search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian PM Narendra Modi"

    • ரூ.2.5 லட்சம் கோடி அதானி குழுமம் வருவாய் ஈட்டி வருகிறது
    • பொதுமக்கள் பாக்கெட்டிலிருந்து பணம் கையாடப்பட்டு வருகிறது

    குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த கவுதம் அதானி (61).

    உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.

    இந்நிலையில் அதானி குழுமம், 2019லிருந்து 2021 வரை உள்ள காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விலைக்கு இறக்குமதி செய்து மறைமுக மோசடியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவில் பயனர்களுக்கான மின்சார கட்டணம் உயர்ந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதற்கிடையே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 25 கட்சிகளை கொண்ட எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒரு அங்கமான மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன் கவுதம் அதானியை சந்தித்து பேசியிருந்தார்.

    இச்சந்திப்பு குறித்து இந்திய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் புது டெல்லியில், "அதானி சந்திப்பு பற்றி ஏன் நீங்கள் சரத் பவாரிடம் கேட்கவில்லை?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது:

    நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை பாதுகாக்கவும் இல்லை. ஆனால், நரேந்திர மோடிதான் இந்திய பிரதமர். அவர்தான் அதானியை பாதுகாத்து வருகிறார். எனவே நாங்கள் அவரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இம்முறை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதானி பாக்கெட்டுக்கு பணம் போகிறது. உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் எதுவும் நடைபெறவில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • இந்த மெட்ரோ வழித்தடத்தில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது
    • ஆரஞ்சு லைன் வழித்தட தூரம் 24.9 என நீட்டிக்கப்பட்டுள்ளது

    இந்திய தலைநகர் டெல்லியில், புது டெல்லி மெட்ரோ ரெயில் நிலையம் தொடங்கி துவாரகா செக்டர் 21 பகுதியின் ரெயில் நிலையம் வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது. "டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன்" என அழைக்கப்படும் இந்த வழித்தடத்தின் தூரம், 22.7 கிலோமீட்டர் ஆகும். இந்த மெட்ரோ வழித்தடத்தில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்து மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் இன்று "யஷோபூமி" என பெயரிடப்பட்ட உலகிலேயே மிக பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மையத்திற்கு அருகில் செக்டர் 25 பகுதிக்கான ரெயில் நிலையம் அமைத்து செக்டர் 21 ரெயில் சேவையை 2.2 கிலோமீட்டர் நீட்டிக்கும் பணிகள் நடந்து வந்தது. அப்பணிகள் நிறைவடைந்து ரெயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருந்தது.

    இன்று காலை பிரதமர் மோடி இந்த நீட்டிக்கப்பட்ட வழித்தட சேவையை பயணிகள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆரஞ்சு லைன் வழித்தடம் எனப்படும் இந்த பயண தூரம் 24.9 எனும் அளவில் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தடத்தில் இன்று பிற்பகல் 03:00 மணி முதல் சேவைகள் தொடங்கும்.

    "யஷோபூமி துவாரகா செக்டர் 25 ரெயில் நிலையம்" என அழைக்கப்படும் இந்த ரெயில் நிலையத்தில் தொடங்கி 3 சுரங்க வழி நடைபாதகள் செல்கின்றன. அதில் 735 மீட்டர் கொண்ட சுரங்க நடைபாதை நேராக யஷோபூமி மையத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக பிரதமர் மோடி இந்த புது ரெயில் நிலைய சேவையை தொடங்கி வைக்க டெல்லி தவுலா குவான் ரெயில் நிலையத்தில் மெட்ரோவில் ஏறி பயணம் செய்தார். அதில் பயணிகளுடன் அவர் உரையாடினார். அவர் உடன் பயணம் செய்யப்போவதை எதிர்பாராத பயணிகள் ஆச்சரியத்தில் மிகவும் மகிழ்ந்தனர். தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



    ×