search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"

    • இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.இதை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

    1. நியூசிலாந்து – 75%

    2. இந்தியா – 59.52%

    3. ஆஸ்திரேலியா – 55%

    4. வங்கதேசம் – 50%

    5. பாகிஸ்தான் – 36.66%

    6. மேற்கிந்திய அணி -33.33 %

    7. தென் ஆப்பிரிக்கா – 25.00%

    8. இங்கிலாந்து – 21.87%

    9. இலங்கை – 00.00

    • இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
    • ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தாகும்.

    இந்நிலையில், ஐதராபாத் டெஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற சமன் செய்தபோது இந்திய அணி 54.16 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது.

    ஐதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பின்தங்கியது. 2-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் பின்தங்கி சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய அணி 54.16 புள்ளியில் இருந்து 43.33 புள்ளிகளாகக் குறைந்து இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 55.00 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், வங்காளதேசம் 4-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 50 சதவீத புள்ளிகளுடன் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
    • இதனால் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் 3-0 என பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா 56.25 சதவீதத்துடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியா 54.16 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 50 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், வங்காளதேசம் 50 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
    • இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. மற்றொன்று டிரா ஆனது. இதன்மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.

    இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.

    முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்தியா மழையால் டிரா ஆனது. இதனால் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்துள்ளது.

    பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (54.17%) 3-வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5-வது இடத்திலும், உள்ளன.

    • சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள்.
    • இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன்.

    கோவை:

    அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது விவாதப் பொருளானது.

    இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான அஸ்வின் இது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    "நமது அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்களிப்பும் உள்ளது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அப்போது சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.

    கடந்த முறை எங்களது இங்கிலாந்து பயணத்தில் 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. அப்போது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என ஆடும் லெவனில் பவுலர்கள் இருந்தனர். அதுவே இந்த முறையும் அவர்களது எண்ணமாக இருந்திருக்கலாம். போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதினேன்.

    கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு விதமான அளவுகோலின் கீழ் நடத்துவது வழக்கம். சிலருக்கு 20 போட்டிகள், சிலருக்கு 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன். அதற்கு தயாராகவும் இருந்தேன். அது என் கையிலும் இல்லை. நான் யார்? என்னால் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே என் கையில் உள்ளது.

    சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள். ஆனால், அதில் நான் உறுதியாக இல்லை. நான் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருக்கலாம். இறுதிப் போட்டி முடிந்ததும் எனது கவனம் டிஎன்பிஎல் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    ஓவலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 9 அணிகள் பங்கேற்கின்றன.

    துபாய்:

    மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் 3 தொடர், வெளிநாட்டில் 3 தொடர் என்ற அடிப்படையில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. மொத்தம் 27 தொடர்களில் 68 டெஸ்டுகள் இதில் அடக்கம்.

    2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெறும் இந்த தொடரின் முடிவில் யார் அதிக புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.

    இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கான தொடரில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது. உள்ளூர் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அந்நிய மண்ணில் வெஸ்ட் இண்டீசை எளிதாக வென்றுவிடலாம். ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி வீழ்த்தினாலோ, டிரா செய்தாலோ அடுத்த முறையும் இந்தியா பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை எதிர்கொள்ளும்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளையும், அந்நிய மண்ணில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளை வெளிநாடுகளிலும் எதிர்கொள்ள இருக்கிறது.

    இலங்கை அணியை பொறுத்தவரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சொந்த மண்ணிலும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகளை வெளிநாட்டு மண்ணிலும் எதிர்கொள்ள உள்ளது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று ரோகித் தெரிவித்து இருந்தார்.
    • ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தொடர் என்று வரும்போது அதில் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாம்பியன்ஷிப் என்றால் அதில் ஒரே ஒரு இறுதி ஆட்டம் இருந்தால் தான் சரியாக இருக்கும்.

    ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது. இந்த ஒரு வெற்றிக்காக பல்வேறு நாடுகளில் சென்று டெஸ்ட் ஆட்டங்களில் வெல்ல வேண்டியிருந்தது. சில ஆட்டங்களில் தோற்று இருந்தாலும் அதில் இருந்து மீண்டும் வந்து இருக்கிறோம்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

    • நடுவருக்கு எதிராக சுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
    • 3-வது நடுவர் முடிவுக்கு முன்னால் வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவர் முடிவுக்கு முன்னால் வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். சுப்மன் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உலகின் சிறந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது சரியான கேட்ச் என்று நினைத்தேன். கிரீன் கேட்ச் பிடித்ததும் அதிகமாக கத்துவார். நாங்கள் வீரர்கள் மட்டுமே. நாங்கள் களத்தில் இருக்கிறோம். எங்களால் அதை சரியாக கூறமுடியாது. எனவே நாங்கள் அதை நடுவரின் கைகளில் விட்டுவிட்டோம். அவர் உலகின் சிறந்த நடுவர் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து. அது அவுட்டா இல்லையா என்பது அவருக்கு தெரியும்.

    அவருக்கு விதி புத்தகங்கள் தெரியும். அவர் ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்த்திருப்பார். 100 மீட்டர் தொலைவில் இருந்து பெரிய திரையில் பார்க்கும் உணர்ச்சிமிக்க ரசிகர்களை விட அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் கூறினார்.

