search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    கடையம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    கடையம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடையம்:

    கடையம் மற்றும் ஆழ்வார் குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. கடையம், காளத்திமடம், மைலப்புரம், கட்டேறிபட்டி, புலவனூர், நரையப்பபுரம், அங்கப்புரம், பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று செயின்பறிப்பு, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீடு புகுந்து நகைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று உள்ளன.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொட்டல்புதூரில் அப்துல்ரசாக் என்பவரின் வீட்டில் இருந்து 8 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதுபோல அதன் அருகில் 2 வீடுகளில் நகையை திருட மர்மநபர்கள் முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். 

    எனவே போலீஸ் அதிகாரிகள் விரைந்து இப்பகுதியில் நடந்துவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×