search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    கூமாப்பட்டியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ஒருசில நாட்களில் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.

    புதிதாக கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி

    • புதிதாக கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • கலெக்டரின் உத்தரவுப்படி உடனடியாக சீரமைக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பேருந்து நிலையம் அருகே தரைப்பா லம் இருந்தது. அந்த பாலமானது சேதம் அடைந்த காரணத்தினாலும், பாலத்திற்கு அடி யில் செல்லக்கூடிய கழிவுநீர் தேங்கி நின்றதன் காரணமாகவும், போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குறுகலாக இருந்ததன் காரணமாகவும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

    இந்த நிலையில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கி கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு பாலப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து. பாலத்தின் இருபுறமும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டு பேருந்துகள், ஆட்டோக்கள், வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் வந்து செல் கின்றன.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலம் கட்டப் பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது மீண் டும் பள்ளம் விழுந்துள்ள தால் தரமற்ற முறையிலேயே பாலம் கட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு முன்பு பாலத்திற்கு கம்பிகள் கட் டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். அந்த சமயம் எதிர்பா ராத விதமாக பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவச மாக பணியாளர்கள் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    பாலத்தில் பள்ளம் விழுந் துள்ளதன் காரணமாக பேருந்துகள் கூமாபட்டி பேருந்து நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் தற் போது இரண்டாவது முறை யாக இந்த விபத்து ஏற்பட் டுள்ளதால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன், உடனடியாக பள் ளத்தை சரி செய்வதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளம் சரி செய் யப்பட்டது.

    Next Story
    ×