search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu"

    • புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு குழு ஒன்றை அமைக்கவும், சங்கத்திற்கான நிரந்தர வங்கி கணக்கு தொடங்கவும், கடந்த ஆண்டு புளியங்குடியில் மரக்கடை தீ எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இழப்பீடு வழங்க நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடவும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    • புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமையை மீட்க நடைபெற்றது.
    • சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமையை மீட்க நடைபெற்ற பிரச்சாரத்தின் போது இந்து முன்னணியின் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்தும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் என்ற சிவா தலைமை தாங்கினார்.

    இளஞ்செழியன் வரவேற்புரையாற்றினர். செந்தில் முருகன், நாகராஜ், மணிவீரப்பன், தியாகராஜன், செல்வம், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவண்ணன், சிவமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் குமார் நன்றி கூறினர்.

    • விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது.
    • இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது. நேற்று 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது.

    விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட 15 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிந்ததும் அந்தந்த கோவில்களுக்கு பெருமாள்கள் சென்றடைந்தன.

    விழாவில் நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

    • 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.
    • இந்து ஒற்றுமை, பாரத நாட்டின்பழம்பெருமை ஆகியவை குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணிகள் சார்பில் ஒன்றிய பகுதியில்25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலர் கேசவன் தலைமை தாங்கி பண்பாட்டு வகுப்பில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பண்பாட்டு வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், இந்து ஒற்றுமை, பாரத நாட்டின்பழம்பெருமை ஆகியவை குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, ஒன்றிய செயலர் ஜெயசித்ரா, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ரதீஸ்வரி, மல்லிகா, சக்திக்கனி, செல்வலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்து அன்னையர் முன்னணி கிளை பொறு ப்பாளர்கள் செல்வகுமாரி, சிங்காரக்கனி, கலைராணி, ரதிதேவி, பரிதா, வனசுந்தரி, மாசானபேச்சி, வினிதா, பத்மா, மணிகண்டேஸ்வரி, தமிழ்செல்வி, காயாமொழி இந்து முன்னணி தலைவர் திருமால், பாஸ்கரன், அபிராஜன், அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கமல்ஹாசன் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

    இந்து மதம் ஆண்டாண்டு பழமையானது- முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.

    இந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது.


    கமல்ஹாசன் கூறுவது போல இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது அல்ல, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கமல் “பொறுக்குவதற்காகவே” இந்து தீவிரவாதி என பேசியுள்ளார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.

    அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

    எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

    திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.

    பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..

    கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    நமது பாரம்பரியத்தை சிதைப்பதற்காக இந்து மதத்தின் நிறமான காவியில் பயங்கரவாத கரையை காங்கிரஸ் கட்சியினர் விதைத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், கன்ட்வா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    ‘நாங்கள் செய்து முடித்துள்ள நல்ல காரியங்களை கூறி இந்த தேர்தலில் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறோம். ஆனால், காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியினரும் தவறான தகவல்கள் மற்றும் தரமற்ற விமர்சனங்களுடன் எங்களை எதிர்கொள்கின்றனர்.

    1984-ம் ஆண்டு நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வெறியாட்டங்களை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது நிஜமுகத்தை வெளிப்படுத்தி விட்டது.

    இதே ‘நடந்தது, நடந்து விட்டது’ மனப்பான்மையில்தான் இதே மாநிலத்தில் முன்னர் நடந்த போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான குற்றவாளி (வார்ரன் ஆண்டர்சன்) தப்பியோடவும்
    காங்கிரசார் துணை புரிந்தனர்.

    நமது இந்து மதத்தின் பாரம்பரியத்தை இழிவுப்படுத்துவதற்காக ‘இந்து பயங்கரவாதம்’ என்ற சதி திட்டத்தை காங்கிரஸ் அப்போது உருவாக்கியது. ஓட்டுவங்கி அரசியல் என்னும் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுடன் இணைந்திருக்கும் மெகா கூட்டணிகளும் எத்தனை பூணூல்களை காட்டினாலும் இந்து மதத்தின் நிறமான காவியில் பயங்கரவாத கரையை படியவிட்ட பாவத்தில் இருந்து அவர்கள் ஒருநாளும் தப்பிக்கவே முடியாது’ என இந்த கூட்டத்தில் பேசிய மோடி குறிப்பிட்டார்.
    அரியலூர் அருகே பொன்பரப்பி கலவரம் பற்றிய அறிக்கையில் பாமக மற்றும் இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ponparappiissue #thirumavalavan #pmk

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் தினத்தன்று தலித்துகள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், ஜாதி வன்கொடுமைகள் சம்பவத்தை பல்வேறு தரப்பினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    அதுமட்டுமல்ல பேராசிரியர் லட்சுமணன், பேராசிரியர் கதிரவன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினரும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    அதில் பா.ம.க.வும், இந்து முன்னணியும் சேர்ந்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியது என்பதை உறுதி படுத்தி உள்ளது.

