search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public shock"

    • புதிதாக கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • கலெக்டரின் உத்தரவுப்படி உடனடியாக சீரமைக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பேருந்து நிலையம் அருகே தரைப்பா லம் இருந்தது. அந்த பாலமானது சேதம் அடைந்த காரணத்தினாலும், பாலத்திற்கு அடி யில் செல்லக்கூடிய கழிவுநீர் தேங்கி நின்றதன் காரணமாகவும், போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குறுகலாக இருந்ததன் காரணமாகவும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

    இந்த நிலையில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கி கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு பாலப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து. பாலத்தின் இருபுறமும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டு பேருந்துகள், ஆட்டோக்கள், வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் வந்து செல் கின்றன.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலம் கட்டப் பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது மீண் டும் பள்ளம் விழுந்துள்ள தால் தரமற்ற முறையிலேயே பாலம் கட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு முன்பு பாலத்திற்கு கம்பிகள் கட் டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். அந்த சமயம் எதிர்பா ராத விதமாக பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவச மாக பணியாளர்கள் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    பாலத்தில் பள்ளம் விழுந் துள்ளதன் காரணமாக பேருந்துகள் கூமாபட்டி பேருந்து நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் தற் போது இரண்டாவது முறை யாக இந்த விபத்து ஏற்பட் டுள்ளதால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன், உடனடியாக பள் ளத்தை சரி செய்வதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளம் சரி செய் யப்பட்டது.

    • பலத்த காயம் அடைந்த ராஜா உயிருக்கு போராடினார்.
    • சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜா. 39 வயதான இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    எழில்நகர் பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக அப்பகுதியை சேர்ந்த ரவுடி கோபி மற்றும் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் ரவுடி கோபியும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ராஜாவிடம் வீண் தகராறு செய்து வம்பிழுத்துள்ளனர். அப்போது அவர்கள் கத்தியால் ராஜாவை தலையில் வெட்டினார்கள். இதில் அலறி துடித்த அவரை கோபியும் அவனது ஆட்களும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜா உயிருக்கு போராடினார்.

    இதையடுத்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பொதுமக்கள் பிடிக்கச் சென்ற போது ரவுடி கோபி தப்ப முயன்றான். அப்போது கால் இடறி கீழே விழுந்த கோபியின் தலையில் அடிபட்டது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோபியின் கூட்டாளிகளான சத்யா, மகபூப், பாஷா, செல்வம் ஆகிய 4 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

    அவர்களை பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினையும் செய்யாமல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அப்பாவி வாலிபரான ராஜா ரவுடி கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார்.
    • விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு நகரை சேர்ந்தவர் சோபித் குமார்( 62). இவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் பணியாற்றிய காலத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததால் ஆடிட் செய்வதற்காக இவரது சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனர் அய்யப்பனை அடிக்கடி சந்தித்து ஓய்வூதிய பலன்கள் வழங்குமாறு கேட்டு வந்தார். வழக்கம் போல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் இயக்குனர் அய்யப்பனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது அவர் வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார். தற்காலிகமாக ரூ.10 ஆயிரம் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இதனால் விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றிய தீயுடன் அங்குமிங்கும் ஓடி கார் பார்க்கிங் அருகே மயங்கி விந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜிப்மரில் அனுமதித்தனர். சோபித் குமாருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தற்கொலைக்கு முயன்ற சோபித்குமாருக்கு மாலதி (59) என்ற மனைவியும், மகன் குழல்மாலன், ப்ரித்தி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தீக்குளிக்கும் முன்பு மனைவியிடம் செல்போனில் பேசி தன்னை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.

    நேற்று முன்தினம் புதுவை காலாப்பட்டு போலீஸ்நிலையத்தில் கலைச் செல்வி என்ற பெண் தீக்குளித்து இறந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் அரசு அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் தீக்குளித்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது.
    • கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி உள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள் இரும்புலியூர், கங்கை தெருவில் அமைந்து உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் இறக்கிவைத்து சிறிய வாகனங்களில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    வழக்கம்போல் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த மற்ற கியாஸ் சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டரை தரையில் இறக்கி வைத்த போது வெயிலின் தாக்கத்தில் அது வெடித்ததாக ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கியாஸ்சிலிண்டரை கொண்டு செல்லும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் பகுதியில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மின் ஊழியர் யுவராஜ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாரத விதமாக திடீரென்று மின் ஊழியர் யுவராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம்.
    • நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அங்கு வாரம் ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் பொருத்தியுள்ள பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை பிடித்தனர். இந்த நிலையில், குடிநீரில் புழுக்கள் நிறைந்தும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் 7 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியாது. குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம். இப்போது குடிநீருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் குரங்குகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அவினாசி:

    அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சரவணகுமார் என்பவரது வீட்டிற்குள் 2 குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து பெண்கள் ஒடிச் சென்று பார்த்த போது அங்கு 2 குரங்குகள் இருந்தன. குரங்குகளை விரட்ட முயன்ற போது முறைத்த படி அவர்கள் மீது பாய முயற்சித்தது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி விட்டனர். அந்தக் குரங்குகள் வீட்டில் இருந்த மாம்பழம் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த வீட்டிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது பொதுமக்கள் அவைகளை விரட்டி அடித்தனர். 

