.க. கூட்டணி. அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டுவிட்டு, தற்போது அக்கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். நாட்டைப் பற்றி ராமதாசுக்கு கவலையில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் கிடைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி விமர்சித்து புத்தகம் எழுதிய பாமக, தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது அவமானமாக இல்லையா? ராமதாசுக்கு சூடு, சொரணை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். #ParliamentElection #ADMK #PMK #DMK #MKStalin
    ×