    கலவரத்துக்கு யார் காரணம் என்பதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். தேர்தலில் சிதம்பரம் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பா.ம.க.வினர் திட்டமிட்டனர்.

    எங்கெங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கெல்லாம் வாக்கு சாவடிகளை கைப்பற்றி பா.ம.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்களின் முயற்சி பலிக்க வில்லை.

    பொன்பரப்பியில் காலை 8 மணிக்கே ஓட்டு போட வந்த தலித்துகளை அச்சுறுத்தி உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி அருகே பானைகளை போட்டு உடைத்துள்ளனர். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தலித் குடியிருப்பு அருகே விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தின் அருகில் இருந்த பானைகளையும் விட்டு வைக்காமல் உடைத்துள்ளனர்.

    இதை தட்டிக் கேட்ட குணசீலன் என்பவரை பா.ம.க. வினரும், இந்து முன்னணியினரும் தாக்கிய தோடு சேரிக்குள் புகுந்தும் பானை சின்னத்துக்கா ஓட்டு போட்டாய் என கேட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அபாண்டமாக ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். போலீசாரும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வில்லை.

    ஆனால் நான் அந்த கிராமத்துக்கு வரக்கூடாது என்று வாய்வழி உத்தரவு போட்டுள்ளனர். போலீசார் ஒருதலைபட்சமாக செயல் படுகின்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே குச்சிப்பாளையத்திலும் விடுதலை சிறுத்தைக்கு சம்பந்தம் இல்லாத சம்பவத்தை தொடர்பு படுத்தி எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

    என் படமும், டாக்டர் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்ட இரு சக்கர வண்டியில் சென்ற தலித் இளைஞர்களை வழி மறித்து பா.ம.க.வினர் தாக்கி உள்ளனர். வண்டியையும் உடைத்துள்ளனர். தட்டிக் கேட்டவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

    ஆனால் தலித் தாக்கியதாக எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகின்றார்.


    இப்போது விருத்தாசலம் அருகே திலகவதி என்ற பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.

    இந்த கொலைக்கும் விடுதலை சிறுத்தைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பெண்ணுக்கும் ‘ஆகாஷ்’ என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், அதனால் அந்த நபருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த வாலிபர்தான் குற்றவாளியா? என உறுதிப்படுத்தாத நிலையில் வழக்கம் போல் ராமதாஸ் பழி சுமத்தி பேசுகிறார். அரசியல் ஆதாயம் பெற குறியாக உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எல்லாவற்றிலும் தொடர்புபடுத்துவதையும் வம்புக்கு இழுப்பதையும் டாக்டர் ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    திலகவதி கொலையில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலத்தில் 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponparappiissue #thirumavalavan #pmk

    உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா திருவிழாவையொட்டி மகர சங்கராந்தி தினமான இன்று லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பரவசமடைந்தனர். #Hinduseers #SangamGhat #holydip #KumbhMela
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா  திருவிழாவை நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான  பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர்.

    வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும் இந்த கும்பமேளா காலத்தில் 12 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேசம் மாநில அரசை சேர்ந்த 28 துறை அதிகாரிகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகளும் பல மாதங்களாக திட்டமிட்டும் கண்காணித்தும் செய்து வந்தனர்.

    கும்பமேளாவுக்காக திரளும் பக்தர்களுக்காக 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளுடனும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கங்கையாற்றங்கரையில் ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது. 

    32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த தற்காலிக நகரத்தில் பல பெரிய நகரங்களில் உள்ளதுபோல் மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், கடை தெருக்கள் போன்றவை இங்கு அமைக்கப்பட்டன.

    50 நாள் விழாவாக நடக்கும் இந்த அர்த கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 4200 கோடி ரூபாய் செலவிடுகிறது. நாட்டில் உள்ள 13 சாதுக்கள் அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் இவ்விழாவில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் இங்கு வந்து சேர்ந்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஜீவநதிகள் சங்கமமாகும் 'திரிவேணி சங்கமம்' பகுதியில் புனித நீராடி (ஷாஹி ஸ்நானம்) பக்தி பரவசம் அடைந்தனர். #Hinduseers #SangamGhat #holydip #KumbhMela
    ×