    இதையடுத்து அந்த குரங்குகள் ரோட்டில் நடந்து செல்பவர்களின் பின்னால் சென்று அவர்கள் கையில் வைத்திருந்த பையை பிடுங்கியது. இதனால் அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் குரங்குகளை விரட்டிய பின்னர் அந்த குரங்குகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆட்டையாம்பாளையம் பகுதியில் 2 குரங்குகள் வீடுகளில் புகுந்து பாத்திரங்கள மற்றும் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் வந்து குரங்குகளை பிடித்து காட்டில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    எஸ்.கைகாட்டியில் கூண்டில் சிக்காத கரடிகள் குடியிருப்புக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த பகுதியில் உள்ள பேக்கரி கதவை 3 முறை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தின்றுவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

    வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த கரடிகள் குடியிருப்புக்குள் நடமாடி வந்தன. கடந்த வாரம் கக்குளா மாரியம்மன் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

    இதையடுத்து கரடிகளை பிடிக்க கோவில் வளாகத்தில் வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி கூண்டு வைத்தனர். அதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. மற்ற 2 கரடிகளும் கூண்டில் சிக்காமல் அந்த கூண்டை சுற்றி சுற்றி வந்ததுடன் ஆக்ரோஷத்துடன் சத்தம் போட்டன. இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து 2 கரடிகளை விரட்டினர். பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை அவலாஞ்சி வனப்பகுதியில் விட்டனர்.

    இந்த நிலையில் கூண்டில் சிக்காத மற்ற 2 கரடிகளும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் சண்டையிட்டு கொள்கின்றன. கரடிகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    எனவே வனத்துறையினர் விரைந்து அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    புளியங்குடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கோடை காலத்தில் யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் அடிக்கடி வரும்.  

    இந்நிலையில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புளியங்குடி மேற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு சிறுத்தை வந்ததற்கான கால் தடம் பதிந்துள்ளது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை வந்தது உறுதி செய்யப்பட்டது. 

     இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி நகருக்குள் காட்டெருமை தொடர்ந்து புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, தூதுர் மட்டம் உள்ளிட்ட இடங்களில் வன பகுதிகளில் ஏராளமான காட்டு எருமைகள் உள்ளன.

    இந்த காட்டு எருமைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன் காட்டு எருமை ஒன்று நகர் பகுதிக்குள் புகுந்தது. இதனை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு விரட்டி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஊட்டி கமர்சியல் சாலை, தினசரி சந்தை பகுதிக்குள் காட்டெருமை புகுந்து சுற்றி திரிந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    காட்டெருமை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    கடையம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடையம்:

    கடையம் மற்றும் ஆழ்வார் குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. கடையம், காளத்திமடம், மைலப்புரம், கட்டேறிபட்டி, புலவனூர், நரையப்பபுரம், அங்கப்புரம், பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று செயின்பறிப்பு, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீடு புகுந்து நகைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று உள்ளன.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொட்டல்புதூரில் அப்துல்ரசாக் என்பவரின் வீட்டில் இருந்து 8 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதுபோல அதன் அருகில் 2 வீடுகளில் நகையை திருட மர்மநபர்கள் முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். 

    எனவே போலீஸ் அதிகாரிகள் விரைந்து இப்பகுதியில் நடந்துவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கே.கே.நகர்:

    திருச்சி மாநகர பகுதியில் முக்கியமான பகுதியான கே.கே.நகரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள், காவலர் குடியிருப்புகள் உள்ளன.  இந்த பகுதி அய்யப்பன் நகர் முதல் இச்சிகாமாலைபட்டி வரை மிக அகன்ற பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் 2  காவல் உதவி நிலையங்கள் மட்டுமே உள்ளது. அங்கு போதுமான காவலர்கள் இல்லாத காரணத்தினால் அய்யப்பன் நகர், எல். ஐ .சி .காலனி, கே.கே.நகர் போன்ற பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

    நேற்று மாலை அய்யப்பன் நகர், ஆனந்த நகர்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அதே பகுதி ராமலிங்கர் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற பெல் ஊழியரான ரவிச்சந்திரனின் மனைவி வளர்மதி நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால்  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் , வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்து சென்றனர்.
     
    இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவுபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது அப்பகுதி பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. எனவே கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×