search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசியில் குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்
    X

    அவினாசியில் குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்

    அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் குரங்குகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அவினாசி:

    அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சரவணகுமார் என்பவரது வீட்டிற்குள் 2 குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து பெண்கள் ஒடிச் சென்று பார்த்த போது அங்கு 2 குரங்குகள் இருந்தன. குரங்குகளை விரட்ட முயன்ற போது முறைத்த படி அவர்கள் மீது பாய முயற்சித்தது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி விட்டனர். அந்தக் குரங்குகள் வீட்டில் இருந்த மாம்பழம் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த வீட்டிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது பொதுமக்கள் அவைகளை விரட்டி அடித்தனர். 

    இதையடுத்து அந்த குரங்குகள் ரோட்டில் நடந்து செல்பவர்களின் பின்னால் சென்று அவர்கள் கையில் வைத்திருந்த பையை பிடுங்கியது. இதனால் அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் குரங்குகளை விரட்டிய பின்னர் அந்த குரங்குகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆட்டையாம்பாளையம் பகுதியில் 2 குரங்குகள் வீடுகளில் புகுந்து பாத்திரங்கள மற்றும் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் வந்து குரங்குகளை பிடித்து காட்டில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×