என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "injury"
- கரிக்கம்பட்டு பகுதியில் வந்த போது, பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடந்துள்ளார்.
- காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் நோக்கி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தை சேர்ந்த நாகப்பன் (வயது 51), சிவபாலன் (57) ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஒலக்கூர் அடுத்த கரிக்கம்பட்டு பகுதியில் வந்த போது, பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடந்துள்ளார். இவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கார் பின்னால் வந்த அரசு பஸ், காரை மோதியது. அரசு பஸ் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதியது. கண்டெய்னர் பின்னால் வந்த கார், கண்டெயினர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உள்பட கடலூரை சேர்ந்த தையல்நாயகி (47), வடலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (50), விழுப்புரம் பொன்னி (45), பண்ருட்டி பலராமன் (61), திண்டிவனத்தை சேர்ந்த ஜெயபிரதாப் (28), ரமணி (30), பெருமாள் (40) ஆகியோர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
- தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் பகுதியில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மின் ஊழியர் யுவராஜ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாரத விதமாக திடீரென்று மின் ஊழியர் யுவராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
- இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.
இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார்.
ஆல்-ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு தனது அகில்லெஸ் தசைநார் சிதைந்ததால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் பிரேஸ்வெல் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு நாளை செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் நீண்டநாள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பையை அவர் தவறவிடுவார்.
ஐபிஎல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து கணவன்-மனைவி காயமடைந்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி செண்பகதேவி. இருவரும் மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் மாடு குறுக்கே வந்தது. அப்போது இருசக்கர வாகனம் மாடு மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இளையான்குடி தகியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுகாசினி. இருவரும் காரில் கால் குளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரோட்டோ ரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இதில் சுகாசினி படுகாய மடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பகுதியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மலயகவுண்டம் பட்டியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். தாடியுடன் இருந்த அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக பரமத்திவேலூர் வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாக்யா திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
- அல் ரசீது நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பாக்யா (வயது 31). இவர் திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் சாய்னாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, கும்பகோணம் சுவாமி மலையை சேர்ந்த அல் ரசீது (20) என்பவர், தனது நண்பர் முகமது இஷாத் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார். இதில் பாக்கியா, அவரது மகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த வர்கள் 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாக்யா வின் சகோதரர் பாக்கியராஜ் காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
- பலத்த காயமடைந்த முகேஷ் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சோ்க்கப்பட்டார்.
தஞ்சாவூர்:
நாகை மாவட்டம், பாப்பாகோவில் சமத்துவ புரத்தைச் சோ்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகன் முகேஷ் (வயது 26).
நாகையில் உள்ள ஸ்டூடி யோவில் போட்டோ கிராபராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 4-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா் அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் திருப்பூண்டி காரைநகா் அருகே வந்தபோது குறுக்கே வந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முகேஷ் நாகை அரசு மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.
இங்கு நேற்று முகேஷ் மூளைச்சாவு அடைந்ததாக அவரது பெற்றோரிடம் மருத்து வா்கள் தெரிவித்தனா்.
மேலும், உடல் உறுப்பு தானம் பற்றியும் குடும்பத்தினரிடம் கலந்தாலோ சிக்கப்பட்டது.
இதற்கு பெற்றோா் ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து முகேஷின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.
பின்னா் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய ஒதுக்கீட்டின்படி, சிறுநீரகங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்தி ரிக்கும், கல்லீரல் பெரம்பலூரிலுள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன.
- இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.
- வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகேயுள்ள மூலனூர்- கிளாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 29) ,அவரது உறவினர் விவேக பிரியன் ( 17) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவில் -கரூர் ரோட்டில் புஷ்பகிரி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமரேசன் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த விவேகப்பிரியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
- சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் விளையாடி விளையாடினார்.
இந்த நிலையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான பல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்