    • 2-வது இன்னிங்சில் நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்தினார்
    • இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் ரன்கள் குவிக்க தவறினர்

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அஸ்வினை தேர்வு செய்யாததும், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

    இதனைத் தொடர்ந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வர, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தோல்வி குறித்தும், அஸ்வினை நீக்கியது குறித்தும் சச்சின் தெண்டுல்கர் கூறியிருப்பதாவது:-

    அஸ்வின் போன்ற திறமையான ஆஃப் ஸ்பின்னர்கள், சாதகமில்லாத ஆடுகளங்களில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவரின் திறமையை பயன்படுத்த முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    போட்டியின் முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று, பெரிய ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்களால் அது இயலவில்லை.

    திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், 'டர்னிங் ட்ராக்' எனப்படும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை மட்டுமே நம்பி இருப்பதில்லை.

    அவர்கள் காற்றின் சுழற்சியையும், பவுன்சரையும் சாமர்த்தியமாக பயன்படுத்தி வெற்றி தேடித்தருவார்கள். இந்த கருத்தை ஏற்கனவே ஆட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பாகவே நான் வெளிப்படுத்தியிருந்தேன். டாப் ஆர்டர் எட்டு பேட்ஸ்மேன்களில் 5 இடது கை பேட்ஸ்மேன்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியதை நாம் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்த நிலையில், எதிரணியில் 4 இடது கை பேட்ஸ்மேன் இருப்பது தெரிந்தும், வானிலையின் இருள்சூழ்ந்த தோற்றத்தினால் நான்காவதாக ஒரு பிரத்யேக வேகப்பந்து வீச்சாளருடன் போட்டிக்கு சென்றதாக பயிற்சியாளரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சாதனையாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.

    ஆனால், டெஸ்ட் போட்டியின் 5 நாட்களுமே, பிரகாசமான சூரிய ஒளி வீச முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இதன் மூலம் இந்திய வெற்றிக்கான கதவுகள் முதல் நாளே மூடப்பட்ட சூழ்நிலை உருவானது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் 13 ஆட்டங்களில் 61 விக்கெட்கள் எடுத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

    • கில் 2-வது இன்னிங்சில் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
    • இந்தியா 234 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்தார். அப்போது அவர் பந்தை கீழே வைத்ததுபோல் தெரிந்தது.

    இதனால் மைதான நடுவர்கள் 3-வது நடுவரின் உதவியை நாடினர். அவர் கேமராவின் ஒருசில கோணங்களை மட்டுமே ஆராய்ந்து விக்கெட் கொடுத்துவிட்டார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கேமரூன் க்ரீன் மோசடி செய்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    முக்கியமான போட்டியில் ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்து அதன்பின் அவுட் கொடுக்க வேண்டும். ஆனால், நடுவர் உடனடியாக அவுட் கொடுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஐ.பி.எல். தொடரில் 10-க்கும் மேற்பட்ட கேமரா கோணங்கள் உள்ளன என ஐ.சி.சி.-யை மறைமுகமாக சாடினார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ''போதுமான அளவிற்கு நடுவர்கள் பல கோணங்களில் சரிபார்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக உணர்கிறேன். 3-வது நடுவம் இன்னும் அதிகமாக ரீபிளே செய்து கேட்ச் எவ்வாறு பிடிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டும்.

    மூன்று அல்லது நான்கு முறை அவர் ரீபிளே செய்து பார்த்திருந்தால், கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பந்து தரையில் பட்டதா? என்பது குறித்து திருப்பதி அடையும் வகையில் முடிவு எடுத்திருக்க முடியும்.

    அது அவுட்டா? இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. எல்லாவற்றிலும் சரியான மற்றும் தெளிவான வகையில் இருக்க வேண்டியது அவசியம். கேட்ச் மட்டுமல்ல. அனைத்து விசயத்திற்கும் இது அடங்கும். விரைவாக 3-வது நடுவர் விக்கெட் வழங்கியது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    முக்கியமான போட்டி என்பதால் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு 100 சதவீதம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கேமரா கோணங்கள் காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கேமரா கோணங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் நாங்கள் அதிகப்படியான கேமரா கோணங்களை காட்டியுள்ளோம். 10 விதமான கேமரா கோணங்கள் ஐ.பி.எல். தொடரில் காண்பிக்கப்பட்டது.

    மிகப்பெரிய தொடரில் ஏன் இதுபோன்று காண்பிக்கவில்லை, அல்ட்ரா மோசன் மற்றும் குறிப்பிட்ட இடத்தை பெரிதாக காட்டும் ஜூம் போன்றவை குறித்து ஏமாற்றம் அடைகிறேன்'' என்றார்.

    • பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம்.
    • போலண்ட் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றார் பாட் கம்மின்ஸ்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

    டிராவிஸ் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் பதற்றமான காலைக்குப் பிறகு எங்களுக்கு ஆறுதல் அளித்தது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஷசுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹெட் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை மீண்டும் கொடுக்கிறார்.

    முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை விட்டுவிட்டோம். அதை எண்ணும்போது நாங்கள் நன்றாக விளையாடினோம்.

    பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். போலண்ட் - அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகத் தொடர்கிறார்.

    ஸ்மித், போலண்ட், ஹெட் உள்பட ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக விளையாடினார்கள், சில வருடங்கள் இதை ரசிப்போம், நாங்கள் எங்கள் கவனத்தை (ஆஷஸ் பக்கம்) திருப்புவோம்.

    இது எங்களுக்கு பிடித்தமான பார்மட், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள். வெற்றிபெறும் போது நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். நாங்கள் விளையாடுவதை விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    ×