search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறமை"

    • மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது.
    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மகாலில் மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    போட்டியை ஐ.எப்.எப். செயலாளர் ஜெகந்நாதன், எம்.டி.ஐ.எப்.எப். செயலாளர் தனசேகரன் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் மிஸ்டர் மதுரையாக அகதியன் வெற்றி பெற்றார். மதுரை சிறந்த ஜிம் விருதை அண்ணாநகர் நியூ வேர்ல்ட் ஜிம் உரிமையாளர் தனசேகரனுக்கு கிடைத்தது. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை மனோஜ்குமார் தட்டி சென்றார்.

    மதுரை மாவட்ட சிறுபான்மை தலைவர் முன்னாபாய், தொழிலதிபர் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    • தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது.
    • திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான், நல்ல சம்பளத்தில், சிறப்பான பணியிடத்தில் உங்களுக்கான பணிச்சூழலைக் கட்டமைக்க முடியும்.

    1. தொழில்நுட்ப அறிவு

    தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப திறன்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, எக்செல் மற்றும் ஜி-சூட் போன்ற மென்பொருள்களைக் கையாளும் திறன், மென்பொருள் அல்லாத துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் சரியான தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதில் உங்கள் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

    2. சிக்கல் தீர்க்கும் திறன்

    நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன. அவை அனைத்தையும், ஒருவர் மட்டுமே தீர்த்துவிட முடியாது. எனவே, தங்களுடைய நிறுவனத்தில்/ குழுவில் பணியாற்றும், எல்லா பணியாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    3. மேம்பாடு

    கற்றல் மற்றும் மேம்பாடு என்பது முடிவில்லாத கற்றல் செயல்முறையாகும். வேகமாக மாறிவரும் துறையில், புதிய விஷயங்களையும், சமீபத்திய வழிமுறைகள்/தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தால், புதிதாக அறிமுகமாகும் கோடிங் மொழிகளை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் நகர முடியும்.

    4. தொடர்பு திறன்

    உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியைக் காண தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் யோசனையை மக்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தொடர்பு திறன் அவசியம். ஒரு நல்ல தொடர்பாளராக, எவ்வாறு பேசுவது, கருத்துகளைப் பரிமாறுவது, பிறர் கருத்தை கவனமாகக் கேட்டறிவது என்பது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    5. நிறுவன திறன்கள்

    ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்காமல், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தலாம். உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் அட்டவணையைத் திட்டமிடுவது உங்களை உந்துதலாகவும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கும்.

    6. நேர மேலாண்மை

    நேரம் என்பது பணம் போன்றது. உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடியாவிட்டால், நீங்கள் உங்களது வருமானத்தை பணயம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் தனது நேரத்தை சிறப்பாக நிர்வகித்தால் மட்டுமே தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற முடியும். இது வேலை-வாழ்க்கை சமநிலையை கடைப்பிடிக்க உதவுகிறது.

    • வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும்.
    • இளம் வழக்கறிஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை தாங்கியது.

    சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிவஞானம், ஆர்.எஸ்.பி.சவுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இவ்விழாவில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் 18 மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் ஏற்புரை வழங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் பேசுகையில், வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும். இளம் வழக்கறிஞர்கள் பொறு மையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இளம் வழக்கறிஞர்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் மட்டுமின்றி, ஒழுக்கத்தை கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தை முழு அதிகாரத்துடன் கூடிய முதன்மை மாவட்ட நீதிமன்றமாக அமைத்துத்தர நீதியரசர்களிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • செல்போன்களில் மூழ்கி கிடக்காதீர்கள்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

    நாகர்கோவில்:

    கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர் கல்வி வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந் தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் கலெக்டர் அரவிந்த், பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வி மற்றும் எழுத்தறிவில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வரு கிறது. அதற்கேற்ப, பள்ளி மாணவ, மாணவிகள் தங்க ளது தனி திறமைக்கேற்ப கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். பொது அறிவினை வளர்த் துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாளும் பத் திரிகைகள் மற்றும் அறி வுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன்க ளில் மூழ்கி கிடக்ககூடாது. ஒரு பாடத்தை படிக்கும் பொழுது கேள்வி, பதில் களை மட்டும் படிக்காமல் முழு பாடத்தையும் படிக்க வேண்டும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டும். எளிதாக புரிந்து கொண்டு அதிக மதிப்பெண் பெறக்கூடிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றிபெறலாம். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு ஏதா வது ஒரு பட்டப்படிப்பு போதும். ஐஏஎஸ் படிப்பில் 27 வகையான மத்திய அரசு பணிகள் உள்ளன. அதற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் சட்ட கல்வி பயில நிறைய வாய்ப்புகள் உள்ளது. மத் திய பல்கலைக்கழகங்களில் படிக்க நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சேர வேண்டுமானால் 12-ம் வகுப் பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மருத்துவ படிப்பு மட்டுமல்லாமல் அதற்கு நிகரான துறையை யும் தேர்ந்தெடுத்து படிக்க லாம். டிபார்ம், பல் மருத்து வம்போன்ற படிப்புகளையும் படிக்கலாம். கால்நடை மருத் துவம், விவசாயம், பொறியி யல் படிப்பு (தமிழ் வழியில்) படித்து வேலை வாய்ப்பை பெற முடியும்.

    பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உங் களை உயர்வான நிலைக்கு கொண்டு வர கஷ்டப்படுகி றார்கள். அவர்களின் கஷ் டங்களை, எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பழக்க வழக் கங்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் உயரிய இலக்கை எட்டும் நோக்கில் 12-ம் வகுப்பு தேர்வில் கவன சிதைவின்றி தன்னம்பிக்கை யுடனும், விடா முயற்சியுட னும், கடின உழைப்புடனும் தேர்வினை எதிர்கொண்டு வாழ்வில் ஏற்றம்பெறவேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கொட்டாரம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதீபா மற்றும் ஆசிரியர் கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் மொழியை நன்றாகக் கற்ற பின்னர் 2-வது மொழியை சொல்லிக்கொடுங்கள்.
    • பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூச்சப்படாதீர்கள்.

    தங்கள் குழந்தைகள் பல மொழிகளிலும் புலமை பெற்று பன்முகத் திறமையாளராக விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு, பிறமொழிகளை கற்றுக்கொள்ள குழந்தை களுக்கு எந்த வயது சிறந்தது, எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானதாகும். குழந்தையின் மூளை வளர்ச்சி அவர்களின் பத்து வயதுக்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும்.

    எனவே, அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின் 7 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது கேட்டல், உணர்தல், பேசுதல் முதலிய செயல்களே முதன்மை வகிக்கின்றன. தாய்மொழி அல்லாத பிற மொழிகளைப் பேசும் சமூகத்தில் வளரும் குழந்தைகளால், அந்த மொழியை எளிமையாகப் புரிந்து கொண்டு நாளடைவில் பேசவும் முடியும். இது இயல்பாகவே அவர்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் வளர்க்கும்.

    ஒரே வார்த்தையைத் தனக்கு அறிமுகமான பல மொழிகளில் எப்படிப் பேசுகிறார்கள் என்று, தொடர்ந்து கவனிப்பதன் மூலம் பன்மொழி சொல்லாடலில் குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு வீட்டில் பேசும் தாய்மொழி தமிழாகவும், அந்த வீட்டின் பணிப்பெண் பேசுவது தெலுங்கு மொழியாகவும், சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினர் பேசுவது மலையாளம், இந்தி போன்ற பிற மொழி யாகவும் இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தொடர்ந்து பல மொழிகளின் ஓசையைக் கேட்கும் வாய்ப்புகள் உள்ளதால் மொழித்திறன் வளர்ச்சிக்கு மேம்படும்.

    குழந்தைகைள சிறுவயதிலே அவர்களைப் பயிற்சி வகுப்புகளில் சேர்க்காமல், வீட்டில் வைத்தே முதலில் சிறு சிறு பயிற்சிகள் வழங்கலாம். ஒரு மொழியில் புது வார்த்தையைச் சொல்லி 'இது என்ன மொழி என்று கண்டுபிடி?' என்றோ, ஒரே வார்த்தையை பல மொழிகளில் எப்படிச் சொல்வார்கள் எனக் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களுக்கு புது மொழி வார்த்தைகளை அறிமுகப்படுத்தவோ செய்யலாம்.

    முதல் மொழியை நன்றாகக் கற்ற பின்னர் 2-வது மொழியை சொல்லிக்கொடுங்கள். அதேசமயம் பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூச்சப்படாதீர்கள். தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாக நினைத்துக் கற்றுக் கொடுங்கள். தாய்மொழியில் குறும்பாடல்கள், கதைகள் சொல்ல பயிற்சி அளிக்கலாம். குழந்தைகளிடம் பேசுவதற்கு பிரத்தியேகமாக நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் டி.வி., அலைபேசி, வானொலி போன்ற உபகரணங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தையின் பேசும் திறன் மேம்படும்.

    • திறமைகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வர வேண்டும்
    • பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடலில் பா.ஜனதா தலைவர்அண்ணாமலை பேச்சு

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் அங்குள்ள மாணவிகளுடன் கலந்துரையாடினார்.அப்போது அண்ணாமலை பேசியதாவது:-

    மாணவர்களுக்கு விளையாட்டு என்பது ஒரு அங்கமாகும். உடல் நலத்திற்கு மட்டுமின்றி மன நலத்திற்கும் விளையாட்டு அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் இயற்கையை ரசிக்க வேண்டும்.

    மழையை கண்டு அஞ்சி ஓடி விடக்கூடாது. மழையில் நனைந்து பழகிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார். தொடர்ந்து மாணவ- மாணவிகள் கேட்ட கேள்வி களுக்கு அண்ணாமலை பதில் அளித்தார். மாணவ -மாணவிகள், நீங்கள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதற்கு தூண்டுதலாக இருந்தது யார்? உங்களின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்? ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு ஏற்ற நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் பணி யாற்ற வில்லை? எத்தனை ஆண்டு கள் போலீஸ் துறையில் பணியாற்றினீர்கள்?என கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறிய தாவது:-

    என்னை ஐ.பி.எஸ்.அதிகாரியாக கொண்டு வர தூண்டுதலாக இருந்தது, நான் வாழ்க்கையில் சந்தித்த நேர்மையான மனிதர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான். கர்நாடகாவில் 9 ஆண்டுகள் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியுள்ளேன். அங்கு பணியாற்றிய போது மக்களுக்கு சீருடை அணிந்து பணியாற்றினேன்.தற்பொழுது தமிழ்நாட்டில் சீருடை அணியாமல் மக்கள் பணி செய்து வருகிறேன்.

    நான் பிறந்தது ஒரு குக்கிராமமாகும்.அங்கு 30-க்கும் குறைவான வீடுகளே இருந்தது. ஆடு, மாடுகள் விவசாயம் என அந்த வாழ்க்கை சூழலில் வளர்ந்தவன் நான். இந்த விழா மேடையில் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதே சாதனையாக கருதுகிறேன்.

    எல்லோருக்கும் ஒரு கெட்ட குணம் இருக்கும். நாம் நம்மையே சுய பரிசோ தனை செய்து நல்ல குணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி தன்மை இருப்பது போல் மனிதனுக்கும் தனித்தனி திறமைகள் உண்டு அந்த திறமைகளை நாம் கண்டறிந்து வெளிக் கொண்டு வர வேண்டும். எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அனைவரையும் சமமாக கருத வேண்டும்.அனைவரையும் மதிக்க தெரிந்திருக்க வேண்டும். இதுவே தலைமை பண்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×